இராகு கேது பெயர்ச்சி பலன்கள்
2014-2016 கன்னி ;
உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அதிக உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும், எப்பொழுதும் சுறுசுறுப்பானவராகவும் விளங்கும் கன்னி ராசி அன்பர்களே! சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 05.07.2015 வரை குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் -ஏற்படாது. குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். 16.12.2014 முதல் சனி பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு பூமி, மனை வாங்க கூடிய அதிர்ஷ்டமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துக் கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.
உடல் நிலை
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றிய படியே இருக்கும். எந்தவொரு காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க முடியாதபடி சோர்வு மந்த நிலை உண்டாகும். மனைவி பிள்ளைகளால் ஏற்படக் கூடிய மருத்துவ செலவுகளால் மன நிம்மதி குறையும்.
குடும்பம் குழந்தை
கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகள் பஞ்சமின்றி இருக்கும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் கிட்டும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சேமிக்க முடியும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கல் யாவும் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும் என்றாலும் மற்றவர்களுக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டி வரும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலமே சாதக பலன்களை பெற முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலங்கள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது சற்று நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீடு மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களால் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் ஆதரவைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பதவிக்கு பங்கம் ஏற்படாது. கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உடன் பழகுபவர்களிடம் கவனம் தேவை.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உறவினர்களிடமும், பங்காளிகளிடமும் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
கலைஞர்களுக்கு
கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் எதிலும் முழு திருப்தி இருக்காது. இருப்பதை பயன் படுத்தி கொள்வதன் மூலம் பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ள முடியும். சிலருக்கு சொந்த கார் பங்களா வாங்கும் யோகம் அமையும்.
மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் முழு முயற்சியுடன் செயல் பட்டால் மட்டுமே நற்பலன்களைப் பெற முடியும். எதிர் பார்க்கும் மதிப்பெண்கள் கிடைக்கும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும், கேது பகவான் உங்கள் ராசியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உங்களுக்கு ஏழரை சனியில் பாத சனியும் நடைபெறுவதால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குரு பகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. தடைபட்டுக் கொண்டிருக்கும் திருமண சுப காரியங்களும் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம், பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பொன் பொருள் சேரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தினைப் பெற முடியும். சற்று போட்டிகளும் நிறைந்திருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 7ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும் என எதிர்பார்க்க முடியாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். 16.12.2014 முதல் சனி பகவான் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதையும் எதிர் கொண்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் வேலை பளு அதிகரித்தாலும் திறம் பட செயல்பட முடியும்.
குரு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். சனி பகவான் 3&இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மிகவும் உத்தமம்.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் உத்திர நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர் பாராத வீண் செலவுகள், பொருளாதார நிலையில் நெருக்கடிகள் உண்டாகும். சனி பகவான் 3இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது. கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் எதிலும் அனுகூலப் பலனை அடைந்து விட முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம் பட செயல் பட முடியாத நிலை உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண் பிரச்சனைகளை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது நல்லது. சனி பகவான் 3&இல் சஞ்சரிப்பதால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் ஒரளவுக்கு குறையும். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பததால் ஆடம்பர செலவுகளை குறைப்பது, பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.
உத்திரம் 2,3,4&ம் பாதங்கள்
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குபவராக இருக்கும் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் சில நேரங்களில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும்.
அஸ்தம்
அழகான முகமும், வசீகரமான உடலமைப்பும் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள், கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நல்லது. பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது மூலம் வீண் பிரச்சனைகளை குறைத்து கொள்ளலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
சித்திரை 1,2ம் பாதங்கள்
முன்கோபம் அதிகம் இருந்தாலும் சிறந்த ஒழுக்கம் கொண்ட உங்களுக்கு உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். சேமிப்புகள் குறையும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் 4,5,6,7,8
நிறம் பச்சை, நீலம்
கிழமை புதன் சனி
கல் மரகத பச்சை
திசை வடக்கு
தெய்வம் ஸ்ரீவிஷ்ணு
பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகுவும் 7இல் கேதுவும் சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது. 16.12.2014 வரை ஏழரை சனி நடைபெறவுள்ளதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும். 05.07.2015 முதல் குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ளதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீப மேற்றி வழிபடுவது நல்லது.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as
R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
No comments:
Post a Comment