Wednesday, October 25, 2017

வார ராசிப்பலன்

வார ராசிப்பலன்
அக்டோபர்  29  முதல் நவம்பர் 4 வரை   2017
ஐப்பசி 12 முதல் 18  வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,







 
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது
சந்தி
 
சனி 


குரு
புதன் சூரிய
  செவ்
சுக்கி

கிரக மாற்றம்
02-11-2017 விருச்சிகத்தில் புதன் அதிகாலை 00.44 மணிக்கு
02-11-2017 துலா த்தில் சுக்கிரன் இரவு 11.58 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்              - 27-10-2017 காலை 06.32 மணி முதல் 29-10-2017 மாலை 05.56 மணி வரை.
கும்பம் - 29-10-2017 மாலை 05.56 மணி முதல் 01-11-2017 அதிகாலை 01.46 மணி வரை.
மீனம்                - 01-11-2017 அதிகாலை 01.46 மணி முதல் 03-11-2017 அதிகாலை 05.33 மணி வரை.
மேஷம் - 03-11-2017 அதிகாலை 05.33 மணி முதல் 05-11-2017 காலை 06.32 மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
30-10-2017 ஐப்பசி 13 ஆம் தேதி திங்கட்கிழமை தசமிதிதி சதய நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை

01-11-2017 ஐப்பசி 15 ஆம் தேதி புதன்கிழமை துவாதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

02-11-2017 ஐப்பசி 16 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

03-11-2017 ஐப்பசி 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு இருப்பதும் ராசியதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நற்பலன்களை தரும் அமைப்பாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடித்து உற்றார், உறவிர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் தாமதத்திற்கு பின் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளிமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து சென்றால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியிலும் ஆதாயங்கள் கிட்டும். ராகு காலங்களில் அம்மன் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 3, 4.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட  ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரகள் சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு குரு சனி சாதகமற்று இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு நற்பெயரை அடைவார்கள். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 30, 31, 1, 2.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, குருப்பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும் என்றாலும் 2-ல் ராகு 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. திருமண சுபகாரியங்களில் தாமதநிலை உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். மாணவர்கள் சற்று கடின முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -1, 2, 3, 4.

சந்திராஷ்டமம்- 27-10-2017 காலை 06.32 மணி முதல் 29-10-2017 மாலை 05.56 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 6-ல் சனி சஞ்சரிப்பது ஓரளவிற்கு சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் முன் கோபத்தை குறைத்துக் கொண்டு விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். சூரியன் 4-ல் இருப்பதால் வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்களுக்கு கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சூரியனின் அதிதேவதையான சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 3, 4.

சந்திராஷ்டமம்-  29-10-2017 மாலை 05.56 மணி முதல் 01-11-2017 அதிகாலை 01.46 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ராசியதிபதி சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு ஏற்றங்களை அடைவீர்கள்உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணவரவுகள் தேவைக்கு ஏற்ற படியிருக்கும் என்றாலும் 3-ல் குரு இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் என்பதால் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31.

சந்திராஷ்டமம்-  01-11-2017 அதிகாலை 01.46 மணி முதல் 03-11-2017 அதிகாலை 05.33 மணி வரை

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் குரு சேர்க்கைப் பெற்று 2-ல் சஞ்சரிப்பதும் 11-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், முன் கோபத்தை குறைத்துக் கொள்வதும் நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அவர்களால் சாதகப்பலனைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கல்விக்காக மாணவர்களுக்கு அரசு வழியில் உதவிகள் கிட்டும். செவ்வாய் கிழமை விரதமிருந்து முருக பெருமானை வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 30, 31, 1, 2.

சந்திராஷ்டமம்-  03-11-2017 அதிகாலை 05.33 மணி முதல் 05-11-2017 காலை 06.32 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்கள் அமைதியை குறைப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதபட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்வர்கள் மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதால் மகிழ்ச்சி, நிம்மதி போன்ற யாவும் சிறப்பாக அமையும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது பிரச்சினைகள் குறையும். தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக குறைவதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
முன்கோபம் உடையவராகவும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது லாப ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். இதுவரை இருந்த போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் படிப்படியாக விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சூரியன், குரு 12-ல் இருப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவதும், வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும், அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். சனி பகவானை வழிபாடு செய்தால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 29, 3, 4.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். 10-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். சிறப்பான பணவரவால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை நிலவினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் சில எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். துர்க்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 30, 31.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, மாத கோளான சூரியன் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபமுயற்சிகள் கைகூடி குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேரும். உங்கள் ராசிக்கு சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே காணப்படும் என்றாலும் லாபங்கள் தடைப்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் தடையின்றி கிடைக்கப்பெறும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்களுக்கு தேவையற்றப் பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தினமும் விநாயகரை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 29, 1, 2.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 9-ல் குரு புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும், அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும், ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். நல்ல நட்புகள் தேடி வரும். செண்பகப்பூவால் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதால் பாதிப்புகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் -30, 31, 3, 4.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன  ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 8-ல் சூரியன் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் நிம்மதி குறைவு உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் ஏற்படும். சுப முயற்சிகள் கூட நெருங்கியவர்களால் தடைப்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். எதிர்பாராத வகையில் கிடைக்கப் பெறும் உதவிகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் தான் வெற்றியினைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடு செய்வதும், காயத்திரி மந்திரம் படிப்பதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 29, 1, 2.

No comments: