Sunday, May 29, 2016

வார ராசிப்பலன் மே 29 முதல் ஜீன் 4 வரை 2016

நேர மாறுதல்

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
நாளை 30.5.2016 முதல் 
விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற  நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )

வார ராசிப்பலன் மே   29 முதல்  ஜீன்  4   வரை   2016
வைகாசி   16 முதல்  22   வரை  


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


               

புதன்
சூரிய சுக்கி

கேது 




ராகு குரு

சனி () செவ்()




கிரக   மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் 
கும்பம்                             28.05.2016 மாலை 04.00 மணி முதல் 30.05.2016 இரவு 08.34மணி வரை.
மீனம்                                30.05.2016 இரவு 08.34 மணி முதல் 01.06.2016 இரவு 10.37  மணி வரை.
மேஷம்                           01.06.2016 இரவு 10.37  மணி முதல் 03.06.2016 இரவு 11.02 மணி வரை.
ரிஷபம்                            03.06.2016 இரவு 11.02  மணி முதல் 05.06.2016 இரவு 11.28  மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
02.06.2016 வைகாசி 20 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை.




மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் புதனும், 2ல் சுக்கிரனும், 5ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் வெற்றிகளை பெறுவீர்கள். பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப காரியங்களில் தற்போது அனுகூலமான பலனை அடைய முடியும். இழந்த பொருட்களையும் மீட்க முடியும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கப் பெறும். சிலர் எதிர்பார்க்கும் இடமாற்றங்களைப் பெற முடியும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்       29,30,2,3.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் சூரியனும், 7ல் செவ்வாய் சனியும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தின் ஒற்றுமை சுமாராகத்தானிருக்கும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும் உற்றார் உறவனர்களிம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும் .கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பெரிய தொகைளுக்கு மற்றவர்களை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், உடன் பணி புரிபவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்       31,1,4.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சனி செவ்வாய், 11ல் புதன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலமும் சிறப்படையும். எல்லா வகையிலும் மேன்மையும். உயர்வும் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்டு வந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகளும் வாங்குவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லா விதமான தேவைகளும் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். உங்களுக்கு இருந்த வந்த கடன் பிரச்சனைகளும் சற்றே குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்       31,1,2,3.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களேளே உங்கள் ஜென்ம ராசிக்கு 10ல் புதன், 11ல் சூரியன் சுக்கிரன், சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட் சேர்க்கைகளும் உண்டாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் ஆடை ஆபரணம் சேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன் அமையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்       2,3,4.
சந்திராஷ்டமம்                        28.05.2016 மாலை 04.00 மணி முதல் 30.05.2016 இரவு 08.34மணி வரை
சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் புதன், 10ல் சூரியன் சுக்கிரன், சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிப்பீர்கள். தேவையற்ற பிரச்சினைகள் குறையும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்க்கக் கூடிய வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கொடுக்கல் வாங்கலில் சுமாரான லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டி, பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் மறையும். லாபங்கள் சுமாராக இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.


வெற்றிதரும் நாட்கள்       29,30,4.
சந்திராஷ்டமம்        30.05.2016 இரவு 08.34 மணி முதல் 01.06.2016 இரவு 10.37  மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய், சனி 9ல் சுக்கிரன், சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். குரு விரய ஸ்தானத்திலிருப்பதால் பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியிலும் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்       29,30,31,1.
சந்திராஷ்டமம்        01.06.2016 இரவு 10.37  மணி முதல் 03.06.2016 இரவு 11.02 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 7ல் புதன், 11ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் அன்றாட பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள்  எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். தொழில், வியாபார ரீதியாக போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் பெற்று விடுவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப் பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்       31,1,2,3.
சந்திராஷ்டமம்                        03.06.2016 இரவு 11.02  மணி முதல் 05.06.2016 இரவு 11.28  மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய், சனி 7ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சிந்தித்து சற்று செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் நடக்க விருந்த சுபகாரியங்கள் தடைப்படும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். முடிந்த வரை உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். போட்டி பொறாமைகளும் அதிகரிக்கும் என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்       2,3,4.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் புதன், 6ல் சூரியன், 9ல் குரு, சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லதுகொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்       29,30,4.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் புதன், 5ல் சுக்கிரன், 11ல் செவ்வாய், சனி சஞ்சாரம் செய்வதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். உற்றார் உறவினர்களிடையே இருந்து வந்த பகைமை விலகி ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சொந்த வீடு வாகனம் போன்றவற்றையும் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்       31,1.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன், 7ல் குரு, சஞ்சரிப்பதால் உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிறப்பான மணவாழ்க்கையும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். பொருளாதாரத் தடைகள் விலகுவதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாடுகளுக்கு சென்று பண்புரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது  நல்லது.




வெற்றிதரும் நாட்கள்       29,30,2,3.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன  ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் புதன், 3ல் சூரியன் 6ல் ராகு, சஞ்சாரம் செய்வதால் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி விடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணசுப  காரியங்களுக்கான மயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பகைமை பாராட்டிய உறவுகளும் நட்புக்கரம் நீட்டுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் இதுவரை சந்தித்த சோதனைகள் குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்       31,1,4.


No comments: