Friday, November 9, 2018

வார ராசிப்பலன் - நவம்பர் 11 முதல் 17 வரை


வார ராசிப்பலன் - நவம்பர் 11 முதல் 17 வரை 
ஜப்பசி 25 முதல் கார்த்திகை 1 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





செவ்
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது 

சனி சந்தி
புதன் குரு 
சூரிய
சுக்கி (வ)

கிரக மாற்றம்
16-11-2018 விருச்சிக சூரியன் மாலை 06.32 மணிக்கு
16-11-2018 சுக்கிரன் வக்ர முடிவு மாலை 04.15 மணிக்கு
17-11-2018 புதன் வக்ர ஆரம்பம் காலை 07.50 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு                  10-11-2018 இரவு 09.56 மணி முதல் 13-11-2018 காலை 09.22 மணி வரை.
மகரம்                                13-11-2018 காலை 09.22 மணி முதல் 15-11-2018 இரவு 10.23 மணி வரை.
கும்பம்               15-11-2018 இரவு 10.23 மணி முதல் 18-11-2018 காலை 10.09 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
11.11.2018 ஐப்பசி 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.30 மணி முதல் 08.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

14.11.2018 ஐப்பசி 28 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் பலமாக சஞ்சரிப்பதும், சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு நற்பலன் உண்டாகும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கும் வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        13, 14, 15, 16, 17.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளத் தொகைகள் கைக்கு கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது. சக்தி வழிபாடு மேற்கொள்வதும் நற்பலனை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -        16, 17.
சந்திராஷ்டமம் -         10-11-2018 இரவு 09.56 மணி முதல் 13-11-2018 காலை 09.22 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 6-ல் குரு, 7-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெற அவர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த பணத்தை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படும். வரும் 16-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் வார இறுதியில் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கவனம் அதிக எடுத்து கொள்வது உத்தமம். துர்கையம்மனையும், தட்சிணாமூர்த்தி தெய்வத்தையும் வணங்கி வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        11, 12.
சந்திராஷ்டமம் -         13-11-2018 காலை 09.22 மணி முதல் 15-11-2018 இரவு 10.23 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு 6-ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். சகல விதத்திலும் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் சற்று குறையும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் சாதகப் பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்க சற்று கால தாமதமாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிவ பெருமானையும், முருக கடவுளையும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        11, 12, 13, 14, 15.
சந்திராஷ்டமம் -         15-11-2018 இரவு 10.23 மணி முதல் 18-11-2018 காலை 10.09 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடையும் அமைப்பு உங்களுக்கு உண்டு. 4-ல் புதன் 6-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் பல வழிகளில் தேடி வரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமத நிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். அம்மன் வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        13, 14, 15, 16, 17.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் 11-ல் ராகு சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறப்பான அமைப்பாகும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் யாவும் குறையும். குரு பகவான் சாதகமற்று இருப்பதால் பண விஷயத்தில் மட்டும் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு வெளிநாடு வெளிமாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு தேவையற்ற நட்புகளின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். மகாலட்சுமி வழிபாட்டை செய்து வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        16, 17.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு 3-ல் சனி சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கடன்களும் சற்று குறையும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவர். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        11, 12.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் அஜீரண கோளாறு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். முருக வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        13, 14, 15.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலனை தரக்கூடிய அமைப்பாகும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவி வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும். சனிபகவானுக்கு நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        11, 12, 16, 17.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக செயல்படும் சுபாவம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் புதன், குரு சஞ்சரிப்பதும் சூரியன் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதும் பல்வேறு வகையில் முன்னேற்றமான பலனை தரும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தாராள தனவரவுகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடை யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களால் தேவையற்ற அலைசல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். அம்மன் வழிபாடு செய்வதும், சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        13, 14, 15.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 9-ல் சுக்கிரன், 10-ல் புதன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக சாதகமான பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். முருக வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        11, 12, 16, 17,

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருந்தாலும் 8-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வது என்றாலும் சற்று நிதானத்துடன் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவார்கள். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        11,12, 13, 14, 15.



No comments: