Tuesday, March 31, 2015

மாத ராசிப்பலன் ஏப்ரல் 2015

மாத ராசிப்பலன்  ஏப்ரல் 2015


காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்

மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே 
       தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு  எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட உங்களுக்கு  செய்வதும், 4&ல் குரு, 8&ல் சனி 12&ல் சூரியன்,  சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6&ம் வீட்டில் ராகு சஞ்சாரம்  செய்வதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.   கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உங்களுக்கு அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.

பரிகாரம். சிவ பெருமானை வழிபடுவது, விநாயகரை வழிபடுவது, சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது  உத்தமம்.
சந்திராஷ்டமம் சந்திராஷ்டமம் 07.04.2015 இரவு 11.19 மணி முதல் 10.04.2015 காலை 07.28 மணி வரை.


ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களேர் 
          தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாதவராகவும் எதற்கும் உணர்ச்சிவசப்படாதவராகவும் விளங்கும் பண்பு கொண்ட உங்களுக்கு 3&ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 11&ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். 
பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். கடந்த காலப் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். 7&இல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற முடியும். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். 

பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது முருகப்பெருமானை வழிபாடு செய்வது, துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 10.04.2015 காலை 07.28 மணி முதல் 12.04.2015 பகல் 12.57 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே 
        எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் பிறரை எளிதில் நம்பாத குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ல் சனியும், 11&ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும்  மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். அற்புதமான நற்பலன்களை அடைய முடியும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். 

பரிகாரம். தட்சினா மூர்த்தியை வழிபாடு செய்வது துர்கை அம்மனை வழிபாடு செய்வது  நல்லது.
சந்திராஷ்டமம் 12.04.2015 பகல் 12.57 மணி முதல் 14.04.2015 பகல் 03.52 மணி வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே மற்றவர்களிடம்  எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக் கொள்ளமுடியுமோ அவ்வளவு எளிதில் தொடர்பை  துண்டிக்கவும் தயங்காத குணம்  கொண்ட உங்களுக்கு 3-&ல் ராகுவும் 9&ல் சூரியனும், 10&ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினை பெறுவீர்கள். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும்.

பரிகாரம். குருப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது  சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம் 14.04.2015 பகல் 03.52 மணி முதல் 16.04.2015 மாலை 04.55 மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே தனக்கு இடையூறு செய்பவர்களை வேரோடு களையும் ஆற்றலும் தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் பண்பும் கொண்ட உங்களுக்கு 2&ல் ராகுவும், 8&ல் கேது,  சூரியனும் சஞ்சாரம் செய்வதும் சாதகற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. சனி ஜென்ம ராசிக்கு 4&இல் சஞ்சரித்தாலும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு ஏற்றமானப் பலன்களை பெற முடியும். கணவன்-&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். உடலில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெறும்.

பரிகாரம். சிவ வழிபாடு மேற்கொள்வது, ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபடு  நல்லது.
சந்திராஷ்டமம் 16.04.2015 மாலை 04.55 மணி முதல்18.04.2015 மாலை 05.22 மணி வரை.


கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே 
      எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்பும் குணம்  கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகுவும், 7&ல் சூரியன், கேதுவும்,  8&ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்கனால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்பபது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்  பெறும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். 

பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 18.04.2015 மாலை 05.22 மணி முதல் 20.04.2015 மாலை 06.54 மணி வரை.



துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே 
     வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு மாத முற்பாதி வரை 6&ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் 10&ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும்.

பரிகாரம். சனி பகவானை வழிபாடு செய்வது ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 20.04.2015 மாலை 06.54 மணி முதல் 22.04.2015 இரவு 11.10 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே 
       நியாய  அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6ல் செவ்வாயும்,11&ல் ராகுவும் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சரிக்கவிருப்பதும் ஓரளவுக்கு சுமாரான நற்பலன்கள் உண்டாகும். அற்புதமான நற்பலன்களை பெற முடியும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தாராள தன வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும்.

பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது  சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 22.04.2015 இரவு 11.10 மணி முதல் 25.04.2015 காலை 07.12 மணிவரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே 
      எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் பண்பு கொண்ட உங்களுக்கு 4&ல் சூரியன் 5&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 12&ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞசாரம் செய்வதும் சுமாரான அனுகூலங்களை உண்டாக்கும் அமைப்பாகும். தேவயைற்ற வீண் அலைச்சல்கள் உண்டாகும் என்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும்.

பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது விஷ்ணு பகவானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 25.04.2015 காலை 07.12 மணி முதல் 27.04.2015 மாலை 06.37 மணிவரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
      நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவராகவும் பேச்சில் தங்களுடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்த கூடியவராகவும் திகழும் கொண்ட உங்களுக்கு 3&ல் சூரியன், 7&ல் குரு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார், உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமான செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொது நலக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 27.04.2015 மாலை 06.37 மணி முதல் 30.04.2015 காலை 07.32 மணிவரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே 
      பிறர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் தேவையின்றி தலையிடாத நியாயவாதிகளாக இருக்கும் உங்களுக்கு 3&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் 3&ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினை ஏற்படுத்தும். ஒரளவுக்கு அனுகூலமளிப்பதாகவே அமையும்.  உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவது நல்லது. வர வேண்டிய பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுப விரயங்களும் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். 

பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது  நல்லது.
சந்திராஷ்டமம் 02.04.2015 இரவு 12.36 மணி முதல் 05.04.2015 மதியம் 12.50 மணி வரை.
30.04.2015 காலை 07.32 மணி முதல் 02.05.2015 மாலை 07.38 மணிவரை 


மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே 
      மற்றவர்களின் சுக துக்கங்களையும் தம்முடைய சுக துக்கங்களாக நினைகும் குணம் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும் 2&ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், 5&ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும் எடுக்கும் முயற்சிகளில் தடைகளையே சந்திப்பீர்கள். சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள், நிம்மதி குறைவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில்  உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல் பட முடியாமல் போகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நிலைஏற்ற இறக்கமாக இருக்கும். வீடு மனை போன்றவற்றை வாங்குவதன் மூலம் செய்யும் செலவுகள் சுபச் செலவாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை தடைகளுக்குப்பின் அடைந்து விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். 

பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவன் முருகன் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 05.04.2015 மதியம் 12.50 மணி முதல் 07.04.2015 இரவு 11.19 மணி வரை.


சுப முகூர்த்த நாட்கள்

03.04.2015  பங்குனி மாதம், 20 ஆம் தேதி வெள்ளிகிழமை, சதுர்தசி திதி, உத்திர  நட்சத்திரம் சித்த யோகம் காலை 09.00 மணி முதல்  10.00 மணிக்குள் ரிஷப இலக்கினம்  
வளர்பிறை.

      06.04.2015  பங்குனி மாதம், 23 ஆம் தேதி திங்கட்கிழமை, துதியை திதி, சுவாதி  நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 06.30 மணி முதல்  07.30 மணிக்குள் மேஷ இலக்கினம் தேய்பிறை.

08.04.2015  பங்குனி மாதம், 25 ஆம் தேதி புதன்கிழமை, சதுர்த்தி திதி, அனுஷ  நட்சத்திரம் சித்த யோகம் காலை 09.00 மணி முதல்  10.00 மணிக்குள் ரிஷப இலக்கினம்  
தேய்பிறை.

15.04.2015  சித்திரை மாதம், 02 ஆம் தேதி  புதன்கிழமை ஏகாதசி திதி, சதய  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல்  07.30 மணிக்குள் மேஷ இலக்கினம்  தேய் பிறை.

22.04.2015  சித்திரை மாதம், 09 ஆம் தேதி புதன்கிழமை, சதுர்த்தி திதி ரோகினி  நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.0 மணி முதல்  07.30 மணிக்குள் மேஷ இலக்கினம்  
வளர்பிறை.

Contact



please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: