Tuesday, November 27, 2018

2018 - டிசம்பர் மாத ராசிப்பலன்


2018 - டிசம்பர் மாத ராசிப்பலன்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





செவ்

திருக்கணித கிரக நிலை

ராகு 
கேது 

சனி
குரு சூரிய புதன் () 
சுக்கி

கிரக   மாற்றம்
7-12-2018 புதன் வக்கிர நிவர்த்தி
16-12-2018 தனுசில் சூரியன்
23-12-2018 மீனத்தில் செவ்வாய்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் தொழில், உத்தியோக ரீதியாக நற்பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்களும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவுபடுத்த நினைக்கும் எண்ணமும் தடையின்றி நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்புங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 8-ல் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சற்று பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது சிறப்பு. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் - திங்கட்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வணங்கி வழிபடுவது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்-  05-12-2018 இரவு 09.20 மணி முதல் 08-12-2018 காலை 06.04 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் இம்மாதம் அற்புதமான பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமையும், நிம்மதியும் சிறப்பாகவே இருக்கும். விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கஷ்டங்கள் குறையும். சிவ வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்-   08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை பெறுவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் 6-ல் குரு சஞ்சரிப்பதால் வீண் செலவுகளை குறைப்பது, பணவிஷயத்தில் சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாவதால் சிறிது மருத்துவ செலவு ஏற்படும். 2-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்வர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். கூட்டாளிகளாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் கல்விக்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
பரிகாரம் - வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் நன்மைகள் உண்டாகும். அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்-  10-12-2018 மாலை 05.20 மணி முதல் 13-12-2018 காலை 06.17 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பது சகல விதத்திலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். இம்மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்ககூடிய அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலமான பலன் கிடைக்கும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் அமோகமான நற்பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவர்கள்.
பரிகாரம் - செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து ஆறுமுக கடவுளான முருக பெருமானை வணங்கி வழிபட்டால் மேன்மையான பலன்களை அடையலாம். சஷ்டி விரதம் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்-   13-12-2018 காலை 06.17 மணி முதல் 15-12-2018 மாலை 06.45 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் இருப்பதை அனுபவிக்க தடை குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டா-கும். நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் வீண் வாக்கு வாதங்கள் செய்யாமல் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம். எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். புதிய வாய்ப்புகளுக்காக காத்திருப்பதை விட கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரியும் யோகம் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது.
பரிகாரம் - பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் நந்தியையும் வணங்கி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். முருக வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்-   15-12-2018 மாலை 06.45 மணி முதல் 18-12-2018 அதிகாலை 04.20 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணியில் சிறப்புடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி உறவு சுமூகமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களின் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள்.
பரிகாரம் - புதன் கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணு வழிபாடு மேற்கொண்டால் காரிய தடைகள் விலகி வெற்றி கிட்டும். சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்-   18-12-2018 அதிகாலை 04.20 மணி முதல் 20-12-2018 காலை 09.59 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பது எல்லா வகையிலும் முன்னேற்றத்தை தரக்கூடிய சிறப்பான அமைப்பாகும். இம்மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சியில் எளிதில் வெற்றி அடையகூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்றாலும் அவர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. வெளிவட்டார தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கல்வி தரமும் உயர்வடையும்.
பரிகாரம் - துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்-    20-12-2018 காலை 09.59 மணி முதல் 22-12-2018 மதியம் 12.22 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருப்பது, பணவிஷயத்தில் சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருந்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
பரிகாரம் - பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு மேற்கொள்வதும், முருக வழிபாடு செய்வதும் மேன்மையான பலன்களை அளிக்கும்.
சந்திராஷ்டமம்-   22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஜென்ம ராசியில் சனியும், 12-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும்.  மாணவர்களுக்கு உடல் நல பாதிப்புகளால் நிம்மதி குறையும்.
பரிகாரம் - சனிபகவான் வழிபாடு மேற்கொள்வதாலும் நவகிரஹ வழிபாடு செய்வதாலும் நன்மைகள் பல உண்டாகும். கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்-   24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு சஞ்சரிப்பதும் வலமான பலனை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். பணம் பலவழிகளில் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை மேன்மையடையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி  எளிதில் கைகூடும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் படிப்பில் முன்னேற பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் சனிபகவான் வழிபாடு செய்வது, ஆஞ்சநேயருக்கு வெற்றிமாலை சாற்றி வழிபடுவது, சனிக்கவசம் மற்றும் ஹனுமன் துதிகளை படிப்பது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம்-   29-11-2018 காலை 06.40 மணி முதல் 01-12-2018 காலை 10.06 மணி வரை மற்றும் 26-12-2018 மதியம் 01.41 மணி முதல் 28-12-2018 மதியம் 03.48 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதாலும், 9-ல் சுக்கிரன், 10, 11-ல் சூரியன் இம்மாதம் சஞ்சரிப்பதாலும் கடந்த கால சிக்கல்கள் எல்லாம் குறைந்து எல்லா வகையிலும் ஏற்றங்களை பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகளை பெற சாதகமான சூழ்நிலை உருவாகும். எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பதற்கான ஆற்றலும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.
பரிகாரம் -  ஆனை முக கடவுளையும், ஆறுமுக கடவுளையும் வணங்கி வழிபட்டால் எல்லையில்லா தொல்லைகள் கூட இல்லாமல் போய் விடும்.
சந்திராஷ்டமம்-   01-12-2018 காலை 10.06 மணி முதல் 03-12-2018 மதியம் 02.51 மணி வரை மற்றும் 28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.16 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதும், இம்மாதம் 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் சகல விதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக மேன்மை, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் நல்ல நிலை உண்டாகும். எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முடிந்தவரை அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் உழைத்தால் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.
பரிகாரம் - வெள்ளி கிழமைகளில் விரதமிருந்து மகாலட்சுமி தேவிக்கு அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சமும், சகல செல்வங்களும் வந்து சேரும்.
சந்திராஷ்டமம்-   03-12-2018 மதியம் 02.51 மணி முதல் 05-12-2018 இரவு 09.20 மணி வரை மற்றும்
30-12-2018 இரவு 08.16 மணி முதல் 02-01-2019 அதிகாலை 03.19 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

02.12.2018 கார்த்திகை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.15 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

09.12.2018 கார்த்திகை 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

12.12.2018 கார்த்திகை 26 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

13.12.2018 கார்த்திகை 27 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

14.12.2018 கார்த்திகை 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

17.12.2018 மார்கழி 02 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

27.12.2018 மார்கழி 12 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

31.12.2018 மார்கழி 16 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

No comments: