Friday, August 16, 2013

செப்டம்பர் மாத பலன்கள்







மேஷம்   ; அஸ்வினி பரணி கிருத்திகை1 ம் பாதம்
    
தன்நலம்பாராது மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் செவ்வாயும் 3ல் குருவும் 5ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது வீண் பிரச்சனைகளை உண்டா க்கும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களால் மனச ஞ்சலங்கள் ஏற்படும் தொழில் வியாபாரத்தில் போட் டிகள் அதிகரிக்கும். சிவனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 11-09-2013 அதிகாலை 01.55 மணிமுதல் 13-      09-2013 காலை 04.48 மணி வரை

ரிஷபம்   ;  கிருத்திகை 2.3.4 ரோகிணி மிருகசீரிஷம் 1.2 ம் பாதங்கள்
     தற்பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் ஆசை ப்படாத உங்களுக்கு தனஸ்தானத்தில் குருவும் 3ல் செவ்வாயும் 6ல் சனி ராகுவும் சஞ்சரிப்பது அற்பு தமான அமைப்பாகும். திருமணம் போன்ற சுபகா ரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கொடுத்த கட ன்கள் தடையின்றி வசூலாகும். உறவினர்களிடை யே இருந்த வேற்றுமைகள் மறையும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள் சிவபெருமானை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம் 13-09-2013 காலை 04.48 மணி
           15-09-2013 காலை 07.08 மணி வரை


மிதுனம்  ;  மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 123 ம் பாதங்கள்
     பிடிக்காதவர்களை ஒரு நொடியில் தூக்கி எறிந்து விடக் கூடிய குணம் கொண்ட உங்களுக்கு மாத முற்பகுதியில் சூரியன் 3ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் ஓரளவுக்கு சுமாரான நற்பலனை பெற முடியும். பண வரவுகள் அவ்வளவு திருப்திகரமாக இருக்கும் என்று கூறமுடியாது. கொடுக்கல் வாங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடாதிருப்பத நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் வீண்வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள்; கடன்கள் உண்டாகும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 15-09-2013 காலை 07.08 முதல்
            17-09-2013 காலை 09.45 மணி வரை.


கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம் பூசம் ஆயில்யம்
     நண்பர்களுக்காக எதையும் விட்டு கொடு க்கும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும் 2ல் சூரியனும் 4ல் சனியம் 12ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே கடன் வாங்க வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்ப விஷ யங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 17-09-2013 காலை 09.45 மணி முதல்
           19-09-2013 மதியம் 01.45 மணி வரை


சிம்மம்     ;  மகம் பூரம். உத்திரம்1 ம் பாதம்
     தனக்கு இடையூறு செய்பவர்களை வே ரோடு களையும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும் 12ல் செவ்வாயும் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் 3ல் சனிராகுவும் 11ல் குருவும் இருப்பதால் எதையும் சமாளிப்பார்கள் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. சேமிப்புகளும் பெருகும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 19-09-2013 மதியம் 01.45 மணி முதல்
           21-09-2013 மாலை 07.41 மணிவரை

கன்னி    ;  உத்திரம் 234 அஸ்தம் சித்திரை 12ம் பாதங்கள்
     சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிய மைத்துக்கொள்ளும் உங்களுக்க 2ல் சனி   ராகு சஞ்சரித்தாலும் லாபஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு முன்னேற்ற மடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று நெருக்கடியான காலம் என்பதால் உயரதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணவர வுகள் சுமாராகத்தானிருக்கும். முடிந்தவரை ஆடம் பர செலவுகளை செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்  21-09-2013 மாலை 07.41 மணிமுதல்
           24-09-2013 அதிகாலை 04.01 மணிவரை


துலாம்   ; சித்திரை34 சுவாதி விசாகம்123 ம் பாதங்கள்
     தன்னை அழகுபடுத்திகொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனிராகுவும் 7ல் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் 9ல் குருவும் 10ல் செவ்வாயும் 11ல் சூரியனும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்ப தால் எதிலும் திறம்படசெயல்பட்டு வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோக த்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவிகள் தேடி வரும் ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 24-09-2013 அதிகாலை 04.01 மணி முதல்
           26-09-2013 மதியம் 02.41 மணிவரை

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம் அனுஷம் கேட்டை
     துப்பறியும் வேலைகளை சிறப்பாக செய்யும் உங்களுக்கு 6ல் கேதுவும் 9ல் செவ்வாயும் 10ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்று மை சிறப்பாக அமையும். திருமண சுபகாரி யங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்  26-09-2013 மதியம் 02.41 மணிமுதல்
           29-09-2013 அதிகாலை 02.21 மணிவரை

தனுசு ; மூலம் பூராடம் உத்திராடம்1ம் பாதம்
     தாம் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் பண்பு கொண்ட உங்களுக்கு 7ல் குருவும், 9ல் சூரியபகவானும் 11ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகிட்டும். பொன்பொருள் ஆடை ஆபரணம் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கலிலும் லாபம் உண்டாகும். சொந்த முயற்சியால் பலசாதனைகளை செய்வீர்கள் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 01-09-2013 மாலை 07.16 மணிமுதல்
           04-09-2013 காலை 06.16 மணிவரை
           29-09-2013 அதிகாலை 02.21 மணிமுதல்
           01-10-2013 மதியம் 01.28 மணிவரை

மகரம்; உத்திராடம் 234 திருவோணம் அவிட்டம்12ம் பாதங்கள்
     எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தன் கொள்கையிலிருந்து மாறாத உங்களுக்கு, 7ல் செவ் வாயும், 8ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தாங்கள் நல்லதாக நினைத்து பேசும் வார்த் தைகளும் உறவினர்களுக்குள் கருத்து வேறு பாட்டினை ஏற்படுத்தி விடும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டா ளிகளால் பிரச்சனைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் 04-09-2013 காலை 06.16 மணிமுதல்
     06-09-2013 மியம் 03.55 மணிவரை

கும்பம் ; அவிட்டம்34 சதயம் பூரட்டாதி 123ம் பாதங்கள்
     பிறர் வாழ்வில் குறுக்கிடாத உயர்ந்த பண்பு கொண்ட உங்களுக்கு 5ல் குருவும் 6ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறை வேற்று வீர்கள் அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கமுடியும். 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றுகவனம் எடுத்துக் கொள்வ தும் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல் வதும் நல்லது. தொழில் வியாபாரத்திலுள்ள போட்டி பொறாமைகளை திறமையாக சமாளிக்க முடியும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றும்.
சந்திராஷ்டமம் 06-09-2013 மதியம் 03.05 மணி முதல்
     08-09-2013 இரவு 09.36 மணிவரை


மீனம் ; பூரட்டாதி4ம் பாதம் உத்திரட்டாதி ரேவதி
     ஆடம்பர பொழுது போக்குகளில் அதிக நாட்டம் கொண்ட உங்களுக்கு குரு 4லும் சனிராகு 8லும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். மாத முற்பாதிவரை சூரியன் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஓரள வுக்கு உதவிகள்கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். சிலருக்கு வேலைபளு கூடுவதால் விடுப்பு எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
சந்திராஷ்டமம் 08-09-2013 இரவு 09.36 மணிமுதல்

            11-09-2013 அதிகாலை 01.55 மணிவரை

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078

No comments: