வார ராசிப்பலன் - மார்ச் 1 முதல் 7 வரை
மாசி 18 முதல் 24 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில்
தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு,
இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
சந்தி சுக்கி
|
|
ராகு
|
புதன் (வ)
சூரிய
|
திருக்கணித கிரக நிலை
|
|
|
சனி
|
|
||
கேது குரு செவ்
|
|
|
|
கிரக மாற்றம் இல்லை
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம்
28-02-2020 அதிகாலை 01.08 மணி
முதல் 01-03-2020 பகல் 01.18 மணி வரை.
ரிஷபம்
01-03-2020 பகல் 01.18 மணி முதல்
03-03-2020 இரவு 11.03 மணி வரை.
மிதுனம்
03-03-2020 இரவு 11.03 மணி முதல்
06-03-2020 அதிகாலை 04.55 மணி வரை.
கடகம்
06-03-2020 அதிகாலை 04.55 மணி
முதல் 08-03-2020 காலை 06.52 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
02.03.2020 மாசி 19 ஆம் தேதி
திங்கட்கிழமை சப்தமி திதி ரோகிணி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல்
10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை
06.03.2020 மாசி 23 ஆம் தேதி
வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி
முதல் 08.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
தைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன்
பிறந்தது என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல்
கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் ராகு, 9-ல்
குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சூரியன் லாப
ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு, குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள்
கைகூடும் யோகம் உண்டாகும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை மேலோங்கும்.
எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க
முடியும். உடல் நிலையில் சற்று மந்தநிலை ஆரோக்கிய குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய
பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவியிடையே அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். பொன்,
பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால்
லாபம் கிட்டும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய வாய்ப்புகள்
உங்களை தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம்
காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். மாணவர்கள் நல்ல
மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். வெள்ளிக்கிழமை
லட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 4, 5.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பார்ப்பதற்கு சாதாரணப் பேர்
வழியாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட
ரிஷப ராசி நேயர்களே, சூரியன், புதன் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் எதையும்
எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது
ஏற்றத்தை அடைவீர்கள். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி
செய்து விடுவீர்கள். செவ்வாய் 8-ல், சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய
செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, கொடுக்கல்--
வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு
பாதிப்புகள் வந்து விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்
உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை அடைய
முடியும். அசையும், அசையா சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் பெரிய
தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரம்
செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்
பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் சற்று
மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் விடாமுயற்சியுடன் படிப்பது உத்தமம்.
கிருத்திகையன்று விரதமிருந்து முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 6, 7.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
தன்னுடைய ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின்
நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம
ராசிக்கு இருப்பதாலும் 9-ல் புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு
வகையில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி ஒருவரை
ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப்
பின் அனுகூலப்பலன் கிடைக்கும். பண வரவுகள் தாராளமாக அமைந்து தேவைகள் யாவும்
பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகலாம்.
உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால்
லாபங்கள் பெருகும். வியாபார ரீதியான பயணங்களால் வெளிவட்டார தொடர்புகள்
விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு
கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும்
உதவிகள் கிடைக்கும். சனி பகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது
உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 4, 5.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக
பேசும் வெகுளித்தனமும், பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும்
பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது, 10-ல்
சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சனி 7-ல்,
சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல்
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள்
பூர்த்தியாகும். ஆடம்பர பொருள், ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் கணவன்-
மனைவி விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து
செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக
நடைபெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்
வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. அசையும், அசையா
சொத்துக்கள் வாங்குவதில் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும்
மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி கலை துறைகளிலும் சிறந்து
விளங்குவார்கள். அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 6, 7.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு
நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும்
குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 9-ல் சுக்கிரன்,
11-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடக்கும் யோகம்,
தொழில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் அமைப்பு உண்டு. எடுக்கும் முயற்சிகள்
அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல
பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும்.
குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். தேவைகள் யாவும்
பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உடல்
ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை தடையின்றி
செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில்
எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.
மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பிரதோஷ நாளில்
சிவ வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
தவறு செய்பவர்களைக்கூட தன்
அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி
நேயர்களே, மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினையையும்
எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டு. பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள்
பூர்த்தியாகும். செவ்வாய், குரு 4-ல் இருப்பதால் பொருளாதார ரீதியாக சிறு சிறு
நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது, எதிலும் சிக்கனமாக
இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ
செலவுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார்
உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல்
ஏற்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் மற்றும் இடமாற்றமும் சிறு தடை
தாமத்திற்கு பின் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் பேசும் போது பொறுமையை
கடைப்பிடித்தால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு
அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழி சலுகைகள் கிடைக்கும்.
முருக வழிபாடும் லட்சுமி வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 4, 5, 6, 7.
சந்திராஷ்டமம் - 28-02-2020 அதிகாலை 01.08 மணி முதல் 01-03-2020 பகல் 01.18 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல்
எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள்
ராசியதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், கேது
சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் பரிபூரண வெற்றியினை தரும் அமைப்பாகும்.
பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த
மனஸ்தாபங்கள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரிய
பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல்
ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வந்தாலும் பெரிய கெடுதி இருக்காது.
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும்
படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நல்லது.
சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள்
நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களை
வசூலிப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளி வட்டாரத் தொடர்புகள்
விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும்.
உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி
பள்ளி, கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை
வழிபட்டால் தனவரவு உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 6, 7.
சந்திராஷ்டமம் - 01-03-2020 பகல் 01.18 மணி முதல் 03-03-2020 இரவு 11.03 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
மற்றவர்களின் எதிர்ப்புகளுக்கு
அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக
ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 4-ல் புதன் சஞ்சரிப்பதால்
பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்த கால
பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை
இருக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய சொத்துக்கள்
வாங்கும் யோகம் உண்டாகும். சூரியன் 4-ல் இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள்
ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். விட்டு கொடுத்து
செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். தொழில்,
வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில்
எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றலை பெறுவீர்கள். தொழிலாளர்களையும்,
கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில்
நிம்மதியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.
மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள்.
சிவ வழிபாடு செய்வது, முருக வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது
மேன்மையை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3.
சந்திராஷ்டமம் - 03-03-2020 இரவு 11.03 மணி முதல் 06-03-2020 அதிகாலை 04.55 மணி வரை.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
யாருக்கும் கீழ் படிந்து
அடிமையாக நடப்பது என்பதை இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே,
மாத கோளான சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும், பஞ்சம ஸ்தானமான 5-ல்
சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பாகும். பொருளாதார ரீதியாக நற்பலன்களை
அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக
அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் செவ்வாய், 7-ல் ராகு
சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். பேச்சில்
நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து
செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. திருமண சுபகாரியங்கள்
சிறு தடைக்குப் பின் கைகூடும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று
தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை
கொடுக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மறைமுக
எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தினைப் பெறமுடியும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை
தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ்
படிந்து நடந்து கொண்டால் அனைவரின் ஆதரவுகளையும் பெறுவீர்கள். விநாயகர் வழிபாடும்
முருக வழிபாடும் நற்பலன்களை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5.
சந்திராஷ்டமம் - 06-03-2020 அதிகாலை 04.55 மணி முதல் 08-03-2020 காலை 06.52 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும்,
நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி
நேயர்களே, உங்கள் ராசியில் சனி, 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால்
எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ
செலவுகள் செய்ய நேரிடும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண்
பிரச்சினைகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்படுவது
உத்தமம். கொடுத்த கடன்களை பெறுவதில் சற்று சிரமபட வேண்டியிருக்கும். பண வரவுகள்
சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சுக்கிரன் 4-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதால்
எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். திருமண
சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து
செல்ல வேண்டியிருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது
நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் பொருட் தேக்கம்
ஏற்படாது. எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர்நீச்சல் போட வேண்டி வரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால்
அலைச்சல் ஏற்படும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன்
செயல்பட வேண்டும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் சகல
நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 4, 5, 6, 7.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தனக்கு பிடித்தவர்களிடம்
அன்புடன் நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பிடிவாத
குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய்,
குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன், 5-ல்
ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், ஆரோக்கியத்தில் சற்று
அக்கறை எடுத்துக் கொள்வதும் நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள்
உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற
முடியும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத உதவிகளும் சில
கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை
மாறி சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். நிறைய போட்டிகள் நிலவினாலும் எல்லாவற்றையும்
சமாளிக்கும் ஆற்றலை அடைவீர்கள். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்புடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப்
பெறுவதுடன் எதிர்பார்த்த உயர்வையும் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம்
செலுத்துவது உத்தமம். சனி பிரதோஷ நாளில் சிவ பெருமானையும் சனி பகவானையும் நந்தி
வழிபாட்டையும் மேற்கொண்டால் சகல தோஷங்களும் விலகி நன்மை உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 6, 7.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
சின்ன சின்ன விஷயங்களில் கூட
குற்றம் கண்டு பிடித்து பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என
உணர்த்தும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 10-ல்
செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பதால் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய
இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றமிகுந்த
பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கிடைக்க வேண்டிய
வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின்
ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன்
செயல்பட்டு எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவார்கள். சிலருக்கு வெளியூர்,
வெளிநாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பும் அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்து
செல்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி
மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன்- மனைவி ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய
தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள
கூடிய வாய்ப்புகள் அமையும். விஷ்ணு பகவானையும் லட்சுமி தேவியையும் வழிபட்டால் சகல
சௌபாக்கியங்களும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3.
No comments:
Post a Comment