Thursday, November 22, 2018

வார ராசிப்பலன் - நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை


வார ராசிப்பலன் - நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை 
கார்த்திகை 9 முதல் 15 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






செவ்
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது 

சனி
சூரிய குரு புதன் (வ)
  சுக்கி


கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மிதுனம்         25-11-2018 அதிகாலை 02.19 மணி முதல் 27-11-2018 அதிகாலை 04.17 மணி வரை.
கடகம்              27-11-2018 அதிகாலை 04.17 மணி முதல் 29-11-2018 காலை 06.40 மணி வரை.
சிம்மம்            29-11-2018 காலை 06.40 மணி முதல் 01-12-2018 காலை 10.06 மணி வரை.
கன்னி              01-12-2018 காலை 10.06 மணி முதல் 03-12-2018 மதியம் 02.51 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
25.11.2018 கார்த்திகை 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

28.11.2018 கார்த்திகை 12 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் இதுவரை உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் பிரச்சினைகள் யாவும் விலகி ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவு ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். சூரியன், குரு 8-ல் இருப்பதால் உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். சிவ வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 1.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும் பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபங்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும், ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பொன், பொருள் சேரும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். சனி பகவானை வழிபாடு செய்வதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்களுக்கு தைரியத்தை தரக்கூடிய அமைப்பாகும். எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குரு 6-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். முருக வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்தால் நன்மை உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 29, 30.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலத்துவது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும்.  மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 1.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதும் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகள், வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பணம் வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலையே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகளை சந்திக்க நேரிடலாம். உடல்நிலையில் சோர்வு, கை, கால் வலி ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. அம்மன் வழிபாடு செய்வதும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 29, 30.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 27, 28, 1.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணம் பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றையும் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறகூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பாராத அளவிற்கு லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளையும், கௌரவமான பதவி உயர்வுகளையும், அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில், வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று அபிவி-ருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29, 30.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், குரு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், ஏழரைச்சனி நடப்பதாலும் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவினை தவிர்க்கலாம். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். தேவையற்ற அலைச்சல்களால் எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெறமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 1.
சந்திராஷ்டமம் -   25-11-2018 அதிகாலை 02.19 மணி முதல் 27-11-2018 அதிகாலை 04.17 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே குரு பகவான் சாதகமற்று இருந்தாலும் 3-ல் செவ்வாய் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்களால் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற கடின முயற்சி தேவை. முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 1.
சந்திராஷ்டமம் -   27-11-2018 அதிகாலை 04.17 மணி முதல் 29-11-2018 காலை 06.40 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு, சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவு பெற்று கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறையும் வாரமாக இவ்வாரம் இருக்கும். சிறப்பான பணவரவால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வார்கள். துர்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 27, 28.
சந்திராஷ்டமம் -   29-11-2018 காலை 06.40 மணி முதல் 01-12-2018 காலை 10.06 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் உங்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29, 30.
சந்திராஷ்டமம் -   01-12-2018 காலை 10.06 மணி முதல் 03-12-2018 மதியம் 02.51 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு பாக்கிய ஸ்தானத்தில் புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதும் வலமான பலனை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், கணவன்- மனைவியிடையே அன்யோன்யமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் ஓரளவு சிறப்புடன் இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். 10-ல் சனி 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கு சற்று தாமத நிலை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்படும் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். மகா லட்சுமி வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 1.

No comments: