Thursday, December 21, 2017

வார ராசிப்பலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 2017

வார ராசிப்பலன்
டிசம்பர் 24 முதல் 30 வரை   2017
மார்கழி 9 முதல் 15 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





  சந்தி

திருக்கணித கிரக நிலை

ராகு
கேது

 
சனி 
சூரிய
சுக்கி

புதன்

குரு
செவ்
 


கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கும்பம்               23.12.2017 காலை 08.29 மணி முதல் 25.12.2017 மாலை 06.55 மணி வரை
மீனம்                  25.12.2017 மாலை 06.55 மணி முதல் 28.12.2017 அதிகாலை 01.41 மணி வரை
மேஷம்              28.12.2017 அதிகாலை 01.41 மணி முதல் 30.12.2017 அதிகாலை 04.29 மணி வரை
ரிஷபம்              30.12.2017 அதிகாலை 04.29 மணி முதல் 01.01.2018 அதிகாலை 04.27 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
28.12.2017 மார்கழி 13 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். விஷ்ணு பகவான் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 28, 29.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்றவை ஏற்பட்டு அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். குடும்பத்தில் சிறுசிறு  பிரச்சனைகள் வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடன் பணிபுரிபவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 26, 27, 30.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, குரு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும் சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையப்பெற்று பொருளாதார நிலை மேன்மையடையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கடன்களும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நி¬வேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        26, 27, 28, 29.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடக்கூடிய காலமாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். செவ்வாய் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்           28, 29, 30.
சந்திராஷ்டமம் -         23.12.2017 காலை 08.29 மணி முதல் 25.12.2017 மாலை 06.55 மணி வரை

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
பிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உங்கள் ராசிக்கு குரு பகவான் 3-ல் சாதகமற்று இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைவீர்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        24, 30.
சந்திராஷ்டமம் -         25.12.2017 மாலை 06.55 மணி முதல் 28.12.2017 அதிகாலை 01.41 மணி வரை

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான  காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, தன ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவைற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 26, 27.
சந்திராஷ்டமம் -         28.12.2017 அதிகாலை 01.41 மணி முதல் 30.12.2017 அதிகாலை 04.29 மணி வரை

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். வியாழக்கிழமை குரு பகவானுக்கு முல்லை மலரால் அர்ச்சனை செய்வது சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் -        26, 27, 28, 29.
சந்திராஷ்டமம் -         30.12.2017 அதிகாலை 04.29 மணி முதல் 01.01.2018 அதிகாலை 04.27 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி, 12-ல் செவ்வாய், குரு இருப்பதால் வீண் செலவுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடியை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        28, 29, 30.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பொன், பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களையும் வசூலித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு உண்டானாலும் எடுக்கும் காரியத்தை செய்து முடித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 30.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி 12-ல் சூரியன், சுக்கிரனுடன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது, எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. நெருங்கியவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்களாலும் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது  உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        26, 27.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு, பலவகையில் லாபகரமான பலன்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். தினமும் விநாயகர் வழிபாடு செய்தால் சங்கடங்கள் தீரும்.
வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 28, 29.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் புதன், 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியமும் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். அரசு வழியிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு செய்தால் மங்களங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        26, 27, 30.


No comments: