Saturday, July 17, 2021

வார ராசிப்பலன் -- ஜுலை 18 முதல் 24 வரை 2021

 

வார ராசிப்பலன் -- ஜுலை 18 முதல் 24 வரை 2021

ஆடி 2 முதல் 8 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

 

ராகு 

புதன்

குரு (வ)

திருக்கணித கிரக நிலை

 

சூரிய செவ்

சனி (வ)

சுக்கி

 

கேது  

சந்திர

 

 

கிரக மாற்றம் இல்லை

ஆடி 04 (20-07-2021) சிம்ம செவ்வாய். (மாலை 5.55)   

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

துலாம்         - 17-07-2021 பகல் 02.07 மணி முதல் 19-07-2021 மாலை 04.53 மணி வரை.

விருச்சிகம் - 19-07-2021 மாலை 04.53 மணி முதல் 21-07-2021 மாலை 06.29 மணி வரை.

தனுசு            - 21-07-2021 மாலை 06.29 மணி முதல் 23-07-2021 இரவு 07.57 மணி வரை.

மகரம்          - 23-07-2021 இரவு 07.57 மணி முதல் 25-07-2021 இரவு 11.47 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

22.07.2021 ஆடி 06 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசி திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவு, வீண் செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குரு வக்ர கதியில் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்-- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -           18, 24.

சந்திராஷ்டமம் - 19-07-2021 மாலை 04.53 மணி முதல் 21-07-2021 மாலை 06.29 மணி வரை.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கணவன்-- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். பெரிய தொகைகளை மட்டும் ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -           18, 19, 20.

சந்திராஷ்டமம் - 21-07-2021 மாலை 06.29 மணி முதல் 23-07-2021 இரவு 07.57 மணி வரை.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதும், வரும் 20-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்கள் பலமும் வளமும் கூடும். தொழில் வியாபார ரீதியாக ஏற்றங்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதன் மூலம் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்-- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்-- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் நல்லது. சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வதன் மூலம் மேன்மையான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -                       19, 20, 21, 22,

சந்திராஷ்டமம் - 23-07-2021 இரவு 07.57 மணி முதல் 25-07-2021 இரவு 11.47 மணி வரை.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களை பெறுவீர்கள். சூரியன், செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எந்த விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இருக்காது. கொடுக்கல்-- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வெளி மாநிலங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். பிரதோஷ நாளில் சிவ வழிபாடும், ஏகாதசியில் விஷ்ணு வழிபாடும் செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       22, 23, 24.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் சனி, 11-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாக இனிய நிகழ்ச்சிகள் நடக்ககூடிய வாராமாக இவ்வாரம் இருக்கும். பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் சுப செலவுகள் செய்ய நேரிடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடைக்குப் பின் நிறைவேறும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. சூரியன் 12-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. மற்றர்களை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பது, ஜாமீன் கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தைக் கடை பிடிப்பது உத்தமம். சிவ பெருமானையும், முருக கடவுளையும் வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள் -                       18, 19, 24.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 10-ல் சஞ்சரிப்பதும், 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதல் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் விலகி அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். பல புதிய பொறுப்புகள் வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்து நல்ல லாபம் காண்பீர்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       19, 20, 21.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் புதன், 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களது செல்வம் செல்வாக்கு மேலோங்கும் நிலை, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் அமைப்பு உண்டாகும். எதிர்பாராத தனவரவு ஏற்படும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்-- மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்-- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறும். சிலருக்கு தேடி வரும் புதிய பொறுப்புகளால் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். துர்கை அம்மனையும் சனி பகவானையும் வழிபாடு செய்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -                       18, 19, 22, 23.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

என்ன தான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 10-ல் சுக்கிரன், வரும் 20-ஆம் தேதி முதல் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சியில் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் சிறு சிறு செலவுகள் செய்ய நேரிடும். கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு இருப்பதால் நெருங்கியவர்களை, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்-- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் மூலம் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். பிரதோஷ நாளில் சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடும் மேற்கொள்ளலாம்.

வெற்றி தரும் நாட்கள் -                       19, 20, 21, 24.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரமாகும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம். கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. தொழில் ரீதியாக வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சற்றே தாமதம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -                       18, 19, 22, 23.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு 11-ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படலாம். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. முடிந்த வரை வீண் பேச்சுகளை தவிர்ப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்-- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -                       18, 19, 20, 21, 24.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. கடன்களும் சற்று குறையும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்-- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் சிறு தடைக்குப் பின் கிடைக்கப் பெறும். மகாலட்சுமி தேவிக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       20, 21, 22, 23.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

சமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 4-ல் புதன், வரும் 20-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். கணவன்-- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பணம் கொடுக்கல்-- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். விஷ்ணு பகவானையும், குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வழிபட்டால் செல்வ நிலை பெருகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       22, 23, 24.

சந்திராஷ்டமம் -17-07-2021 பகல் 02.07 மணி முதல் 19-07-2021 மாலை 04.53 மணி வரை.

 

 

No comments: