வார ராசிப்பலன் - பிப்ரவரி 09 முதல் 15 வரை
தை 26 முதல் மாசி 03 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L,
M.A.astro. PhD in Astrology.
No:
19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.
வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
சுக்கி
|
|
|
ராகு
|
புதன்
|
திருக்கணித கிரக நிலை
|
சந்தி
|
|
சனி சூரிய
|
|
||
கேது குரு செவ்
|
|
|
|
கிரக மாற்றம்
13-02-2020 கும்பத்தில் சூரியன்
பகல் 03.03 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கடகம்
07-02-2020 மாலை 06.24 மணி முதல்
09-02-2020 இரவு 07.43 மணி வரை.
சிம்மம்
09-02-2020 இரவு 07.43 மணி முதல்
11-02-2020 இரவு 07.43 மணி வரை.
கன்னி
11-02-2020 இரவு 07.43 மணி முதல்
13-02-2020 இரவு 08.22 மணி வரை.
துலாம்
13-02-2020 இரவு 08.22 மணி முதல்
15-02-2020 இரவு 11.18 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
12.02.2020 தை 29 ஆம் தேதி
புதன்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல்
10.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை
13.02.2020 மாசி 01 ஆம் தேதி
வியாழக்கிழமை பஞ்சமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல்
10.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை
14.02.2020 மாசி 02 ஆம் தேதி
வெள்ளிக்கிழமை சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல்
08.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை
1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி
எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே,
இவ்வாரத்தில் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 9-ல் குரு, 11-ல் புதன்
சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். தொழில்
வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றம்
ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி
வரும். பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு
பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சிரமமின்றி முடித்து விடுவீர்கள். தாராள
தனவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவனர்களிடம் பேச்சில்
நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
சாதகமான பலன் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை
தாமதத்திற்கு பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின்
பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும்
கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சனி பகவான் வழிபாடு
மற்றும் மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில்
தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி
சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 10-ல் புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான
அமைப்பாகும். உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். செவ்வாய், குரு 8-ல்
இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில்
கட்டுப்பாடுடன் இருப்பதும் மிகவும் நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் விட்டு
கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர
செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். அசையும் அசையா
சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார்
உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு
மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள்
எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற கடின உழைப்பு தேவை. குருப்ரீதியாக
தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, சஷ்டியன்று முருக வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் 9, 14, 15.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்
சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்ட மிதுன ராசி
நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 9-ல் புதன், 10-ல் சுக்கிரன்
சஞ்சரிப்பதாலும் தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சூரியன், சனி 8-ல்
இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது, நெருங்கியவர்களை
அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை செய்ய
நேரிடும். ஆடம்பர செல்வுகளை குறைத்துக் கொண்டால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து
விட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலமான பலன்
உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால்
பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்களை சற்று
தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து
எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆதரவாக
இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை ஏற்படும். சிவ வழிபாடு செய்வது, சனிக்குரிய
பரிகாரங்கள் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 10, 11.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர
ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருண ரோக
ஸ்தானமான 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல
அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார
ரீதியாகவும் மேன்மைகள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறைந்து அன்றாட
பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பீர்கள். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து
செல்வது, குடும்பத்தில் உள்ளவர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது
நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவு அனுகூலப் பலனை அடைவீர்கள். ஆடம்பர செலவுகளை
குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்காக
எடுக்கும் முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள்
தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய
முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில்
அனுகூலப்பலன் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக
அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள்
தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் குறைத்து கொள்வது நல்லது. விஷ்ணு
வழிபாட்டை மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 12, 13.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே
அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள்
ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதும் 5-ல் குரு பலமாக
சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் சகலவித செல்வத்தையும் அடையும் யோகம்
உங்களுக்கு உண்டு. நீங்கள் நினைத்த எல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில்
வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகள்
தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான யோகம் உண்டு.
சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த
கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள்
சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள்
வாங்கும் முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல்-
வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது
கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சற்று முழு முயற்சியுடன் ஈடுபடுவது நல்லது.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயக வழிபாட்டை மேற்கொண்டால் எடுத்த காரியம் வெற்றியில்
முடியும்.
வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 14, 15.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்த
வரை பிறர் மனதை புண் படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு
செவ்வாய், குரு, கேது 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க
இடையூறுகள் உண்டாகும். சுக்கிரன் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால்
எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக
இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வண்டி வாகனங்களில் செல்லும்
போது கவனமாக இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களில் சாதகப் பலன் உண்டாகும். பண
வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை
குறைத்துக் கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு
ஆதரவுடன் செயல் படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம்
தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். தொழில்
வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபம்
கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட
செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல
மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சஷ்டியன்று முருக
வழிபாடு செய்வது நற்பலன்களை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 12, 13.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான
பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல்
செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் புதன் 5-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு
என்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். நீங்கள் எண்ணிய
எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். தாராள தனவரவு ஏற்பட்டு குடும்பத்தில்
மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள்
உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும்.
திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும். ஆடம்பர
செலவுகளை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்
டென்ஷன் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது உத்தமம். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால்
அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. சொந்த வீடு, வாகனம்
போன்றவற்றை வாங்கும் எண்ணம் சிறு தாமதத்திற்குப் பின் நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் யாவும் தடையின்றி கிட்டும்.
மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானுக்கு எள் தீபம்
ஏற்றி வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 14, 15.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும்
தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம
ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், சனி, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா
வகையிலும் ஏற்றமான பலன்களை அடைவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகும்.
பணவரவுகள் கிடைப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று தேவைகள்
பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும்
வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை
அடைவீர்கள். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். அசையும் அசையா சொத்துகளில் இருந்த
வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து
செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும்
ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில்
நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு அரசு வழயில் எதிர்பார்க்கும் உதவிகள்
கிடைக்கும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12, 13.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
தன்னுடைய கொள்கைகளை
யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி
நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், கேது, 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால்
நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரமாகும். தேவையில்லாத அலைச்சல்கள்,
நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு
விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்-- மனைவியிடையே வாக்கு வாதங்கள்
ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். முன்கோபத்தை குறைத்துக்
கொள்வது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில்
தாமதப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை
குறைத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட
வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால்
வீண் விரோதங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு
காரியத்திலும் நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். போட்டிகள்
இருந்தாலும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில்
மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது
உத்தமம். விநாயகர் வழிபாடு மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்தால் நற்பலன்கள்
உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15.
சந்திராஷ்டமம் - 07-02-2020 மாலை 06.24 மணி முதல் 09-02-2020 இரவு 07.43 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக்
கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத
குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், சனி சஞ்சரிப்பதால்
எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. 2-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால்
எதிர்பாராத தன சேர்க்கைகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும்.
தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு
எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக
சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.
கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைப்பது,
பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து
கொண்டால் அவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். அசையும் அசையா
சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான
நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரிய தொகைகளை
ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல
மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு
மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 14, 15.
சந்திராஷ்டமம் - 09-02-2020 இரவு 07.43 மணி முதல் 11-02-2020 இரவு 07.43 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான
தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல்
கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய்,
குரு, கேது சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு, தொழில் பொருளாதார ரீதியாக மேன்மைகள்
உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். சொந்த தொழில்
வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட
வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக
செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து
வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. திருமண சுப
காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்
பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தேவையற்ற
பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். பணம்
சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல
மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடும்
அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11.
சந்திராஷ்டமம் - 11-02-2020 இரவு 07.43 மணி முதல் 13-02-2020 இரவு 08.22 மணி வரை.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
தயாள குணமும், பொறுமையும்
தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி
வரும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் தனசேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது தேவைகள்
பூர்த்தியாகும். வரும் 13-ஆம் தேதி வரை சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின்
ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும்
நிறைந்திருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை
உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கிய
பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில்
சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரத்தில்
நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும் யோகம் உண்டாகும். எந்தவித
போட்டிகளையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள்
தேடி வரும். உத்தியோத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் நல்ல நட்புகளாக
தேர்ந்தெடுத்து பழகுவது, கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். மகாலட்சுமி வழிபாடு
செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12, 13.
சந்திராஷ்டமம் - 13-02-2020 இரவு 08.22 மணி முதல் 15-02-2020 இரவு 11.18 மணி வரை.
No comments:
Post a Comment