Friday, September 23, 2016

வார ராசிப்பலன் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரை 2016

வார ராசிப்பலன் செப்டம்பர் 25   முதல்  அக்டோபர்வரை   2016
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





கேது 
கிரக   மாற்றம் இல்லை



ராகு புதன் 
செவ்  
சனி 
சுக்கி
குரு 
சூரிய
                               

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மிதுனம்          23.09.2016 காலை 03.53  மணி முதல் 25.09.2016 காலை 08.36 மணி வரை.
கடகம்              25.09.2016 காலை 08.36  மணி முதல் 27.09.2016 மாலை 04.00 மணி வரை.
சிம்மம்            27.09.2016 மாலை 04.00 மணி முதல் 30.09.2016 அதிகாலை 01.46 மணி வரை.
கன்னி               30.09.2016 அதிகாலை 01.46  மணி முதல் 02.10.2016 மதியம் 01.19 மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
28.09.2016 புரட்டாசி 12 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசிதிதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், 7ல் சுக்கிரன், 11ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமதபலன் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டும். சிவபெருமானை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள்       25,30,1.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே 4ல் புதன், 5ல் குரு சஞ்சாரம் செய்வதால் இந்த வாரம் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முடிந்த வரை எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிபெருமானை வழிபடுவது, சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்       25,26,27

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு 6ல் சனி, சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள்  ஏற்படும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல் பட்டால் நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதால் கூட்டாளிகளின் ஆதரவுடன், அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்       25,28,29.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட  கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்திலிருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறுவதால் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். துர்க்கை அம்மனை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள்       25,26,27,30,1.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் புதன், 2ல் குரு சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பாகும். இதனால் உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள், யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகயில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வகையின் லாபம் கிட்டும். முன் கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. துர்கை அம்மனை வழிபடவும்.
வெற்றிதரும் நாட்கள்       25.28.29.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன், 3ல் சனி சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்பொன்னும் பொருளும் சேரும். தாராள தனவரவுகளால் குடும்பத்திலிருந்த கடன் பிரச்சினைகள் யாவும் விலகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து லாபம் பெருகும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.


வெற்றிதரும் நாட்கள்       25,26,27,30,1.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய், 11ல் ராகு, புதன் சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு எதிர்பார்க்கும் லாபங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்கணவன் மனைவி எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். புத்திர வழியிலும் கவலைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளால் ஆதாயங்கள் கிட்டும். எதிர்பாராத அரசு உதவிகளும் கிடைக்கப் பெற்று தொழிலை விரிவு செய்ய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்       25,26,27,28,29.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10ல் புதன் 11ல்  குரு, சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்       28,29,30,1.

சந்திராஷ்டமம்                        23.09.2016 காலை 03.53  மணி முதல் 25.09.2016 காலை 08.36 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் புதன்,  10ல்  சூரியன், 11ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் இது வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். அழனகான புத்திர பாக்கியமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகுவதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும்.

வெற்றிதரும் நாட்கள்                       30,1.
சந்திராஷ்டமம்                        25.09.2016 காலை 08.36  மணி முதல் 27.09.2016 மாலை 04.00 மணி வரை

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 10ல் சுக்கிரன்,  11ல் சனி சஞ்சாரம்  செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும்உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். பொன் பொருள் சேரும். சிலர் வீடு, வாகனம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் தடையின்றி நடைபெறும். வம்பு வழக்குகள் யாவும் மறையும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 25,26,27.

சந்திராஷ்டமம்        27.09.2016 மாலை 04.00 மணி முதல் 30.09.2016 அதிகாலை 01.46 மணி வரை.கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன், குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியுடனேயே இருக்க முடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைபடும் கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற  நிலை உண்டாகும். குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்                       25,26,27,28,29.

சந்திராஷ்டமம்        30.09.2016 அதிகாலை 01.46  மணி முதல் 02.10.2016 மதியம் 01.19 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் வியங்கும் மீன  ராசி நேயர்களே இந்த வாரம் 6ல் ராகு, 7ல் குரு, 10ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும். புத்திர வழியில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய திருமண சுப காரியங்களும் கைகூடும். சிலர் அசையும் அசையா சொத்துகளையும் வாங்கிச் சேர்ப்பார்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது சர்ப சாந்தி செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்       28,29,30,1.


No comments: