இராகு கேது பெயர்ச்சி பலன்கள்
2014 2016 சிம்மம் :
மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்
நல்ல மனவலிமையும், உண்மை பேசும் குணமும், வசீகரமான தோற்ற அமைப்பும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! சர்ப கிரங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 2லும் கேது 8லும் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். 16.12.2014 வரை சனி பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். குருபகவான் 5.7.2015 வரை விரய ஸ்தானத்திலும் அதன் பின்னர் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க விருப்பதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து கொள்வதன் மூலம் அலைச்சலை குறைத்து கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் நடந்து கொள்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
உடல் நிலை
உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டிய காலமாக இருக்கும். வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உஷ்ண கோளாறு சோர்வு, மந்த நிலை யாவும் உண்டாகும். திடீர் மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் உண்டாவதால் குடும்பத்தில் மனநிம்மதி குறைவு ஏற்படும்.
குடும்பம் குழந்தை
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்த நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றும் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைய சற்று தாமத நிலை உண்டாகும். பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்க கூடிய காலம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தேவையற்ற வீண் விரயங்களும் உண்டாகும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வந்த போதிலும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகள் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தி கொள்வது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்படக் கூடிய சம்பவங்கள் நடைபெற்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். புதிய வேலை தேடுபடுவர்கள் கிடைக்கும் பணியினை பயன் படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கணவனிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்களின் ஆதரவைப் பெற முடியும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய காலம் என்பதால் பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் விளை பொருளுக்கேற்ற விலையை பெற முடியாமல் போவதால் போட்ட முதலீட்டினை எடுக்க முடியாமல் போகும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு
வாய்ப்புகள் தேடி வந்த போதிலும் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்காது கிடைப்பதை பயன் படுத்தி கொண்டால் பொருளாதார நிலையை சீர் செய்து கொள்ள முடியும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும்.
மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் ஒரளவுக்கு முன்னேற்றமுடன் செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும். உடல் நல பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனம் தேவை.
ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2ஆம் வீட்டிலும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 8 ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இக்காலங்கள் அவ்வளவு சாதகமானதாக இருக்காது என்பதால் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. சனி பகவான் 3&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் பிரச்சனைகள் ஏற்படும், பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திக்க வேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பாராத இடமாற்றங்கள் ஏற்படும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2ஆம் வீட்டிலும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை தேவைக் கேற்றபடியிருப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்கள் ஏற்படும். இதுவரை 3இல் சஞ்சரித்து நற்பலன்களை ஏற்படுத்திய சனி பகவான் 16.12.2014 முதல் 4அம் வீட்டிற்கு மாறுதலாவதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பமாகின்றது. இதனால் வீண் அலைச்சல் டென்ஷன்கள் அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்க முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடனிருப்பது நல்லது.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் முன் கோபத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் நிம்மதியற்ற நிலைகள் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்ய நினைக்கும் காரியங்களும் உங்களுக்கே பிரச்சனைகளை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரள நிலையிருந்தாலும் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள். சனி பகவான் 4&இல் சஞ்சரிப்பதால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைய தாமத நிலை ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்ள நேரிடும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும்.
குரு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்திலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்திலும் 2,8இல் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும். 05.07.2015 முதல் இது வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு ஜென்ம ராசிக்கு மாறுதலாகவுள்ளார். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகும். சனி 4&இல் சஞ்சரிப்பதால் சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். முடிந்த வரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் சம்மந்தபட்ட வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும்.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2லும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 8லும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களும் சாதகமானது என கூற முடியாது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் உயர்வுகள் கிடைக்க சற்று கால தாமதமாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்த வொரு முயற்சியிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலாளர்களிடமும், கூட்டாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்கவும்.
மகம்
எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதையே விரும்பும் உங்களுக்கு உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை குறைவாகவே காணப்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்றே அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் உண்டாகும். சேமிப்புகள் குறையும்.
பூரம்
மற்றவர் மனம் புண்படாதபடி நடந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் மன நிம்மதியுடன் வாழு முடியும். கணவன் மனைவி விட்டு கொடுத்த நடந்து கொள்வது நல்லது. உற்றா£ல் உறவினர்களின் வருகை வீண் விரயங்களை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
உத்திரம் &1ம் பாதம்
கம்பீரமான நடையும் பெண்களை கவரும் உடலமைப்பும் கொண்ட உங்களுக்கு திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற் கொண்டால் தடைகள் உண்டாகும். எதிர் பார்த்து காத்திருக்கும் உதவிகள் தாமதப்படும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நற்பலனை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் & 1,2,3,9,10,11,12,18
நிறம் & வெள்ளை, சிவப்பு
கிழமை & ஞாயிறு, திங்கள்
கல் & மாணிக்கம்
திசை & கிழக்கு
தெய்வம் & சிவன்
பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்களான ராகு 2&லும், கேது 8&லும் சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது சர்ப சாந்தி செய்வது துர்கை வழிபாடு, விநயாகர் வழிபாடு மேற்க்கொள்வது நல்லது. 16.12.2014 முதல் சனி 4 இல் சஞ்சரிக்க விருப்பதால் சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபடவும். 05.07.2015 வரை குரு 12 லும் அதன் பின்னர் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க விருப்பதால் தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்யவும்.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as
R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
No comments:
Post a Comment