Friday, September 7, 2018

வார ராசிப்பலன்- - செப்டம்பர் 9 முதல் 15 வரை








வார ராசிப்பலன்- - செப்டம்பர் 9 முதல் 15 வரை 
ஆவணி 24 முதல் 30 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,







திருக்கணித கிரக நிலை

ராகு
கேது  செவ்
சூரிய புதன் சந்தி
சனி

குரு  சுக்கி

கிரக மாற்றம்  இல்லை
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
சிம்மம்            08-09-2018 காலை 10.31 மணி முதல் 10-09-2018 காலை 11.10 மணி வரை.
கன்னி              10-09-2018 காலை 11.10 மணி முதல் 12-09-2018 மதியம் 01.30 மணி வரை.
துலாம்            12-09-2018 மதியம் 01.30 மணி முதல் 14-09-2018 இரவு 07.12 மணி வரை.
விருச்சிகம்                14-09-2018 இரவு 07.12 மணி முதல் 17-09-2018 அதிகாலை 04.51 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
12.09.2018 ஆவணி 27 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், 7-ல் சுக்கிரன், குரு சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். செவ்வாய் 10-ல் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறிய தடைக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் மனக்கவலைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12, 13, 14.
சந்திராஷ்டமம் - 14-09-2018 இரவு 07.12 மணி முதல் 17-09-2018 அதிகாலை 04.51 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு 4-ல் புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் பரிபூரண வெற்றியை பெறுவீர்கள். சூரியன் 4-லும், குரு 6-லும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். வீண் செலவுகளை தவிர்ப்பது உத்தமம். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன்களை அடையலாம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிவ வழிபாடு செய்வது நல்லது. சனிக்கிழமை சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது, வியாழக்கிழமை விரதமிருந்து விநாயகரை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 15.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் புதன் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சுபிட்சமான பலன்களை பெறுவீர்கள். சனி 6-ல் இருப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் நற்பலன்கள் கிடைக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 3-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவதும், முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதும் நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கையும் காபாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். குரு தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் மங்களங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 13, 14.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். மாத கோளான சூரியன் 12-லும், 4-ல் சனியும் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள், நெருங்கியவர்கள் பகை ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால் கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். சிவ வழிபாடு செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 15.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும் துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சனி, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிர்ப்புகள் குறையும் நிலை உண்டாகும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். முருக வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 9, 12, 13, 14.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று 3-ல் இருப்பதாலும் 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் ஓற்றுமை குறைவு உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்க ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாழக்கிழமை விரதமிருந்து தட்சிணாமூர்த்தியை வணங்குவதும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் மிகவும் சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12, 15.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நிலவிய நெருக்கடிகள் விலகி முன்னேற்றங்களை அடைவீர்கள். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். பண வரவுகள் திருப்திகரமாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் இருப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வருவதுடன் நல்ல லாபங்களும் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும், உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய ரீதியாக பிரச்சினை, வீண் செலவுகள் உண்டாகும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்பட்டு கடன் வாங்கும் சூழ்நிலை கூட உருவாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடையலாம். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த கடனை வசூலிப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அம்மன் வழிபாடு செய்வதும் நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வதும் சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15.
சந்திராஷ்டமம் - 08-09-2018 காலை 10.31 மணி முதல் 10-09-2018 காலை 11.10 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 9-ல் குரு, சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம், தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருக வழிபாடும் சிவ வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 9, 15.
சந்திராஷ்டமம் - 10-09-2018 காலை 11.10 மணி முதல் 12-09-2018 மதியம் 01.30 மணி வரை

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் சாதகமான பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 8-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமத நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11.
சந்திராஷ்டமம் - 12-09-2018 மதியம் 01.30 மணி முதல் 14-09-2018 இரவு 07.12 மணி வரை.




No comments: