Thursday, September 7, 2017

வார ராசிப்பலன் செப்டம்பர் 10 முதல் 16 வரை 2017

வார ராசிப்பலன்  செப்டம்பர்  10 முதல்  16 வரை   2017
ஆவணி 25 முதல் 31 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் ( மாத  இதழ் )
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


சந்திர



திருக்கணித கிரக நிலை


ராகு சுக்கி

கேது
 
புதன்
சூரிய,
செவ்


சனி


குரு

               
கிரக மாற்றம்
12-09-2017 துலாத்தில் குரு காலை 06.51 மணிக்கு
15-09-2017சிம்மத்தில் சுக்கிரன் காலை 10.32 மணிக்கு
16-09-2017 கன்னியில் சூரியன் இரவு 12.40 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம்           09-09-2017 பகல் 11.46 மணி முதல் 11-09-2017 மதியம் 03.04 மணி வரை.
ரிஷபம்           11-09-2017 மதியம் 03.04 மணி முதல் 13-09-2017 மாலை 05.47 மணி வரை
மிதுனம்         13-09-2017 மாலை 05.47 மணி முதல் 15-09-2017 இரவு 08.37 மணி வரை
கடகம்              15-09-2017 இரவு 08.37 மணி முதல் 17-09-2017 இரவு 12.07 மணி வரை



இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
10-09-2017 ஆவணி 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்திதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை

15-09-2017 ஆவணி 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் சூரியனுடன் இருப்பதும் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். இதுநாள் வரை 6-ல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் சமசப்தமஸ்தானமான 7-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் நீண்ட நாட்களாக நிலவிய இடையூறுகள் விலகி குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்--- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்ற பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். சனி பகவானை வழிபடுவதும், அனுமன் துதிகளை சொல்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 14, 15.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் மனஅமைதி குறைவு ஏற்படும். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வழியில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. கிடைக்க வேண்டிய வாய்ப்புகளிலும் தடங்கல்கள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சற்று கால தாமதமாகும். உடன் பணிபுரிபவர்கள் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். சூரியனின் அதிதேவைதயான சிவனை வணங்குவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 16

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் செவ்வாயோடு இணைந்திருப்பது மிகச் சிறப்பான அமைப்பாகும். நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இதுநாள் வரை 4-ல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் பஞ்சமஸ்தானமான 5-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேலும் தொழிலை விரிவு படுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள்.
ராகு காலங்களில் துர்கையம்மனை வணங்குவதால் நன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 14, 15.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் ராகு 2-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலன்களை பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும் என்பதால் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் தங்கள் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. செவ்வாய் கிழமை முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12, 13.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் 4-ல் சனி சஞ்சரிப்பதாலும் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும்பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் உடல்நல பாதிப்புகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். சிவனை வணங்குவது பிரதோஷ விரதமிருப்பது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14, 15.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் சூரியன் செவ்வாய் சேர்க்கைப்பெற்று விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. 11-ல் சுக்கிரன் ராகு சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இதுநாள் வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். முருக வழிபாடு மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 14, 15, 16.

சந்திராஷ்டமம்      09-09-2017 பகல் 11.46 மணி முதல் 11-09-2017 மதியம் 03.04 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ஆம் வீட்டிலும் மாத கோளான சூரியன் செவ்வாய் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பலவகையில் முன்னேற்றங்களை பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து, விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சுபப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சனிப்ரீதி விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 10, 16.

சந்திராஷ்டமம்                      11-09-2017 மதியம் 03.04 மணி முதல் 13-09-2017 மாலை 05.47 மணி வரை


விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்று 10-ல் பலமாக சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்க கூடிய காலமாகும். சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு வெளியூரில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற நோக்கங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனிபகவானை வணங்குவதாலும் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதாலும் சனியின் பாதிப்புகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 10,11,12.

சந்திராஷ்டமம்      13-09-2017 மாலை 05.47 மணி முதல் 15-09-2017 இரவு 08.37 மணி வரை

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். 2-ல் கேது 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. இதுநாள் வரை 10-ல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாக இருப்பதால் தொழில் உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மகாலட்சுமிக்கு வெண்தாமரை மலரால் அர்ச்சனை செய்தால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14, 15.

சந்திராஷ்டமம்      15-09-2017 இரவு 08.37 மணி முதல் 17-09-2017 இரவு 12.07 மணி வரை

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் உங்கள் ராசிக்கு 7-ல் ராகு 8-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கும் சூழ்நிலை உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்புங்கள் நிறைவேறும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய் கிழமை விரதமிருந்து முருக பெருமானை வழிபடுவது நல்லது.


வெற்றி தரும் நாட்கள் - 14, 15, 16.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய திறன் உண்டாகும்எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். 7-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. இது நாள் வரை 8-ல் சஞ்சரிக்கும் குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் 9-ஆம் வீட்டிற்கு செல்வதால் ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் விலகி சுபிட்சமான பலன்களை அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைபப் பெற முடியும். தினமும் சூரியனை வணங்குவதும் சிவ வழிபாடுகளை மேற்கொள்வதும் நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள் -                 10, 11, 16.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன  ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால் சகல விதத்திலும் லாபகரமான பலன்களை அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஆசிரியர்களின் ஆதரவு கிட்டும்.
விஷ்ணுவை வணங்குவதும் அம்மன் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.


வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13.

No comments: