வார ராசிப்பலன்-- மே 19 முதல் 25 வரை
வைகாசி 5 முதல் 11 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில்
தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு,
இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
சுக்கி
|
சூரிய புதன்
|
செவ் ராகு
|
|
திருக்கணித கிரக நிலை
|
|
|
|
|
||
சனி(வ) கேது
|
சந்தி
குரு(வ)
|
|
|
கிரக மாற்றம் இல்லை
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
விருச்சிகம் 18-05-2019
இரவு 08.30 மணி முதல் 21-05-2019 அதிகாலை 02.30 மணி வரை.
தனுசு 21-05-2019 அதிகாலை 02.30 மணி முதல் 23-05-2019
பகல் 11.45 மணி வரை.
மகரம் 23-05-2019 பகல் 11.45 மணி முதல் 25-05-2019
இரவு 11.44 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
24.05.2019 வைகாசி 10 ஆம் தேதி
வெள்ளிக்கிழமை சஷ்டி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல்
07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம்.தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னிடத்தில் அன்பும் பாசமும்
கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு
உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன்
சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும்
சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக
இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். கணவன்-
மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி
அளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
தேவையற்றப் பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்க கூடும் என்பதால் அவற்றை
தவிர்ப்பது உத்தமம். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும்
கிடைக்கப் பெறுவதால் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். பூர்வீக
சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு
கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள்.
கடன் சற்றே குறையும். சிவ வழிபாடும், குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தி வழிபாடும்
செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 23, 24, 25.
சந்திராஷ்டமம் - 18-05-2019 இரவு 08.30 மணி முதல் 21-05-2019 அதிகாலை 02.30 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய
சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய்,
ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது
நல்லது. பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள்
கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால்
பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து
நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும்
மருத்துவச் செலவுகள் உண்டாகாது. அன்றடாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.
கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம்
வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில், வியாபார ரீதியாக ஓரளவு
முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து
கொண்டால் எதிர்பார்க்கும் லாபங்களை அடையலாம். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்
கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன்
பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து
விடுவீர்கள். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 19, 20.
சந்திராஷ்டமம் - 21-05-2019 அதிகாலை 02.30 மணி முதல் 23-05-2019 பகல் 11.45 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும்,
கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கை
கிடைத்து இருக்கும் சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு
பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் முடிந்தவரை பயணங்களை
தவிர்ப்பது நல்லது. சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுப
காரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்குப்பின் அனுகூலப் பலன் உண்டாகும்.
குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். ஜென்ம ராசியில் செவ்வாய்,
ராகு, 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு
செய்யாமல் இருப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும்
உயர்வுகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு
கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றி பெற
முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற
முடியும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு
செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21, 22.
சந்திராஷ்டமம் - 23-05-2019 பகல் 11.45 மணி முதல் 25-05-2019 இரவு 11.44 மணி வரை.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
பேச்சில் கடுமை இருந்தாலும்
அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல்
கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன்
சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடையும் யோகம், நல்ல
வாய்ப்புகள் உங்களை தேடி வரும் அமைப்பு இவ்வாரத்தில் உண்டு. பொருளாதார நிலை
திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும்
உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய
விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு
ஏற்ற வேலை கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்று குறையும். உடல்
ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும்
மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள்.
புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில்,
வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் சிறப்பாக
இருக்கும். செவ்வாய்க்கிழமை துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி
வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23, 24.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
எந்தவொரு விஷயத்திலும்
சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது
காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள்
ராசியதிபதி சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ல்
செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் அனுகூலங்களை தரும் அமைப்பாகும்.
எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதோடு, எந்த எதிர்ப்புகளையும்
சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடை, ஆபரணங்கள் வாங்கும்
வாய்ப்பும் அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய
தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகளும், திறமைகளுக்கு ஏற்ற
பாராட்டுதல்களும் கிடைக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு
கூட்டாளிகள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். சங்கடஹர சதுர்த்தியன்று
விநாயகப் பெருமானை வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 23, 24, 25.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ
பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும்
விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் பாக்கிய ஸ்தானமான 9-ல்
சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் தொழில்
வியாபாரத்தில் அனுகூலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல்
போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் நீங்கி
முன்னேற்றமான நிலை உண்டாகும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில்
கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக
இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக
அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும்
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மங்களரமான சுபகாரியங்கள்
கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக
செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண்
பிரச்சினைகளை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சனி
பகவானுக்கு நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 19, 20.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
தம்முடைய சொந்த பொருட்களையும்
பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி
நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல்
சனி, கேது சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். சூரியன் 8-ல்
இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில்
ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து
கொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடையலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்களால் வீண்
பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தாராள தனவரவுகளால் உங்களுடைய நெருக்கடிகள்
ஓரளவிற்கு குறையும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில்
போட்டிகள் விலகி புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும்
அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம்
சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்
பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும்
செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எவ்வளவு தான் கற்று
அறிந்திருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும்
பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன் 8-ல்
செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொருளாதார
ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை
குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ள
அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி வீண் மருத்துவ செலவுகள்
ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி
வந்து சேரும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்
என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன்
பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பூமி, மனை வாங்கும்
விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய
தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சஷ்டியன்று விரதமிருந்து முருக பெருமானை
வணங்கி வழிபட்டால் சுபகாரியங்கள் நடைபெறும்.
வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 24, 25.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
பயந்த சுபாவம் கொண்டவராக
இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல்
உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல்
சுக்கிரன் சஞ்சரிப்பதும் 6-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால்
எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்
என்றாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில்
கவனமாக இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் சனி, 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால்
கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள், குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள்
உண்டாகும். பேச்சில் கவனமாக இருப்பது, விட்டு கொடுத்து செல்வது, உற்றார்
உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்
தோன்றும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள்
சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம்
செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும்.
தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில்
சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே
இருக்கும். சனி பகவானையும், முருக பெருமானையும் வணங்கி வழிபட்டால் நன்மைகள் பல
உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -- 21, 22, 23.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை
உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உங்களது
மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில்
சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று
கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய
முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி
முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும். பணம் சம்பந்தமான
கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய
போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். எடுக்கும்
முயற்சிகளில் தடையின்றி வெற்றியினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில்
நிம்மதியான நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும்
சமாளித்து விடுவீர்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபாடு செய்வது
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 24, 25.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும்
பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட
கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன், லாப ஸ்தானத்தில் சனி, கேது
சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-
மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையப்
பெற்று சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில்
அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து
சென்றால் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக
இருக்கும் என்றாலும் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது
உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை
தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பைப்
பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான
முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலமான
பலன்கள் கிடைக்கும். சிவ வழிபாட்டையும், அம்பிகை வழிபாட்டையும் மேற்கொண்டால்
சிறப்பான பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21, 22.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல
எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் குரு
பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை
பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண
வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை
பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம்
ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட
செயல்படுவீர்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக
எதிர்ப்புகள் யாவும் விலகி தொழிலில் மேன்மை ஏற்படும். கூட்டாளிகளுடன் இருந்த
கருத்து வேறுபாடுகள் மறையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்புகரம்
நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள்
யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று
குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால்
குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23, 24, 25.
No comments:
Post a Comment