Thursday, January 26, 2012

ஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு

கணவன் மனைவியிடையே உள்ள தொடர்பானது உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போல இணை பிரியாததாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவருக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணையானது மனமொத்து வாழ்வதாக அமைந்து விட்டால், அந்த வாழ்வில் இன்பத்திற்கு எல்லையே இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் அன்போடு வாழும் குடும்ப சூழல் மிக சிறப்பானதாக இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் பிறன் மனைவி நோக்காது, வாழும் தம்பதிகள் தங்கள் குடும்பத்தையும், தம்மை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சிகரமானதாக வைத்துக் கொள்ள முடியும்.

ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் வந்து மென்ன வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் என மனைவியிடம் மட்டுமே தம்முடைய மனக்குறைகளை பகிர்ந்து கொள்ளும் ராமர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள், துன்பங்கள், மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்றாலும், அதில் இருவருக்குமே பங்க உள்ளது என்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ராமன் சீதையைப் போல வாபம் ஜோடிகள் இந்தியாவில் ஏராளம் ஏராளம். இப்படி ஒருவருக்கொரவர் ஒருடல் ஈருயிராய் வாழ்வதென்பது அறிதல்லவா. இப்படி சீதாராமனாய் வாழக்கூடிய யோகம் எத்தனைப் பேருக்க உள்ளது என ஜோதிட ரீதியாக பார்ப்போமா?

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம  லக்னத்திற்கு 7ம் பாவம் களத்திரஸ்தானமாகும். 2ம் வீடு குடும்பஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் 7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருந்து, 7ம் அதிபதி கேந்திர, திரிகோணஸ்தானங்களில் தனித்து அமையப் பெற்று, சுபர் பார்வை மற்றும் சுபர் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும், அப்படியே 7ம் வீட்டில் கிரகங்கள் அமையப் பெற்றாலும் ஒரே ஒரு கிரகமாக இருப்பதும் அதிலும் குறிப்பாக சுபகிரகமாக இருப்பதும் நல்லது.

ஒருவரது வாழ்க்கையில் களத்திரகாரகனாக சுக்கிரன் மிக முக்கிய பங்குவகிப்பதால் அவர் கிரகச்சேர்க்கையின்றி அமைவதும், சுபர் பார்வையுடன், சுபர் நட்சத்திரத்தில்  அமைந்திருப்பதும் நல்லது. குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டில் அதிக கிரகச் சேர்க்கையில்லாமல் இருப்பதும் மிகவும் நல்லது. குருவின் பார்வையானது 7ம் வீட்டிற்கோ, 7ம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ இருப்பதும் மிகவும் சிறப்பு. மேற்கூறியவாறு ஒருவரது ஜாதகத்தில் கிரக அமைப்புகள் அமையுமேயானால் ஏக தாரம் மட்டுமே உண்டாகி வாழ்க்கையில் எந்த விரத சலனங்களும் இன்றி வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இருக்கும்.

பொதுவாக 7ம் அதிபதியும் சுக்கிரனும் கிரகச் சேர்க்கை இல்லாமல் இருப்பது ஏக தாரத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், அக்கிரகங்களுக்கு இருபுறமும் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் பாவி கிரகங்களின் பார்வை பட்டாலும் வாழ்வில் சில பாதிப்புகள் உண்டாகிறது. இப்படி அமையப் பெற்ற பாவகிரகங்களின் தசாபுக்தி நடைபெறுகின்ற போது ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகளை உண்டாவதில்லை.

சுக்கிரன் களத்திரகாரகன் என்றாலும், செவ்வாயும் திருமண வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். செவ்வாயும் சூரியனும்  கூடி ஒருவரின் ஜாதகத்தில்  எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் இரு தாரம் உண்டாக கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனால் செவ்வாய் சூரியன் சேர்க்கை  இல்லாமல் இருப்பது நல்லது.
ஜென்ம லக்னம் எப்படி ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு முக்கியமோ, சந்திரா லக்னமும் அவ்வளவு முக்கியமாகும். சந்திரனுக்கு 7ல் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் சந்திரனுக்கு 7ம் அதிபதி கிரகச் சேர்க்கையின்றி இருப்பதும் நல்லது.
இப்படிப்பட்ட கிரகச் சேர்க்கைகள் ஆண், பெண் ஜாதகங்களில் அமைந்திருக்குமேயானால் வாழ்க்கையில் எந்த பிரச்சினைகளும் இன்றி பெண்கள் சீதையைப் போலவும், ஆண்கள் ராமனைப் போலவும் வாழ முடியும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholoar -0091 72001 63001

No comments: