காணத்தவறாதீர்
விஜய் டிவியில்
தினமும்
காலை 05.45 மணி முதல் 05.55 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது கட்டுபாடான வாழ்க்கை. ஒரு தேரின் சக்கரங்கள் இரண்டும் ஒரே அளவாய், வட்டமாய், அதற்கேற்ற அச்சாணிகளுடன் அமைந்திருந்தால் தான் அந்த தேர் நகரும் போது அசைந்தாடி செல்வதை பார்க்க ரம்மியமாக இருக்கும். விதியை மதியால் வெல்ல முடியும் என்பது மக்களின் நம்பிக்கை என்றாலும் ஒரு மனிதனின் வாழ்வை முழுமையாக்க கூடிய திருமணம் என்ற சடங்கில் கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனமொத்து நம்பிக்கையுடன் வாழ கற்றுக் கொண்டால் மட்டுமே இங்கு பிரிவுக்கும் பிரச்சனைக்கும் இடமிருக்காது. ஆனால் எல்லோருக்கும் நிம்மதியான, ஒற்றுமையான வாழ்க்கை அமையுமா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையே பிரச்சனையாகி விடக் கூடாது. சில நேரங்களில் கணவன் மனைவியின் பிரச்சனைகளை மற்றவர்கள் பயன்படுத்தி கொள்ளகூடிய சூழ்நிலைகளும் உண்டாகி விடுகின்றன. மனரீதியான பிரச்சனைகளுக்கும், உடல் ரீதியான தேவைகளுக்கும் இன்னொருவரின் ஆறுதல் கிடைக்கும் போது மனம் அதை நாடி தான் செல்லும். இதனால் குடும்பத்தில் சிறிது, சிறிதாக ஆரம்பித்த பிரச்சனைகள் கணவன் மனைவிக்குள் ஆழமாய் ஊடுருவிடும்.
களத்திர ஸ்தானமான 7ஆம் வீடும், 7ஆம் வீட்டின் அதிபதியும் பாவ கோள்களின் சம்மந்தமின்றி பலமாக அமைந்திருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜென்ம லக்னத்திற்கும், ராசிக்கும் 6ஆமிடமாக வரும் பாவம் வம்பு வழக்குகளைப் பற்றி குறிப்பதால், இந்த 6ஆமிடத்திற்குரிய அதிபதி 7ஆமதிபதியுடன் இணைந்தோ, 6ஆமதிபதி 7ஆமிடத்திலும், 7ஆமதிபதி 6ஆமிடத்திலும் அமைந்தோ, 6,7க்கு அதிபதிகள் ஒன்றுக்கொன்று பார்வை பெற்றோ இருந்தால் மண வாழ்வில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும்.
அது போல குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டின் அதிபதி 6&ஆமதிபதியுடன் இணைவது, 6&ஆமதிபதியின் வீட்டிலிருப்பது 2,7இல் பாவ கோள்கள் அமைய பெறுவது போன்றவற்றின் மூலமும் மணவாழ்வில் மகிழ்ச்சி குறைவு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிவினைக்கு வழிவகுக்கும். மேற்கூறிய கோள் அமைப்பு கொண்டவர்களுக்கு 6&ஆமதிபதியின்
தசையோ, புக்தியோ, 6ஆம் வீட்டின் தொடர்புடைய கோள்களின் திசை புக்தியோ,2,7 ல் அமைந்த பாவ கோள்களின் திசை,புக்தியோ நடைபெற்றால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகி பிரிவினையை ஏற்படுத்தும்.
லக்னாதிபதியும், 7ஆமதிபதியும் குடும்பவாழ்விற்கு இன்றியமையாத பங்கை வகிக்கின்றன. இந்த வீட்டதிபதிகள் ஒருவருக்கொருவர் 6,8,12 ஆமிடங்களில் மறைந்திருந்தாலும், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி பிரிய நேரிடுகிறது.
ஜென்ம லக்னத்தில் சனியும், ராகுவும் இணைந்திருந்தாலும், 7ஆமதிபதி வக்ரம் பெற்றிருந்தாலும் மணவாழ்க்கை மகிழ்ச்சியற்று போகும்.
No comments:
Post a Comment