Thursday, September 20, 2018

வார ராசிப்பலன் - செப்டம்பர் 23 முதல் 29 வரை



வார ராசிப்பலன் - செப்டம்பர் 23 முதல் 29 வரை 
புரட்டாசி 7 முதல் 13 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






சந்தி
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது  செவ்

சனி

குரு  சுக்கி
சூரிய புதன்

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கும்பம்                               22-09-2018 காலை 06.15 மணி முதல் 24-09-2018 மாலை 05.21 மணி வரை.
மீனம்                  24-09-2018 மாலை 05.21 மணி முதல் 27-09-2018 அதிகாலை 01.58 மணி வரை.
மேஷம்                              27-09-2018 அதிகாலை 01.58 மணி முதல் 29-09-2018 காலை 08.28 மணி வரை.
ரிஷபம்                              29-09-2018 காலை 08.28 மணி முதல் 01-10-2018 மதியம் 01.18 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
23.09.2018 புரட்டாசி 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்தசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

27.09.2018 புரட்டாசி 11 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 7-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றையும் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளையும், பதவி உயர்வுகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். விநாயகர் வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - -      23, 24, 27, 28.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள்.----------- பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். குரு 6-ல் இருப்பதால் பணவிஷயத்தில் மட்டும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் உண்டாகும் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவக்கூடும் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் --       23, 24, 25, 26, 29.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் 4-ல் பலமாக சஞ்சரிப்பதும் 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் நல்ல அமைப்பாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் சுமைகள் குறையும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் --       25, 26, 27, 28.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் 4-ல் சுக்கிரன் 6-ல் சனி சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள் யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் கிட்டும்.
வெற்றி தரும் நாட்கள் --       27, 28, 29.
சந்திராஷ்டமம் -         22-09-2018 காலை 06.15 மணி முதல் 24-09-2018 மாலை 05.21 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். சிவ வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் --       23, 29.
சந்திராஷ்டமம்           24-09-2018 மாலை 05.21 மணி முதல் 27-09-2018 அதிகாலை 01.58 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தாராள தனவரவு தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான நிலை ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். கிடைக்க வேண்டிய லாபங்களும் தடையின்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். பணவரவு சிறப்பான நிலையிருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் --       23, 24, 25, 26.
சந்திராஷ்டமம் -         27-09-2018 அதிகாலை 01.58 மணி முதல் 29-09-2018 காலை 08.28 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் ஜென்ம ராசியில் வலுவாக சஞ்சரிப்பதும் 3-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி இடையே சற்று விட்டு கொடுத்து நடப்பதாலும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதாலும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பனவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். சூரியன் 12-ல் இருப்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        25, 26, 27, 28.
சந்திராஷ்டமம் -         29-09-2018 காலை 08.28 மணி முதல் 01-10-2018 மதியம் 01.18 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் நற்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        27, 28, 29.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன், புதனுடன் 10-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். செவ்வாய், கேது 2-ல் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். துர்கையம்மனையும் முருக கடவுளையும் வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் --       23, 24, 29.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் ஏழரைச் சனி நடப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குரு பகவானும் சாதகமற்று இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பது சிறப்பு. கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படலாம். மேலதிகாரிகளுடன் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் --       25, 26.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும் தாராள தனவரவுகள் கிடைத்து கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் ஓரளவு குறையும். சூரியன் 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் நீங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதுடன் உணவு விஷயத்திலும் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே சுமுகமான உறவிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் --       23, 24, 27, 28.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் அனுகூலப் பலன் ஏற்படும் என்றாலும் 7-ல் சூரியன் 8-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு வீண் செலவுகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கடன் பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். புதிதாக வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -        25, 26, 29.


No comments: