Saturday, May 14, 2016

வைகாசி மாத ராசிப்பலன் - 2016

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற  நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )


வைகாசி  மாத ராசிப்பலன் - 2016

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்

Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனிசென்னை&600 026
தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


மேஷம் 
ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பண வரவுகள் சிறப்பாகவே இருக்கும். 2ல் சூரியன் 8ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகளை சமாளிக்கும் அளவிற்கு ஆற்றல் உண்டாகும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடவும்.

ரிஷபம்  
ஜென்ம ராசியில் சூரியனும், 7ல் செவ்வாய் சனியும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருக்கும். கொடுக்கல்&வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது விட்டு கொடுத்து செல்வது போன்றவற்றின் மூலம் அனுகூலப்பலனை பெற முடியும். தேவையற்றப் பயணங்களைத்  தவிர்ப்பதால் அலைச்சல் குறையும். முருகப் பெருமனை வழிபடுவது நல்லது.

மிதுனம்   முயற்சி ஸ்தானமான 3ல் ராகுவும் 6ல் செவ்வாய், சனியும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எந்த வித பிரச்சனைகளையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் நற்பலன் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இம்மாதம் சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

கடகம்   
குடும்ப ஸ்தானமான 2ல் குரு சஞ்சரிப்பதும், 10ல் சுக்கிரன் 11ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும், தொழில் வியாபார ரிதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றியும் எந்தவித பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்து விட கூடிய ஆற்றலும் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளும் விலகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற்று முன்னேற்றமடைவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் பொன் பொருள் நல்ல லாபம் கிட்டும். கடன்களை குறைத்து கொள்ள முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சிம்மம்    ஜென்ம ராசிக்கு 9ல் சுக்கிரன், புதன், 10ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலங்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகளிலும் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு போன்றவை உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் ஒரளவுக்கு கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுப்பது நடப்பது, முன் கோபத்தைக் குறைப்பது, முடிந்து வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும், சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடவும்.

கன்னி    
முயற்சி ஸ்தானமான 3ல் செவ்வாய் சனி சஞ்சாரம் செய்வதும் பாக்கிய ஸ்தானமான 9ல் சூரியன் சஞ்சரிப்பதும் பல வகையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளிவைக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குரு பகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

துலாம்    
குடும்ப ஸ்தானமான 2ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும், 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் குருவும் ராகுவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சநேரை வழிபடவும். 

விருச்சிகம்    
ஜென்ம ராசியில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும், 7ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமை சிறப்பாக அமையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதால்  பலவகையில் நற்பலன்களைப் பெற முடியும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள்ளேயே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். முருகனை வழிபடுவது நல்லது.


தனுசு    
ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன்,  9ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து முன்னேறும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலமும் சிறப்படையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எல்லா வகையிலும் மேன்மையும் உயர்வும் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர் உடையவற்றாலும் லாபங்கள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியும் பெருகும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

மகரம்  
ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும்,  11ல் செவ்வாய், சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக  இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் உறவினர்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபங்கள் பெருகும். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

கும்பம்   
களத்திர ஸ்தானமான 7ல் குரு, 10ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் மேன்மை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து குடும்பத்தின் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.


மீனம் 
ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 6ல் ராகு சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள்ளேயே இருக்கும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை பாதிப்படையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.  உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். தினமும் விநாயகரை வழிபடவும்.

No comments: