Thursday, September 28, 2017

அக்டோபர் மாத ராசிப்பலன் - 2017

அக்டோபர் மாத ராசிப்பலன் - 2017



கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,







ராகு

கேது 
  செவ் சுக்கி 


சனி 
குரு
புதன் 
சூரிய
கிரக மாற்றம்
9-10-2017 கன்னியில் சுக்கிரன் இரவு 09.25 மணிக்கு
13-10-2017 கன்னியில் செவ்வாய் பகல் 04.03 மணிக்கு
13-10-2017 துலாத்தில் புதன் இரவு 11.52 மணிக்கு
17-10-2017 துலாத்தில் சூரியன் பகல் 12.16 மணிக்கு
26-10-2017 தனுசில் சனி பகல் 03.28 மணிக்கு

மேஷம்  அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே அஞ்சா நெஞ்சமும், நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, மாத முற்பாதி வரை 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போதே மேற்கொள்ளலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்களும் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால் அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு அஷ்டம சனி முழுமையாக முடிவடைகிறது. இனி எல்லா வகையிலும் முன்னேற்றமானப்பலன்களைப் பெறுவீர்கள்

பரிகாரம்.  அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  22.10.2017 காலை 05.50 மணி முதல் 24.10.2017 மாலை 05.42  மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, நல்ல பேச்சாற்றலும் இனிமையான சுபாவமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு ஏற்றமான அமைப்பு என்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது என்றாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது உத்தமம்பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் முழு மூச்சுடன் முயன்று படிப்பது உத்தமம். இதுநாள் வரை 7-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. இதனால் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

பரிகாரம்.  இம்மாதம் தட்சிணாமூர்த்தி மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  24.10.2017 மாலை 05.42 மணி முதல் 27.10.2017 காலை 06.32 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நல்ல அறிவாற்றலும், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் குரு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 2,8-ல் ராகு கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்சனைகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில்  பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கலாம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாது. வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். இதுநாள் வரை 6-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு கண்டசனி தொடங்குகிறது. இதனால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்.  .  சிவபெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம்  29.09.2017 இரவு 10.23 மணி முதல் 02.10.2017 காலை 08.48 மணி வரை
மற்றும்  27.10.2017 காலை 06.32 மணி முதல் 29.10.2017 மாலை 05.56 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே அழகான முகத்தோற்றமும், கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத பண்பும் கொண்ட உங்களுக்கு மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான  அமைப்பு என்றாலும், ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். இதுநாள் வரை 5-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும்.

பரிகாரம்.  .  முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 02.10.2017 காலை 08.48 மணி முதல் 04.10.2017 மதியம் 03.47 மணி வரை
மற்றும்  29.10.2017 மாலை 05.56 மணி முதல் 01.11.2017 அதிகாலை 01.46 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே வைராக்கியமான குணமும், வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதும் மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும்தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தேடி வரும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். இதுநாள் வரை 4-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு நடைபெற்று கொண்டிருந்த அர்த்தாஷ்டம சனி முடிவடைகிறது இதனால் உங்களுக்கு உள்ள அலைச்சல் டென்ஷன்கள் யாவும் படிப்படியாக குறையும்.

பரிகாரம்.   குரு ப்ரீதி, முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  04.10.2017 மதியம் 03.47 மணி முதல் 06.10.2017 இரவு 07.35 மணி வரை

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே நல்ல பண்பும், மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம  ராசிக்கு 2-ல் குரு 3-சனி, 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் உடல் நிலை சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக அமைவார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறுதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். இதுநாள் வரை 3-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கவுள்ளது. இதனால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.

பரிகாரம்.  . சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்  06.10.2017 இரவு 07.35 மணி முதல் 08.10.2017 இரவு 09.33 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகி குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். திருமண சுபகாரியங்கள் கை கூட சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை  அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்து நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்க பெறும் என்றாலும் தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் கல்வியல் சற்ற மந்த நிலை உண்டாகும். இதுநாள் வரை 2-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு ஏழரை சனி முழுமையாக முடிவடைகிறது. இதனால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

பரிகாரம்.  . தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  08.10.2017 இரவு 09.33 மணி முதல் 10.10.2017 இரவு 11.18 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே பிடிவாத குணமும், தன்னுடைய கொள்கைகளிலிருந்து மாறாமல் வாழும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அனைவரிடமும் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது என்றாலும் நிறைய போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். இதுநாள் வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் பாதசனி தொடங்கவுள்ளது. இதனால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது.

பரிகாரம்.  . சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து மேற்கொள்வது குரு ப்ரீதி செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  10.10.2017 இரவு 11.18 மணி முதல் 13.10.2017 அதிகாலை 02.03 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே தன்மையான குணமும், வேகமாக பேசினாலும் திருத்தமாக பேசக் கூடிய ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, 10-ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் அவர்களே தேவையற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். தொழிலாளர்களும் கூட்டாளிகளும் அனுகூலமாக செயல்படுவார்கள். பயணங்களால் சாதகப்பலன் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கனைப் பெற முடியும். எதிர்பார்க்கும் இட மாற்றமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். இதுநாள் வரை ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மசனி தொடங்கவுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்து கொள்வது நல்லது.

பரிகாரம்.   விநாயகரையும் அம்மனையும் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  13.10.2017 அதிகாலை 02.03 மணி முதல் 15.10.2017 காலை 06.21 மணி வரை.

மகரம்    உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கும் ஆற்றலும், தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணமும் கொண்ட உங்களுக்கு மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 11-ல் சனி சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்றாலும் 8-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றல் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர் பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் கவனம் தேவை. இதுநாள் வரை ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் விரயசனி தொடங்கவுள்ளது. இதனால் தேவையற்ற வீண் விரயங்கள் உண்டாகும்.

பரிகாரம்.  . விநாயகரையும் முருகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  15.10.2017 காலை 06.21 மணி முதல் 17.10.2017 மதியம் 12.18 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே முரட்டு சுபாவமும், மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9-ல் குரு 6-ல் ராகு சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். நல்ல வரன்கள் தேடி வரும்பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன் படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கப் பெறும். இதுநாள் வரை ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு தொட்டªல்லாம் துலங்கும்.

பரிகாரம்.   முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 17.10.2017 மதியம் 12.18 மணி முதல் 19.10.2017 இரவு 08.02 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காமல் காரியங்களில் கண்ணாக செயல்படும் உங்களுக்கு, 7-ல் சூரியன் 8-ல் குரு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள். கிடைக்க வேண்டிய லாபமும் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். இதுநாள் வரை ஜென்ம ராசிக்கு 9-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 26-ஆம் தேதி முதல் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்படும்.

பரிகாரம்.   சிவ பெருமானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  19.10.2017 இரவு 08.02 மணி முதல் 22.10.2017 காலை 05.50 மணி வரை.


சுப முகூர்த்த நாட்கள்

01.10.2017 புரட்டாசி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசிதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை

11.10.2017 புரட்டாசி 25 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டிதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை

27.10.2017 ஐப்பசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

30.10.2017 ஐப்பசி 13 ஆம் தேதி திங்கட்கிழமை தசமிதிதி சதய நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை


No comments: