Monday, January 20, 2020

ரிஷபம் ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023


ரிஷபம் ராசி - திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
இனிமையான சுபாவமும், எல்லோரையும் வசீகரப்படுத்த கூடிய ஆற்றலும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடைபெற்றதால்  பல்வேறு வகையில் இன்னல்களை சந்தித்து வந்தீர்கள். உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சனிபகவான் தர்மகருமாதிபதி என்பதால் யோககாரகன் ஆகும். திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை பாக்கிய ஸ்தானத்தில் மகர ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். எதிர்பாராத தன வரவுகள் கிடைக்கப் பெற்று செல்வம் செல்வாக்கு உயரும். பழைய கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு புது வீடு கட்டி குடி போகும் யோகம் கிட்டும். உடல்நிலையில் தெம்பும், உற்சாகமும் உண்டாகி எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். கொடுக்கல்---- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த கால தேக்கங்கள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த கால வேலைபளு குறைந்து பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பாராத பொருளாதார மேன்மை உண்டாகும்.
சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள இக்காலத்தில் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் 20-11-2020 முதல் 20-11-2021 வரையும், 11-ஆம் வீட்டில் 13-04-2022 முதல் 22-04-2023 வரையும் சஞ்சரிக்க உள்ளதால் இக்காலங்களில் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் எளிதில் கைகூடும். நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரகூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திரபாக்கியம் உண்டாகும். தற்போது 2, 8-ல் சஞ்ரிக்கும் ராகு, கேது வரும் 23-09-2020 முதல் 12-04-2022 முடிய 1, 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் உண்டாகும். கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தால் ஆரோக்கிய ரீதியாக ஏற்படும் சிறு சிறு பாதிப்புகளை எளிதில் எதிர்கொள்ள முடியும்.

உடல்ஆரோக்கியம்  
உடல்நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செல்படுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தால் அன்றாட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். கடந்த கால மருத்துவ செலவுகள் யாவும் படிப்படியாக குறையும். மனைவி பிள்ளைகள் மற்றும் நெருங்கியவர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சி தர கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து கடந்த கால கடன்கள் குறையும் யோகம், சேமிப்புகள் அதிகரிக்கும் அமைப்பு உண்டாகும். நவீனகரமான பொருட் சேர்க்கை, வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பிரிந்த உறவினர்களும் தற்போது நட்பு பாராட்டு நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட சுபகாரியங்கள் கை கூடும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் அற்புதமான லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். வெளியூர், வெளிநாடு தொடர்புகளால் அனுகூலம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும்.
தொழில், வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். இதுநாள் வரை இருந்து வந்த தேக்க நிலைகளும், போட்டி பொறாமைகளும், மறைந்து தொழிலில் நல்ல வளர்ச்சி லாபங்கள் அடையும் யோகம் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும். உடனிருக்கும் வேலையாட்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
உத்தியோகம்
உத்தியோக நிலையில் இதுநாள் வரை தடைப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வுகள் யாவும் இனி எளிதில் கிடைக்கும். மேலதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் உங்களின் வேலை பளுவை குறைத்துக் கொள்ள உதவும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் ஏற்படும்.
அரசியல்
உங்கள் வாழ்வில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்த கூடிய இனிய காலமாக இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகி பதவிகளில் மேன்மை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்கள் மிது இருந்த அவப்பெயர்கள் நீங்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டினை எளிதில் எடுத்து விட முடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பங்காளிகள் வழியில் இருந்த கருத்து வேறுப்பாடுகள் குறையும்.
கலைஞர்கள்
எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கிடைக்க பெற்று மகிழ்ச்சி உண்டாகும். கடந்த கால நெருக்கடிகள் விலகி பெயர், புகழ் உயரும். கலை, இசை, நாட்டியம், சங்கீத துறைகளில் உள்ளவர்கள் ஏற்றம் பெறுகின்ற காலமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைத்து புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலை ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்கள்
பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொன் பொருள், ஆடை, ஆபரணங்கள் சேரும். சிலர் புது வீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும், பணிபுரியும் பெண்களுக்கு வேலையில் திருப்தியும் மன நிறைவும் ஏற்படும்.
மாணவ- மாணவியர்
மந்த நிலை விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். விளையாட்டுத் துறைகளில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை மன மகிழ்ச்சியை உண்டாக்கும். மேற்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்ல கூடிய யோகமும் உண்டாகும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுப் சிறப்பாக இருக்கும்.

சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான பதவிகளைப் பெறுவா£ர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடையலாம். சர்ப்பகிரகமான ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும், கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பதும் நன்மை அளிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷத்திலும் கவனம் தேவை. குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நன்மையை தரும்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை
சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 2-ல் ராகு, கேது சஞ்சரிப்பதாலும் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்க முடியும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாமல் இருக்கும். சிலருக்கு பூமி மனையால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களுக்கு முன் ஜாமீன் கொடுப்பதால் வீண் விரோதங்களை சந்திக்க நேரிடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலமான பலன்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சற்று ஆறுதலாக அமைந்து வேலைபளு குறையும். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உடல் நிலைகளில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வரும் 20-11-2020 முதல் குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்கள் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைத்து இருக்கும் மன கவலை நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை
சனிபகவான் உங்கள் ராசிக்கு 9-ல் திருவோணம் நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். வெளியூர், வெளிநாட்டு செல்ல கூடிய வாய்ப்புகள் அமையும். வெளிவட்டார தொடர்புகளால் அனுகூலமானப் பலன்கள் கிட்டும். எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடைவார்கள். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. ராகு கேதுவுக்கு பரிகாரமாக அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை
சனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்துக் கொண்டால் அனுகூலமான பலன்களை அடையலாம். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாக கூடும் என்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுப்பது நடப்பது நல்லது. குரு அதிசாரமாக 10-ல் சஞ்சரிப்பதாலும் 20-06-2021 முதல் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் நல்லது நடக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்றாலும் கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது விநாயகர் வழிபாடு செய்வது கெடுதியை குறைக்கும்.
சனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை
சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் சந்திரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும், கடன்களும் சற்று குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப்பின் கை கூடும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சற்றே அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். வரும் 20-11-2021 முதல் குரு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும் என்றாலும் வேலை ஆட்களை சற்று அனுசரித்து செல்வது, அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். 
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை
சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலும் திறமையும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து எதிலும் முன்னேற்றமான நிலை இருக்கும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். குரு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்து விடக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் மட்டுமே அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். வெளியூர் பயணங்களும் அதன் மூலம் பொருளாதார மேன்மையும் உண்டாகும். ராகு கேதுவுக்கு பரிகாரமாக அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை
சனிபகவான் அதிசாரமாக 10-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு ஆண்டு கோளான குரு 11-ல், சர்ப்ப கிரகமான கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும், பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் எளிதில் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நவீனகரமான பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உடல் நிலையில் இருந்த மந்த நிலை மறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே உள்ள கருத்து வேறுப்பாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும், தொழில் வியாபாரத்தில் சிறிது மந்த நிலை தோன்றினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. அடையவேண்டிய இலக்கை அடைந்து வீடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
சனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை
சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் குரு 11-ல், கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் உடல்நிலையில் இருந்த பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். கடந்த கால கனவுகள் நினைவாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் எளிதில் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்த தேக்கங்கள் மறைந்து லாபங்களை அடைய முடியும். நண்பர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். விநாயகரை வழிபடுவதும் துர்க்கையம்மனை வழிபடுவதும் உத்தமம்.
சனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை
சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிப்பதும், குரு 11-ல், கேது 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். தன வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிறைவேற கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் நிலவும். தொட்டதெல்லாம் துலங்க கூடிய பொற் காலமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். நீங்கள் எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் லாபகரமான பலனை அடைய முடியும். எந்த போட்டிகளையும் எதிர்கொள்ள கூடிய வலிமை வல்லமை உண்டாகும்.  கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8             நிறம் - வெண்மை, நீலம்,          கிழமை - வெள்ளி, சனி
கல் -  வைரம்              திசை - தென்கிழக்கு,                  தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி

No comments: