Saturday, September 2, 2017

வார ராசிப்பலன் செப்டம்பர் 3 முதல் 9 வரை 2017

வார ராசிப்பலன்  செப்டம்பர் 3 முதல்  9 வரை   2017
ஆவணி 18 முதல் 24 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் ( மாத  இதழ் )
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






திருக்கணித கிரக நிலை


ராகு சுக்கி

கேது
சந்திர 
புதன் வ
சூரிய,
செவ்


சனி


குரு

               
கிரக மாற்றம்
05--09-2017 புதன் வக்ர நிவர்த்தி மாலை 04.59 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்               02-09-2017 பகல் 01.56 மணி முதல் 04-09-2017 இரவு 11.52 மணி வரை.
கும்பம்             04-09-2017 இரவு 11.52 மணி முதல் 07-09-2017 காலை 07.00  மணி வரை.
மீனம்                07-09-2017 காலை 07.00  மணி முதல் 09-09-2017 பகல் 11.46 மணி வரை.
மேஷம்           09-09-2017 பகல் 11.46 மணி முதல் 11-09-2017 மதியம் 03.04 மணி வரை.



இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
04-09-2017 ஆவணி 19 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசிதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை

08-09-2017 ஆவணி 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துதியைதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானத்தில் இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவும். சுக்கிரன் 4-ல் இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வதால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 6, 9.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. சனி 7-ல் இருப்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்-- மனைவியிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப்பலன்களை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சூரியனின் அதிதேவதையான சிவனை வணங்கினால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7, 8, 9.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ராசியாதிபதி புதன் சூரியன் செவ்வாயுடன் 3-ஆம் வீட்டில் இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9.

சந்திராஷ்டமம்      02-09-2017 பகல் 01.56 மணி முதல் 04-09-2017 இரவு 11.52 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு, 2-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவதும், முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை குறைக்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு -னுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். முருகனை வணங்குவதாலும், சஷ்டி விரதம் இருப்பதாலும் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 9.

சந்திராஷ்டமம்                      04-09-2017 இரவு 11.52 மணி முதல் 07-09-2017 காலை 07.00  மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய், 4-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்த நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் உங்கள் ராசிக்கு குரு கேது சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பிரதோஷகால விரதங்கள் மேற்கொள்ளுதல், காயத்திரி மந்திரம் படித்தல் போன்றவற்றால் உங்கள் பிரச்சினைகள் தீரும்.

வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 6.

சந்திராஷ்டமம்                      07-09-2017 காலை 07.00  மணி முதல் 09-09-2017 பகல் 11.46 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன் ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். வெண் காந்தல் பூவால் புதனுக்கு அர்ச்சனை செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7, 8.

சந்திராஷ்டமம்                      09-09-2017 பகல் 11.46 மணி முதல் 11-09-2017 மதியம் 03.04 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும் துலா ராசி நேயர்களே, இந்த வாரம் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் வலுவாக சஞ்சரிப்பதும் 11-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பென்பதால் இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். சனிக்கிழமை சனிக்கவசம் படித்தால் நல்ல காரியங்கள் நடைபெறும்.

வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்ககூடிய அமைப்பாகும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்களுக்கு ஏழரைச் சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் நிலவும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அனுமனையும், விநாயகரையும் வழிபட்டால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 9.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் அடைய கூடிய ஆற்றலை பெறுவீர்கள். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் கேது 8-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வருவதுடன் நல்ல லாபங்களும் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும், உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்தால் மன அமைதி உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 5, 6.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன் 11-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். 8-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் வயிறு சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது சிறப்பு. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமத நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். உடன் பணிபுரிபவர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சூரியனின் அதிதேவதையான சிவனை வணங்கினால் மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 7, 8, 9.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, சுக்கிரன் 7-ல் புதன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். 7-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஓற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். செண்பகப்பூவால் செவ்வாய்க்கு அர்ச்சனை செய்தால் உங்களுக்கு உள்ள பாதிப்புகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 9.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், 6-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிர்ப்புகள் குறையும் நிலை உண்டாகும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக அமைவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து மஹாலட்சுமி தேவிக்கு வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 7, 8, 9.


No comments: