ஜோதிடம் காட்டும் ஜர்னலிசம்
பத்திரிகைத் துறை என்பது மிகவும் சக்தி வாய்ந்த துறையாகும். பத்திரிகை துறையில் பணி புரிந்து மற்றவர்களுக்கு பல்வேறு கருத்துகளை சென்றடைய செய்வது தான் பத்திரிகையாளரின் திறமையாகும். ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பது இன்றைய சூழ்நிலையில் அறிவாற்றலுக்கு அதிக வேலை கொடுக்க கூடிய துறையாகும். ஒருவர் சிறந்த அறிவாளியாகவும், பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிந்தவராகவும் இருந்தால் தான் பத்திரிகை துறையில் சிறந்து விளங்க முடியும். பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 4,5க்கு அதிபதிகள் வலுவாக இருந்தால் தான் நல்ல அறிவாற்றல் உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் 4,5க்கு அதிபதி இணைந்திருந்தால் தான் சிறந்த அறிவாற்றல் உண்டாகும். அது மட்டுமின்றி பத்திரிகை துறைக்கு காரகனாக விளங்க கூடிய கிரகம் புதன் பகவான்.
ஒருவர் ஜாதகத்தில் 4,5க்கு அதிபதிகள் இணைந்து உடன் புதன் இருந்தால் பத்திரிகையாளராகும் நிலை, சிறந்த எழுத்தாற்றல் கொண்ட நபராக விளங்கும் நிலை உண்டாகும். அது மட்டுமின்றி 4,5க்கு அதிபதி இணைந்து உடன் குரு, புதன், சூரியன் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ பெற்றிருந்தால் சிறந்த பத்திரிகையாளராகும் நிலை உண்டாகும். 4,5க்கு அதிபதிகள் புதனுடன் இணைந்து 10ல் அமைந்தாலும் 10 ஆம் அதிபதி சேர்க்கை பெற்றிருந்தாலும் அந்த ஜாதகர் பத்திரிகையையே தொழிலாகக் கொண்டு வாழும் நிலை உண்டாகும். பத்திரிகை துறை என்பது பல்வேறு பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்கள் அறியுமாறு கருத்துக்களை வெளியிடும் துறை ஆகும்.
பொதுவாக 4,5க்கு அதிபதிகள் புதன் சேர்க்கைப் பெற்று உடன் சுக்கிரன் இணைந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் பத்திரிகைத் துறையில் குறிப்பாக சமூகப் பிரச்சனை பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கலை தொடர்புடைய விஷயங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளராக இருப்பார். குரு பகவான் சேர்க்கை பெற்று பார்வை பெற்று அல்லது குரு வீட்டில் கிரகங்கள் அமையப் பெற்றால் பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்கள் நீதி துறை தொடர்புடைய விஷயங்கள் மக்களுக்கு ஆலோசனை கூறும் விஷயங்களை பற்றி அதிகம் எழுதும் பத்திரிகையாளராக இருப்பார்கள். 4,5க்கு அதிபதி புதன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் புராணங்கள் பற்றியும் தொழிலாளர்கள் பிரச்சனைகள் பற்றியும் தொழில் சங்க தொடர்புடைய விஷயங்களைப் பற்றி எழுதும் நபராக இருப்பார்கள். 4,5 புதன் ஆகியவை சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் அரசு, அரசாங்கம் அரசியல் சார்ந்த விஷயங்களைப் பற்றி அலசி ஆராயும் எழுத்தாளராக இருப்பார்.
செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் ராணுவத் தொடர்புடைய விஷயங்கள் விவசாயம் மருத்துவத் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி அலசி ஆராயும் பத்திரிகையாளராக இருப்பார்.
சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தால் பயணங்கள் உணவு வகைகள் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து எழுதும் எழுத்தாளாராக இருப்பார்.
தொடர்புக்கு
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street , (Near Valli Thirumanamandapam) Vadapalani, Chennai-600026 My Cell - 0091 - 7200163001, 9383763001.9444072006.
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.Web www.muruguastrology.com
No comments:
Post a Comment