காணத்தவறாதீர்
விஜய் டிவியில்
தினமும்
காலை 05.45 மணி முதல் 05.55 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
திசை என்பது நவ கிரகங்களில் எந்த கோளின் திசை நடைபெறுகிறதோ அக்கிரகத்தின் ஆட்சிக் காலமாகும். நடப்பில் எந்த கோளின் திசை நடைபெறுகிறதோ அக்கிரகமே தசா நாதனாவார். தசா நாதனின் தன்மைக்கேற்ப அத்திசையின் பலா பலன்களும் நடைபெறும். 120 வருட காலம் கொண்ட விம்சோத்திரி திசையே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு 100&க்கு அதிகமான 20 வருடங்கள் எனப் பொருள். திசை காலங்கள் மேலும் புக்தி காலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. கோளின் சேர்க்கைகள், ராசிகள் அமையும் வீடுகளின் விதம், வீடுகளுக்கிடையே உள்ள தொடர்புகள் ஆகியவை ஒரு மனிதனின் வாழ்வில் தங்களது பங்கை அளிக்கின்றன. நல்ல யோகம் தரும் கோளின் திசை, புக்தி நடைபெறும் போது ஒரு மனிதனின் வாழ்வில் நல்ல முன்னேற்றங்களையும், யோகங்களையும் அளிக்கின்றது. பெரிய மாற்றம் உண்டாகிறது.
நவ கோள்களில் இயற்கை சுபர், இயற்கை பாவர் என இரு வகைகள் உள்ளன.
இயற்கை சுபர் ;
குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் சுபர் சேர்க்கைப் பெற்ற புதன்
இயற்கை பாவர் ;
சனி, சூரியன், செவ்வாய், ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவர் சேர்க்கைப் பெற்ற புதன் போன்றவையாகும்.
இயற்கை சுபர்களின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் எளிதில் கை கூடும். அழகான புத்திர சிறப்பும் அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். அதுவே பாவ கோள்களின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் திருமண சுப காரியங்கள் நடைபெறுவதில் தடை தாமதம் ஏற்படும். புத்திர பாக்கியம் அமைவதிலும் சிக்கல் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்பு குறையும். குறிப்பாக சனி, ராகு கேது போன்ற கோள்களின் தசாபுக்தி காலங்களில் முன்கோபம், வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, இல்வாழ்க்கையில் ஈடுபாடற்ற நிலை கணவன் மனைவி பிரியக் கூடிய சூழ்நிலை உண்டாகும். என்றாலும் பாவ கோள்கள் லக்னாதிபதியானாலும் லக்னாதிபதிக்கு நட்பு கோளாக இருந்தாலும், மேற்கூறிய கெடு பலன்கள் குறையும்.
மண வாழ்க்கையானது எந்தெந்த தசாபுக்தி காலங்களில் இனிமையாக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் எனப் பார்க்கும் போது குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபர் சேர்க்கை பெற்ற புதன் போன்ற இயற்கை சுபர்கள் பலவீனமடையாமல் (நீசம், அஸ்தங்கம்,வக்ரம்,சஷ்டாஷ்டமம்) அமைந்திருந்தால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரி கோணாதிபதிகளின் தசா புக்தி காலங்களிலும் லக்னாதிபதிக்கு நட்பு கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். களத்திர ஸ்தானாதிபதிக்கு நட்பு கோள்களின் தசா புக்திகள் நடைபெறும் போதும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
இயற்கை பாவ கோள்களாகிய சூரியன் செவ்வாய் ஆகிய கோள்கள் நட்பு கோள்களின் சேர்க்கைப் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்து அக்கோள்களின் தசா புக்தி நடைபெற்றாலும் இல்வாழ்க்கை இனிப்பாகவே அமையும். தசா நாதனுக்கு புக்தி நாதனின் பங்கைப்பற்றி பார்க்கும் போது, தசா நாதனுக்கு நட்பு கோள்களின் புக்தி காலத்திலும், தசா நாதனுக்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்ற கோள்களின் புக்தி காலத்திலும் மண வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். பாவ கோள்களாக இருந்தாலும் அவை சுபர் சாரம், சுபர் சேர்க்கை, சுபர் பார்வையுடன் அமையப் பெற்றிருந்தால் குடும்ப வாழ்வில் சிறு சிறு பிரச்சனைகள் எற்பட்டாலும் ஒற்றுமைக் குறையாமலிருக்கும்.
திருமண வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய தசாபுக்திகள் பின்வருமாறு;
ஜென்ம லக்னத்திற்கும், சந்திரனுக்கும் 2,7 ஆமிடங்களில் அமைகின்ற பாவ கோள்களின் தசா புக்தி காலங்களில் குடும்ப வாழ்வில் ஒற்றுமை குறைவு உண்டாகிறது. 7&ஆமிடமும், 7&ஆமதிபதியும், சுக்கிரனும், 6&ஆம் அதிபதியின் சேர்க்கையோ, தொடர்போ பெற்று 6ஆமதிபதியின் திசை புக்தி நடைபெற்றால் குடும்ப வாழ்வில் வீண் வாக்கு வாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு, வழக்காடு மன்றங்களுக்கு செல்லக் கூடிய நிலை, பிரிவு உண்டாகிறது.
7&ஆமிடமும், 7&ஆமதிபதியும், சுக்கிரனும் 8&ஆமதிபதியின் சேர்க்கையோ, தொடர்போ, பெற்று இருந்தாலும் 7&க்கு 8&ஆமிடமான 2&ஆமதிபதியின் சேர்க்கை, தொடர்பு, பார்வை பெற்று பாவகோள்களின் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும், கணவனுக்கோ, மனைவிக்கோ, ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்டு, அதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறைவு உண்டாகும். 7&க்கு 2&ஆமிடமான 8&ஆமிடத்தில் பாவ கிரகங்கள் அமைந்து சுபர் பார்வையின்றி அதன் திசையோ புக்தியோ நடைபெற்றால் களத்திர வழி உறவுகளிடையே ஒற்றுமை குறைவு ஏற்பட்டு அதனால் கணவன் மனைவியிடையே மனகசப்பு உண்டாகும்.
களத்திர ஸ்தானமான 7&ஆமிடத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பாவகோள்கள் அமையப் பெற்றாலும், களத்திர ஸ்தானாதிபதி ஒன்றுக்கு மேற்பட்ட பாவகோள்களின் சேர்க்கைப் பெற்றாலும், களத்திர காரகன் சுக்கிரன் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவ கோள்களுடன் அமைந்திருந்தாலும் களத்திர தோஷம் உண்டாகிறது. களத்திர தோஷத்தை ஏற்படுத்திய கிரகங்களின் புக்தி காலங்களில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வெளி நபர்களின் தலையீட்டால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும். நவகோள்களில் ராகு, கேது தன்னிலை மறந்து செயல் பட வைக்க கூடிய கோளாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7&ஆமதிபதிக்கோ களத்திரகாரகன் சுக்கிரனுக்கோ, 7&ஆமிடத்திற்கோ ராகுவின் ஆதிக்கம் அதிகமிருந்தால் தாம்பத்திய வாழ்வில் இச்சைகள் அதிகம் இருக்கும். ராகுவின் புக்தி காலங்களில் தன்னிலை மறந்து என்ன செய்கிறோம் என்பதையறியாமல் மிருகத்தனமாக செயல்படுவார்கள். இதனால் பலவித அசம்பாவிதங்களும் நிகழ்கின்றன.
திருமணம் என்ற நிகழ்வே இருவரின் உடல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் இனப் பெருக்கம் செய்வதற்கும் தான். குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சகித்து கொண்டு வாழ முடியும். குறிப்பாக தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருந்தால் எல்லா பிரச்சனைகளும் தவிடு பொடியாகிவிடும். இதற்கு தான் புருஷன் பொண்டாட்டி சண்டை பொழுது போனால் சரியாகி விடும் என்ற பழமொழியை கூறுவார்கள். அதுவே தாம்பத்ய வாழ்வில் ஒருவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்து மற்றொருவருக்கு அதில் ஈடுபாடு குறைவாக இருந்தால், மனமொத்து வாழ்வது கடினம். பருவ நிலை மாற்றம் போல சில நேரங்களில் சிலருக்கு உணர்ச்சிகள் தேவைகள் அதிகமாக இருக்கும். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் மற்றொருவரின் செயல்பாடுகளும் இருந்தால் அந்த வாழ்க்கை சொர்க்கம் தான்.
களத்திர காரகனும், காமத்துக்கு காரகனுமாகிய சுக்கிரன் சுபகோள்களின் சம்மந்தத்துடனிருந்தால் ஒருவருக்கு உண்டாக கூடிய உடல் உணர்ச்சிகள் தேவைகள் போன்றவை அளவாக அமைந்து தாம்பத்ய வாழ்க்கையும் இனிப்பாக இருக்கும். அதுவே சுக்கிரன் பாவ கோள்களின் சம்மந்தத்துடனிருந்தால் உடல் தேவைகள் அதிகரிக்கும். அந்த கோள்களின் தன்மைக்கேற்ப இத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மிகவும் கடினமாக நடந்து கொள்வார்கள். சுக்கிரன் அலி கோள்களின் சம்மந்தத்துடனிருந்தால் தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு குறைவு மற்றொருவரை முழு திருப்தி அடைய செய்ய இயலாத நிலை போன்றவை உண்டாகும்.
நவ கிரகங்களில் அலி கோள்கள் என கூறக் கூடியவை சனி, புதன் கேது, ஆகும். இக்கோள்களின் ஆதிக்கம் ஒருவரது ஜாதகத்தில் அதிகமாக இருக்குமானால் அதன் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு குறைவு ஏற்பட்டு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
மோட்சகாரகன், ஞானக்காரகன் என கூறக்கூடிய கேதுவின் திசை புக்தி நடைபெறும் காலங்களில் தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு குறைவு உண்டாகும். கேதுவின்திசையில் கேதுபுக்தி காலங்களிலும், மற்ற கோள்களில் திசையில் கேதுபுக்தி நடைபெறும் காலங்களிலும் திருமண சுப காரிய முயற்சிகளில் தடை ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை அமைய தாமதம் உண்டாகும். திருமணம் நடைபெற்றவர்களுக்கு உடல் உணர்ச்சிகளின் தேவைகள் குறைந்து தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு இருக்காது. கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு மேற்கூறிய தசா புக்தி நடைபெற்று, மற்றொருவருக்கு உடல் உணர்ச்சிகளை அதிகம் ஏற்படுத்த கூடிய கோள்களின் தசா புக்தி நடைபெற்றால் ஒருவர் தேவைகளை மற்றொருவர் பூர்த்தி செய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தில் பிரிவு, பிரச்சனை வாக்குவாதங்கள் போன்றவை ஏற்படும்.
ஆனால் அலி கோள்களாகிய சனி புதன் கேது போன்றவர்கள் நல்ல கோள்களின் சாரத்தில் அமைந்தால் தாம்பத்ய வாழ்க்கை சற்று மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுவே புதன்,சனி,கேது போன்றவர்கள், புதன் சனி,கேது, போன்றவர்களின் சாரத்திலேயே அமைந்து விட்டால் புதன் திசை புதன் புக்தி காலங்களிலும், சனிதிசை சனி புக்தி காலங்களிலும் கேது திசை, கேது புக்தி காலங்களிலும் தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு குறைவு ஏற்படும். இது போல மற்ற கோள்களின் திசைகளிலும் சனி, புதன் கேது புக்தி காலங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு மேற்கூறிய தசா புக்தி நடைபெறும் காலங்களில் பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பிரிவு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
Contact
For your consultation
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
BANK ACCOUNTS DETAILS ARE
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment