Thursday, September 8, 2016

வார ராசிப்பலன் செப்டம்பர் 11 முதல் 17 வரை 2016

வார ராசிப்பலன்    செப்டம்பர் 11   முதல்  17   வரை   2016
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





கேது                                  

கிரக   மாற்றம்
16.09.2016 கன்னி சூரியன்



ராகு  சூரிய
புதன் ()

சனி  செவ்     

குரு     சுக்கி  


இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு                                10.09.2016 காலை 06.51 மணி முதல் 12.09.2016 மாலை 04.06 மணி வரை.
மகரம்               12.09.2016 மாலை 04.06 மணி முதல் 14.09.2016 இரவு 09.42 மணி வரை.
கும்பம்             14.09.2016 இரவு 09.42 மணி முதல் 16.09.2016 இரவு 12.10 மணி வரை.
மீனம்                                16.09.2016 இரவு 12.10 மணி முதல் 18.09.2016 இரவு 12.54 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
14.09.2016 ஆவணி 29 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசிதிதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

15.09.2016 ஆவணி 30 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்தசிதிதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் குரு, 8ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                       13,14,15,16.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை  அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் குரு, சுக்கிரன் 10ல் கேது சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். ளுத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த உயர்வுகளை பெறுவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                       15,16,17.
சந்திராஷ்டமம்                        10.09.2016 காலை 06.51 மணி முதல் 12.09.2016 மாலை 04.06 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 4ல் சுக்கிரன், 6ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். ராகுகேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                       11,12,17.
சந்திராஷ்டமம்                        12.09.2016 மாலை 04.06 மணி முதல் 14.09.2016 இரவு 09.42 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் புதன் 5ல் செவ்வாய் 16ம் தேதி முதல் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ள அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
வெற்றிதரும் நாட்கள்                       11,12,13,14.
சந்திராஷ்டமம்        14.09.2016 இரவு 09.42 மணி முதல் 16.09.2016 இரவு 12.10 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2ல் குரு சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் நன்மை தீமை கலந்த பலன்களை ªறுவீர்கள். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும்பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால்  தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     13,14,15,16.
சந்திராஷ்டமம்      16.09.2016 இரவு 12.10 மணி முதல் 18.09.2016 இரவு 12.54 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசியில் குரு 12ல் ராகு, சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால்  பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது மூலம் அனுகூலங்கள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும்உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     15,16,17.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் சனி செவ்வாய் 12ல் குரு சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி  இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்திலும் ஓரளவுக்கு லாபம் அமையும். கடன்கள் சற்று குறையும். உடல் நிலையில் சற்றே கவனம் செலுத்தவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     11,12,17.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதாலும் 11ல் குரு சுக்கிரன்  சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப் செயல்பட முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும்விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     13,14.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 10ல் குரு சுக்கிரன், 12ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்வர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். சனிக்கு பரிகாரம் செய்வது சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     11,12,15,16.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் குரு சுக்கிரன், 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி  கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகஸ்தர்கள்எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைவார்கள். சிலருக்கு சொந்த வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்திலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். கொடுக்கல் வாங்கலிலும் எதிர்பார்தத லாபத்தினைப் பெற முடியும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     13,14,17.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் குரு சுக்கிரன், 7ல் ராகு சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும்பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுப காரிய முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகதிதிலிருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். ராகு  கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     11,12,15,16.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன  ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் ராகு சூரியன், 7ல் குரு சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். ராகுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     11,12,13,14,17.


No comments: