Saturday, May 18, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி



உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்


தயாள சிந்தனையும், மற்றவர்களிடும் அன்பாக பழகும் குணமும் கொண்ட கன்னி ராகு அன்பர்களே! உங்கள் ஜென்மராசிக்கு கேந்திர ஸ்தானங்களாகிய 4.7க்கு அதிபதி யான குருபகவான் வரும் 28.5.2013 முதல் ஜீவன ஸ்தானமான 10. ஆம் வீட்டில் சஞ்சரிப் பது தொழில் உத்தியோக ரீதியாக நெருக் கடிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். இது மட்டுமின்றி 2.ஆம் வீட்டில் சனிராகு சஞ்சரிப்பதும், 8ஆம் வீட்டில் கேது சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளும் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும் உண்டாகும்.  குரு பார்வை 2,4,6 ஆம் வீடுகளுக்கு இருப்பதால் கணவன் மனைவியிடையே வீன்வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றமை குறையாது. சொந்த பூமி மனை வாங்கும் வியங்களில் சிறு சிறு வீண் விரங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்பாடது. திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்ககூடிய அள விற்கு பலமும் வலிமையும் கூடும் உத்தி யோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்க ளால் அலைச்சல் டென்ன் அதிகரிக்கும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பிறர் வியங்களில் தலையீடு செய்யாதிருப்பதால் வீண் பிரச்சினை களை குறைத்துக் கொள்ள முடியும். பண வரவுகள் சுமாராக இருக்கும்.
முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு

இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்
27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு



குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .
117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு


please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078


தேக ஆரோக்கியம் :

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கை கால் மூட்டுகளில் வலி உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டு அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். என்றாலும் எதையும் சமாளிப்பீர்கள்.

குடும்பம் பொருளாதாரநிலை :

நீங்கள் பேச்சில் நிதானமாக செயல் படுவதும் முன்கோபத்தை குறைப்பதும் நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது உத்தமம். உற்றார் உறவினர்களும் தேவையற்ற வீண் பிரச்சினை களை உண்டாக்குவார்கள். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே மன சங்சலங்களை ஏற்படுத்தி விடும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

கொடுக்கல் வாங்கல் :

பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்க கூடிய காலம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது, என்றாலும் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்ற வற்றை தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் சற்று இழுபறி நிலையிருக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு :

தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்கு நேர்ந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. நிறைய போட்டிப் பொறமைகளை சந்திக்க வேண்டியிருப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் யாவும் கைநழுவிப் போகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பயணங்கள் தேவை என்றால் மட்டுமே மேற்கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணிபுரியும் இடத்தில் உடனிருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். நீங்கள் செய்யும் பணிகளுக்கான பாராட்டுதல்களை பிறர் பெறுவார்கள். இதனால் மனநிம்மதி குறையும். வரவேண்டிய பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் சற்றே தாமதடையும். சிலருக்கு உண்டாக கூடிய எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். அலைச் சல்களால் உடல் நிலையும் சேர்வடையும்.

அரசியல்வாதிகளுக்கு :

மக்களின் செல்வாக்கு குறைய கூடிய காலமிது என்பதால் அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போவதால் மனநிம்மதி குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நிறைய தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகளை செய்ய நேரிடுவதால் பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும்.

விவசாயிகளுக்கு :

பயிர் விளைச்சல் சுமாராக இருக்க கூடிய காலம் என்பால் பட்ட பாட்டிற்கான பலனை பெறுதில் சற்று இடையூறுகளை சந்திப்பீர்கள். புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிர் விளைச்சல் பாதிப்படையும். புதிய யுக்திகளை கையாள்வது சற்று அனுகூலத்தை உண்டாக் கும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சேமிப்பு குறையும்.

பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி யிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொள்ளுவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப் பதில் சற்று தாமதநிலை உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதால் வீண் பிரச்சினை களை தவிர்க்கலாம்.

படிப்பு 

மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவதால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று விடமுடியும். வீண் பொழுது போக்கு களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு கல்விக் காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும் பயணங்களில் வேகத்தை குறைப்பது மூலம் நற்பலன் உண்டாகும்.

ஸ்பெகுலேன் :

ஷேர்,ரேஸ்  லாட்டரி போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

குரு பகவான் மிருகசீரி நட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.6.2013 வரை

குருபகவான் தன் நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜீவன ஸ்தான மான 10.ம் வீட்டில் சஞ்சாரம் செய்யம் இக் காலங்களில் தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செவ்வாய் 3, 8க்கு அதிபதி என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப்பின் வெற்றி கிட்டும். ஜென்ம ராசிக்கு 2.ஆம் வீட்டில் சனி ராகுவும், 8.இல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். கணவன் மனைவி உறவில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாம் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்து வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல் குறையும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுன் செயல் பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற்றுவிட முடியும். குருப் பரீதி தட்சியாண மூர்த்தியை வழிபடுவது நல்லது.

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குருபகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 10.ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. குடும்ப ஸ்தானமான 2.ஆம் வீட்டில் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி யிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப் பிடிக்கவும். பணவரவுகளிலும் ஏற்ற இறக்க மான நிலையிருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு வி~யத்திலும் கவனமுடனிருந்தால் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளாதிருப்பது மூலம் வீண் விரயங்கள் குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே அபிவிருத்தியை பெருக்க்கிக்கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளாதிருப்பது மூலம் வீண் விரயங்கள் குறையும். கூட்டாளி கள் மற்றம் தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ளமுடியும். உத்தியோ கஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல் படமுடியும் என்று () முடியாது. அதனால் உடன்பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. துர்க்கை அம்னை வழிபடவும்.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.1..2013 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 10.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உத்தி யோகஸ்தர்களுக்கு பணியில் நெருக் கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை கண்ணெதிரே பிறர் தட்டி செல்வதால் மனநிம்மதி குறையும். என்ன தான் பாடுபட்டு வேலை செய்தாலும் அதற்கான பாராட்டுதல்களை மற்றவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலையும் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகளை இழப்பார்கள். இதனால் வரவேண்டிய லாபங்கள் தடைபடும். கூட்டாளிகளிடமும் பிரச்சினை உண்டாகும். 2.ம் வீட்டில் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. புத்திர வழியிலும் மனக் கவலைகள் உண்டாகும். உற்றார் உறவினர் களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முயன்று படித்தால் நினைத்த மதிப்பெண்ணை பெற்று விடமுடியும்.  சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. 

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2014 வரை

குருபகவான் ஜீவன ஸ்தானத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே போட்டிகள் குறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தேடி வரும். லாபங்கள் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியிலிருந்த நெருக்கடிகள் சற்றே குறையும். திறமைகளுக்கு கேற்ற பாராட்டுதல் கள் கிடைக்கப்பெறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும் 2.ஆம் வீட்டில் சனி ராகுவும் 8.இல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதுடன், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருணம சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற் போது மேற்கொண்டால் நற்பலன்கள் உண்டா கும். பிறர் வியங்களில் தலையீடு செய்யாதிருப்பது முன் கோபத்தை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப் பலன்களை பெறமுடியும். மாணவர்களின்  கல்வித் திறன் சிறப்பாக இருக்கும். அரசியல் வாதிகள் பத்திரிகையாளர்களை பகைத்து கொள்ளாதிருப்பது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் ஜீவன ஸ்தானமான 10.ம் வீட்டில் சஞ்சரிப்பதும். ஏழரை சனி நடைபெறுவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நீங்கள் நல்லதாக நினைத்து பேசும் வார்த்தைகளும் பிறர் மனதை புண்படுத்திவிடும் என்பதால் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திலும் சோர்வு, மந்நிலை கை கால் மூட்டுகளில் வலி உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்க லில் சுமாரான நிலையிருந்தாலும் பெரிய தொகைகளுக்கு முன் ஜாமீன் கொடுப்பதால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிபொறாமைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளால் சற்று மன நிம்மதி குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனம் செலுத்து வது உட்ன பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது போன்றவற்றின் மூலம் வேலை பளுவை குறைத்துக்கொள்ள முடியும். அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராகத்தானிருக்கும். துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவம் நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மை தீமை கலந்தே பலன்களே கிடைக்கும். ஏழுரை சனியும் நடைபெறுவதால் எந்தவொரு காரியத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகளும் நிம்மதி யற்ற நிலையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகள் உங்களின் மன நிலையை பாதிக்கும். முடிந்தவரை அனை வரையும் அனுசரித்து நடப்பது நல்லது பண கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் வீண் விரயங்கள் ஏற்படும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியாமல் போகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள்  எதிர்ப்புகளை சந்திக்க முடியாமல் வரவேண்டிய வாய்ப்புக் களை நழுவ விடுவார்கள். கூட்டாளிகளிடமும் மனசஞ்சலங்கள் உண்டாகும். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல் பட்டாலும் வீண் பழிச்சொற்களால் பணியில் நாட்டம் செலுத்த முடியாத நிலைக்கு ஆளக நேரிடும். அரசியல்வாதிகள் மேடை பேச்சுக் களில் கவனமுடன் இருப்பது நல்லது. குருவுக்கு பரிகாரம் செய்வது தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

உத்திரம் 2,3,4ம் பாதங்கள்

யார் மனதையும் புண்படுத்தாமல் பேசக் கூடிய பண்பு கொண்ட உங்களுக்கு, குருபகவான் ஜீவன ஸ்தானமாக 10.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நிறைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். 2.ல் சனி ராகுவும், 8.ல் கேதுவும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையேயும் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலு;தினால் மருத்துவ செலவுகள் குறையும். எதிலும் சிந்தித்து செயல்படவும்.

அஸ்தம் :

பிறருக்கு உதவி செய்யும் குணமும் அதிக உணர்ச்சி வசப்படக்கூடிய பண்பும் கொண்ட உங்களுக்கு குருபகவான் ஜீவன ஸ்தானமான 10.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்ற தாமதப்படும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல் டென்ன் அதிகரிக்கும். ஏழரை சனி நடைபெறுவதும் ராகு கேது 2,8ல் சஞ்சரிப்பதும் கணவன் மனைவியிடையே வீணட குழப்பங்களை உண்டாக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருப்பதால் முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைக்கவும். உடல் ஆரோக்கி யத்திலும், உணவு வியத்திலும் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

சித்திரை 1,2ம் பாதங்கள்

நடைமுறைக்கு ஒத்துப்போக கூடிய குணமும் நல்ல அறிவு கூர்மையும் கொண்ட உங்களுக்கு குருபகவான் ஜீவன ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார, உத்தியோக ரீதியாக நெருக்கடிகளை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர் களுக்கு, தகுதிக்கேற்ற வேளை கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். 2.ம் வீட்டில் சனி ராகுவும் 8.ல் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை பெற முடியும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். 


அதிர்டம் அளிப்பவை 

எண் - 4,5,6,7,8
நிறம் - பச்வை, நீலம்
கிழமை - புதன், சனி
கல் - மரகத பச்சை
திசை - வடக்கு 
தெய்வம் - ஸ்ரீவிணு

பரிகாரம் :

குருபகவான் ஜென்மராசிக்கு 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தொடர்ந்து குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. வியாழக் கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, கொண்டை கடலை மாவை சற்றுவது மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றவது நல்லது. சனி 2ல் சஞ்சரித்து ஏழரை சனியில் குடும்ப சனி நடைபெறுவதால் சனி பரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. ஜென்ம ராசிக்கு 2இல் ராகுவும் 8.இல் கேதுவும் சஞ் சாரம் செய்வதால் ராகுகேதுவுக்கு சர்பசாந்தி செய்யவும்.


No comments: