Saturday, May 18, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி



விசாகம் - 4ம் பாதம் அனுஷம் , கேட்டை

எந்த வித காரியத்த எடுத்தாலும் அதை முடிக்கும் வரை ஓயாமல் பாடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!  உங்கள் ஜென்ம ராசிக்கு 2.5 க்கு அதிபதியான குருபகவான் வரும் 28.5.2013 முதல் அட்டம ஸ்தானமான 8 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத் திலும் அடிக்கடி பாதிப்புக்கள் உண்டாகும். எழரை சனியில் விரய ராகுவும் தொடருவதால் குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்களும் அதிகரிக்கும்.குருபார்வை 2,4,12 ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்பத்தின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுகவாழ்வும் தடையின்றி அமையும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அணைத்துச் செல்வது, தேவையின்றி பிறர் வியங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்க எதிர் பாராத உதவிகள் கி ைக்கப் பெற்று லாபங் களும் சிறப்பாக அமையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதபபட்டாலும்  பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பயன் படுத்தாதிருப்பது நல்லது. அரசியல்வாதிகள் மக்களுடன் ஆதரவைப் பெற சற்று சிரமப்படவேண்டி யிருக்கும். வீண் விரயங்களும் ஏற்படும். என்றாலும் உடனிருப்பவர்களி;ன் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கேது 6 ல் சஞசரிப்பதால் எந்ந வித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற முடியும்.



முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்
மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு


இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்

27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு





குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .

117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு



please contact my postal adress  



Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078


தேக ஆரோக்கியம் 

உங்களின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேணடிய காலமிது. தேவையற்ற மனக்குழப்பங்கள் அலைசல் டென்ன்களும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு நெருங்கியவர்களை இழக்ககூடிய சந்தர்ப்பங்களும் உண்டாகும். எதிலும் சற்று கவன முடனிருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதாரநிலை

கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை பாதிப்படையாது. சுகவாழ்விற்கும் குறை இருக்காது. திருமண சுப காரியங்கள் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி வரும். எல்லாவற்றிற்கும் தாழ்ந்து செல்ல வேண்டியிருப்பதால் மன நிம்மதி சற்று குறையும். சிலருக்கு வீடு வாகனம் போன்ற வற்றை வாங்க கூடிய யோகம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

குரு 8 இல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். சிலநேரங் களில் நெருக்கடியம் உண்டாகலாம். பணம் கொடுக்கல் வாங்கல் வியத்தில் பெரிய தொகைகளை தவிர்ப்பது, பிறரை நம்பி வாக்குறுதி முன் ஜாமீன் போன்றவற்றைகொடுக்காதிருப்பதும் நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்கள் லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். போட்டிகள் அதிகரிப்பதால் வர வேண் டிய வாய்ப்புக்களை பிறர் தட்டிச் செல்வர். என்றாலும் எதையும் சமாளித்து லாபத்தைப் பெற்று விடுவீர்கள். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெற் றாலும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. அலைச்சல்கள் அதிரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு,

பணியில் நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்திற்கும் பாராட்டுகளை பிறர் பெறுவார்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்பதவிகளும், உடனிருப்பவர்களின் தலை யீட்டால் தவறிப் போகும். சிலநேரங்களில் வீண் பழிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்திதல் உண்டாகக்கூடிய பாதிப்புக்களாலும் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். என்றாலும் எதையும் சமாளித்து பணியில் சுறுசுறுப்புடன் செயல் படுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு,

பெயர் புகழ் பாதிப்படைய கூடிய சூழ் நிலைகள் உண்டாக கூடிய காலம் என்பதால் மேடை பேச்சில் நிதானத்தை கையாள்வது நல்லது கட்சிப் பணிக்காக பணயஙகள் மேற்க்கொள்ள கூடியநிலை, நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை போன்றவை உண்டாகும். உடனிருப்பவர்களின் ஆதரவு களால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி களை ஓரளவுக்காவது காப்பாற்றி அவர்களின் ஆதரவை பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு,

விளைச்சல் சுமாராகத்தானிருக்கும். பாடு பட்டு விளைவிக்கும் பயிர்களை புழு பூச்சிகள் நாசமடைய செய்யும். அமனால் பயிர்களை காப்பற்ற அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சந்தையிலும் விளை பொருளுக்கேற்ற விலையை பெறுவதில் இடையூறு களை சந்திக்க நேரிடும். கால்நடைகளால் ஓரளவுக்கு அனுகூலத்தை அடைய முடியும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.

பெண்களுக்கு, 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்து வதும், குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. திருமண வயதை அடைந்தவர்கள் அவசரப்படாமல் காத்திருத்தல் நல்லது. முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது பிறர் வியங்களில் தலையீடு செய்யாதிருப்பது ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. புத்திர வழியில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் டென்ன் அதிகரிக்கும்.

படிப்பு,

கல்வி பயிலும் மாணவ மாணவிகள் எதிர்கால வாழ்க்கை கருதி கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் நல்ல மதிப் பெண்களைப் பெற முடியும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தை குறைப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை வாழ்கை பாதையை மாற்றி அமைத்து விடும் கவனம் தேவை. 

ஸ்பெகுலேன்,

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் எதிர் பார்த்த லாபத்தை அடைய முடியாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

குரு பகவான் மிருகசீரி நட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.6.2013 வரை

குருபகவான் உங்கள்  ராசியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அட்டம ஸ்தானமான 8.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களை சந்திப்பீர்கள்.12.இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதாலும் கேது 6.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடுத்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தயாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்தும் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் இடையூறுகள் நிலவக்கூடிய காலம் என்பதால் சற்று பொறுமையுடனிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை நிலவும். பணம் கொடுக்கால் வாங்கலில் பெரிய தொகைகள் ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். பயணங்களாலும் அனகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறும். அரசியல் வாதிகளுக்கு பெயர் புகழ் உயர்வடையும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 8.ஆம் வீட்டில் சஞ்சரிக்கும இக்காலங்களில் சனி ராகுவும் 12.இல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் பயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலில் பொடுத்த வாக்குறுதிகைள காப்பாற்ற முடியாமல் போகும் என்ப தால் பல பெரிய மனிதர்களின் நட்பையும் இழக்க நேரிடும். கேது 6.இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் ஏற்படும் போட்டி பொறாமைமைகளையும், மறைமுக எதிர்ப்பு களையும் சமாளிக்க முடியும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்களையும் அடைய முடியும். மாணவர் களும் கல்வியில் ஓரளவுக்கு சிறந்து விளங்கு வார்கள். தேவையற்ற நட்புக்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் பணியில் உண்டாக்கூடிய வேலைபளுவை குறைத்துக் கொள்ள முடியும். குருப்பரிதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் அடம ஸ்தானத்திலிருப்பதால் மீண்டும் தேவையற்ற பிரச்சினை களையே சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத் தும். கணவன் மனைவியடையே அன்யோன்யம் நிலைத்திருப்பதால் குடும்ப ஒற்றுமையும் சிறப்பாகவே இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் சக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. முடிந்தவரை ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. கெர்ணடல் ஆதாப் பலன்களைப் பெற லாம். செய்யும் தொழில் வியாபரத்திலும் ஒரளவுக்கு லாபங்களை பெறமுடியும். பயணங் களையும் மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களிடும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் மக்களிடம் நல்ல பெயரை சம்பாதிக்க முடியும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்க்ள. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்றவேலை கிடைப்பதில் இடையூறுகள் உண்டாகும். சனி பரிதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2014 வரை

அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகள் சற்று சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். உற்றார் உறவினர் களின் ஆரவும் மகிழ்ச்சியளிக்கும். தாராள தன வரவுகளால் குடும்பத்தேவைகள் பூர்த்தி யாவதுடன் கடன்களையும் சற்று குறைக்க முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பதிய கார் பங்களா போன்றவற்றை வாங்கலும் சரளமாக நடைபெறும். உடல் ஆரேக்கியத்தில் அடிக்கடி பாதிப்பகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித் தாலும் அதன் மூலம் அனுகூலங்களையும் அடைவீர்கள். பொன் பொருள் சேரும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தி யோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் ஆதரவைப் பெறுவார்கள். ராகுகாலங்களில் துர்க்கை அம்மனை வழி படவும்.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

அட்டம ஸ்தானத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பண வியங்களில் கவனமுடனிருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் எல்லா வகையிலும் லாபங்களும் கிட்டும். குடும்பத்தின் ஒற்றுமை சிறப்பாக மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. திருமண சபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சிலகாலம் தள்ள வைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். பயணங் களாலும் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் பல பெரிய மனிதர்களின் தொடர்புகளும் கிட்டும். சிலருக்கு பூமி மனையால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப் பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு நல்ல பெயரை சேர்ப்பார்கள். நல்ல நட்புகளும் கிட்டும். தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்ற வழிபடவும்.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் அடம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையே பெறமுடியும். 12.இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்ப தால் எதிர்பாரா உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தயாகும். பொருளாதார நிலையிலிருந்த நெருக்கடிகள் சற்றே குறையும். சகவாழ்வு சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. சிலருக்கு புதிய கார் பங்காள போன்றவற்றை வாங்கும் யோகமுமு; உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல்கலில் பெரிய முதலீடுகளை ஈடு படுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பா கவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர் கள். திருமண சுபகாரியங்கள் சில தடை களுக்குப் பின் கைகூடும். புத்திர்களால் சிறு சிறு மனக்கவலைகள் தோன்றி மறையம். உத்தியோகஸ்தர்களுக்கு ஊழிய உயர்வுகள் தடைப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும் மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மாணவர்களும் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிட்டும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

விசாகம் - 4ம் பாதம் :

ஏழை எளியோருக்கு உதவிகள் செய்வதில் விருப்பமும், அனைவரிடமும் அன்பாக பழகும் சுபாவமும் கொண்ட உங்களுக்கு குருபகவான் அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் இடை யூறுகளும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். ஏழை சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத் திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவி னாலும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தேவையற்றப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சேமிக்க முடியாது.

அனும் :

நல்ல உழைப்பாளியாகவும், கூச்சல் சுபாவத்தை உடையவராகவும் விளங்கும் உங்களுக்கு குருபகவான் அடம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறு பாடுகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை பெற எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும், ஏழரை சனியும் தொடருவதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு. தேவையற்ற அலைச்சல் டென்ன்கள் அதிகரிக்கும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, பிறர் வியங் களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.

கேட்டை :

மிகவும் தைரியசாலிகளாகவம், அறிவாற் றல் மிக்கவர்களாகவும் விளங்கும் உங்களுக்கு குருபகவான் அ~;டம ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளி; தடை தாமதங்கள் உண்டாகும். 12.ஆம் வீட்டில் சனியும் ராகுவும் சஞ்சலிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும் தேவையற்ற பயணங்களால் அலைச் சல்களும் அதிகரிக்கும். பணவி~யத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க் கவும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கே லாபங்களைப் பெறமுடியும். கடன்களும் ஏற்படும்.

அதிர்டம் அளிப்பவை 

எண் -        1,2,3,10,11
நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை - செவ்வாய், வியாழன்
திசை - தெற்கு
கல் - பவளம்
தெய்வம் - முருகன்

பரிகாரம் :

குருபகவான் 8.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழரை சனியில் விரய சனியும் தொடருவதால் சனிக் குரிய பரிகாரங்களை செய்வது, சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. 12.இல் ராகுசஞ்சரிப்பதால் ராகுகாலங்களில் துர்க்கை அம்மனை வழிபடவும்.




No comments: