Saturday, March 19, 2022

Today rasi palan - 20.03.2022

 



Today rasi palan - 20.03.2022

இன்றைய ராசிப்பலன் - 20.03.2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

20-03-2022, பங்குனி 06, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி பகல் 10.07 வரை பின்பு தேய்பிறை திரிதியை. சித்திரை நட்சத்திரம் இரவு 10.40 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

சூரிய

 

 ராகு

 

குரு புதன்

திருக்கணித கிரக நிலை

20.03.2022

 

செவ் சனி சுக்கி

 

 

கேது

 

சந்தி

 

இன்றைய ராசிப்பலன் -  20.03.2022

மேஷம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் கடன் பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.

ரிஷபம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.

சிம்மம்

இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

கன்னி

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். குடும்பத்தில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.

துலாம்

இன்று நீங்கள் புது நம்பிக்கையுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானமாக செயல்பட்டால் வெற்றி அடையலாம். போட்ட திட்டங்கள் சில தடை தாமதங்களுக்குப் பின் நிறைவேறும். உடனிருப்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத சுபசெலவுகள் செய்ய நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். சகோதர சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடு விலகி ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்து ரீதியான பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பெண்களுக்கு வேலைபளு அதிகமாகும்.  உங்கள் ராசிக்கு பகல் 11.10 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் மதியத்திற்கு பின் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானம் தேவை.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.10 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

 

2 comments:

Unknown said...

Always fake prediction you are.🤮🤮🤮 Waste

Unknown said...

Very worst