Thursday, October 19, 2017

வார ராசிப்பலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 2017

வார ராசிப்பலன்
அக்டோபர்  22  முதல் 28 வரை   2017
ஐப்பசி 5 முதல் 11  வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





 
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது
 

சனி 
சந்தி
குரு சூரிய
புதன்
  செவ்
சுக்கி

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
விருச்சிகம்                22.-10-2017 காலை 05.50 மணி முதல் 24.-10-2017 மாலை 05.42  மணி வரை.
தனுசு               24.-10-2017 மாலை 05.42 மணி முதல் 27.-10-2017 காலை 06.32 மணி வரை.
மகரம்              27.-10-2017 காலை 06.32 மணி முதல் 29.-10-2017 மாலை 05.56 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
27.-10-2017 ஐப்பசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் குரு, புதன் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும். உற்றார், உறவினர்களும் அனுகூலமாக இருப்பார்கள். இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு அஷ்டம சனி முழுமையாக முடிவடைந்து இதுவரை இருந்த பிரச்சினைகள் யாவும் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 27, 28.

சந்திராஷ்டமம்                      22.-10-2017 காலை 05.50 மணி முதல் 24.-10-2017 மாலை 05.42  மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரனும் 2,5-க்கு அதிபதியான புதனும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 3-ல் ராகு, 6-ல் சூரியன் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். பணவரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது மூலம் அன்றாட பணிகளில் தெம்புடன் செயலாற்றுவீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வணங்குவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.

சந்திராஷ்டமம்                      24.-10-2017 மாலை 05.42 மணி முதல் 27.-10-2017 காலை 06.32 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ள கூடிய மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் குருவுடன் இணைந்து பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவு மிகச் சிறப்பாக இருக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாது. உங்கள் ராசிக்கு சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்கள¬யும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். துர்க்கையம்மனை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 25, 26.

சந்திராஷ்டமம்                      27.-10-2017 காலை 06.32 மணி முதல் 29.-10-2017 மாலை 05.56 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். மாத கோளான சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம்பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். உங்கள் ராசிக்கு சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபாரத்தில் நற்பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் அதிக லாபம் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. மந்தாரை மலர்களால் ராகுவிற்கு அர்ச்சனை செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 27, 28.


சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும் 6-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். சுபசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி முழுமையாக முடிவடைந்து இதுநாள் வரை இருந்த அலைச்சல் டென்ஷன் எல்லாம் குறைந்து மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் நன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 27, 28.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் புதன் குரு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றங்களை அடைவீர்கள். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் செவ்வாய் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் தான் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில், வியாபாரத்திலும் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். செவ்வாய்க்கு அதிபதியான முருகனை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் குரு, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். பணவரவில் இடையூறுகள் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும் என்றாலும் இதுநாள் வரை 2-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் 3-ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாக இருப்பதால் உங்களுக்கு நடைப்பெற்ற ஏழரைச் சனி முழுமையாக முடிவடைவதால் எல்லா வகையிலும் படிப்படியான ஏற்றங்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சற்று குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் சற்று குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார், உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 25, 26.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் சுக்கிரனுடன் லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபம், பிரச்சினைகள் குறையக்கூடிய அமைப்பு இவ்வாரத்தில் உள்ளது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் அசதி மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து விட முடியும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் எண்ணமும் நிறைவேறும். மாணவர்கள் கல்விக்காக சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள்    22, 23, 24, 27, 28.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு சூரியன் புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மிகச் சிறப்பான அமைப்பாகும். செவ்வாய் சுக்கிரன் 10-ல் இருப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் குறைந்து சேமிக்க முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவதன் மூலம் மருத்துவ செலவுகளை குறைக்கலாம். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில், வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். கொடுக்கல்- வாங்கலில் சாதகமான பலன்களே கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியை செய்தால் கெடுதிகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 25, 26.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9,10-க்கு அதிபதியான புதன் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று சஞ்சரிப்பதாலும், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் குறையும். சிலருக்கு புத்திர வழியில் சிறு மனசஞ்சலம் ஏற்படலாம். உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தினமும் விநாயகரை வணங்கினால் நன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 27, 28.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள், நெருங்கியவர்களின் உதவியால் ஏற்றங்களை அடையக்கூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வு, மந்த நிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த ஒற்றுமை குறைவுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இதுநாள் வரை 10-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வதால் தடைகள் விலகும்.

வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 25, 26.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 8-ல் சூரியன் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மன நிம்மதியை உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ பெருமானை வழிபடுவதும் பிரதோஷ விரதமிருப்பதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 27, 28.


No comments: