Wednesday, September 27, 2017

வார ராசிப்பலன் அக்டோபர் 1 முதல் 7 வரை 2017

வார ராசிப்பலன்
அக்டோபர்  1 முதல் 7 வரை   2017
புரட்டாசி  15 முதல் 21 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் ( மாத  இதழ் )
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






திருக்கணித கிரக நிலை

ராகு
கேது
  சந்திர

செவ்
சுக்கி

சனி

குரு

புதன்
சூரிய,

               
கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்              29.09.2017 இரவு 10.23 மணி முதல் 02.10.2017 காலை 08.48 மணி வரை
கும்பம்            02.10.2017 காலை 08.48 மணி முதல் 04.10.2017 மதியம் 03.47 மணி வரை
மீனம்                                04.10.2017 மதியம் 03.47 மணி முதல் 06.10.2017 இரவு 07.35 மணி வரை
மேஷம்           06.10.2017 இரவு 07.35 மணி முதல் 08.10.2017 இரவு 09.33 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
01.10.2017 புரட்டாசி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசிதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரக்கூடிய உன்னதமான அமைப்பாகும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். கடன்கள் படிப்படியாகக் குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். சனி 8ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலை பளுவும் குறையும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் --               1, 2, 3, 7.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் 5-ல் புதன் சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். குரு 6-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவினைப்பெற முடியும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியிலும் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் குறைத்து கொள்வது நல்லது. வியாழக்கிழமை விரதமிருந்து குரு தட்சிணாமூர்த்தியை வணங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் --               2, 3, 4, 5, 6.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் 5-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ராகு 2-ல், சூரியன் 4-ல் இருப்பதால் முடிந்த வரை பயணங்களை குறைத்துக் கொள்வதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலங்கள் கிட்டும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

வெற்றி தரும் நாட்கள் --               4, 5, 6, 7.

சந்திராஷ்டமம்                      29.09.2017 இரவு 10.23 மணி முதல் 02.10.2017 காலை 08.48 மணி வரை

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருளை வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும். கடன் பிரச்சனைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனையும் சிவனையும் வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் --               1, 7.

சந்திராஷ்டமம்                      02.10.2017 காலை 08.48 மணி முதல் 04.10.2017 மதியம் 03.47 மணி வரை

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்-- மனைவியிடையே  வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்களை ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் முயன்று வரை கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமமம். பிரதோஷகால விரதங்கள் மேற்கொள்ளுதல் நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் --               1, 2, 3.

சந்திராஷ்டமம்                      04.10.2017 மதியம் 03.47 மணி முதல் 06.10.2017 இரவு 07.35 மணி வரை

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண் படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரித்தாலும் 2-ல் குரு 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தாராள தனவரவு ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும் இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஓற்றுமை அதிகரிக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிபடியாக குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் கிட்டும். சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறம். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் யாவும் தடையின்றி கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் வாழ்வின் துயரங்கள் பறந்தோடும்.

வெற்றி தரும் நாட்கள் --               2, 3, 4, 5, 6.

சந்திராஷ்டமம்                      06.10.2017 இரவு 07.35 மணி முதல் 08.10.2017 இரவு 09.33 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்களுக்கு குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து சாதகமான பலன்களை அடைவீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கடன்கள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து ஓரளவு லாபங்களை பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை ஏற்படும். வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வதால் குருவின் அருள் கிட்டும்.

வெற்றி தரும் நாட்கள் --               4, 5, 6, 7.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் சுக்கிரனுடன் 10-ல் இருப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் உங்களை தேடி வரும் யோகம் உண்டாகும். எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல் படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை போன்றவை உண்டாகலாம். முடிந்த வரை நேரத்திற்கு உணவு உண்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். வேலைபளு குறையும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது, கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் --               1, 7.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு 11-லும் 10-ல் சூரியன் புதனும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் எல்லாம் குறைந்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரத்திலும் முன்னேற்றம் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் --               2, 3, 4.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் 8-ல் செவ்வாய் 10-ல் குரு சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவதும், அலைச்சல்களை குறைத்துக் கொள்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகலாம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் --               1, 4, 5, 6.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களது முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். 7-ல் செவ்வாய் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்றே குறையும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற கடின உழைப்பு தேவை. செவ்வாய் கிழமை முருகனை வழிபடுவதாலும் தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பதாலும் இறை அருள் கிட்டும்.

வெற்றி தரும் நாட்கள் --               2, 3, 4, 7.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே ராசியதிபதி குரு சாதகமற்று இருப்பதால் பணவரவில் இடையூறுகள் இருக்கும் என்றாலும் 6-ல் செவ்வாய் 11-ல் கேது இருப்பதால் எதையும் எதிர்கொள்ளகூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சிரமமின்றி முடித்து விடுவீர்கள். குடும்பத்தின் ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவனர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை மற்றவர்களுக்கு தருவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்களுக்கு படிப்பில் விடாமுயற்சி தேவை. செந்தாமரை மலர்களால் சூரியனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 1, 4, 5, 6.


No comments: