Wednesday, May 22, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி




மற்றவர்களுக்க உதவி செய்வதில் அதிக ஆர்பம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 2. 11க்கு அதிபதியான குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5.ம் வீட்டில் வரும் 28.5.2013 முதல்  சஞ்சாரம் செய்ய விருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிலைத்திருக்கும்.  கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். மணமாகதவர்களுக்கு மணமாகும். சொந்த பூமிமனை வாங்கும் யோகமும்  பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின்  ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். சனியும் ராகுவும் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபங்கள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். கேது 3.இல் இருப்பதால் எடுக்கும் குருபார்வை ஜென்ம ராசிக்கும் 9,11.ஆம் இடங்களுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும் புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு அழகான புத்திர பாக்கியமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். அரசியல்வாதிகளுக்கு மக்களிடையே மதிப்பும் மரியாதையும் உயரும். கடனக்ள அனைத்தும் குறையும். சேமிப்புகள் பெருகும்.

முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்
மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு


இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்

27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு





குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .

117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு



please contact my postal adress  



Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com



Bank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

தேக ஆரோக்கியம் :

உங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். பழைய சிக்கல்கள் கடங்கள் யாவும் விலகி மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எதிலும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

குடும்பத்தில்

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்மும் உண்டாகும். மண வயதை அடைந்தவர் களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கரம் பிடித்து மகிழ்வர் பொருளாதார மேபாடுகளால் குடும்பத்திற்குத் தேவையான அதிநவீன பொருட்களை வாங்குவதுடன், புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் பல காரியங்களை சாதிக்க முடியும். கடன்கள் யாவும் குறையும்.

கொடுக்கல் வாங்கல் :

குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடிவரும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். பெபொது நல காரியங்களுக்காகவும் செலவுகள் செய்வீர்கள். பூர்வீக சொத்து வியங்களிலிருந்த வம்பு வழக்கு களில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக் கும். சேமிப்புகளும் பெருகும்.

தொழில் வியாபாரிகளுக்கு :

செய்யும் தொழில் மேன்மையும் கூட்டாளிகளால் அனுகூலமும் உண்டாகும். புதிய புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்க முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் பெருகும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பல கிளைகளை நிறுவக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலாளர்களின் ஆதரவு களால் எதையும் சிறப்பாக செய்த முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியில் திறம்பட செயல்பட்டு பல பரிசுகளையும், பாராட்டுதல்களையும், உயர் பதவிகளையும் பெறுவீர்கள். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று அலைச்சல்களை குறைத்துக் கொள்ளமுடியும். புதிய வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற கல்விக்கேற்ற வேலை வாய்ப்பும் கிட்டும் வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல் படுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

மக்களின் செல்வாக்கு மிகச் சிறப்பாக இருக்கும். இவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த மாண்புமிகு பதவி களையும் பெறமுடியும். கட்சி பணிகளுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், பண வரவுகளும் மிக சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு கட்சி பணிகளுக்காக சென்றுவருவீர்கள். மதிப்பும் மதியாதையும் உயர்வடையும்.

விவசாயிகளுக்கு :

விவசாயகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பூமிமனை, அதிநவீன கருவிகள் போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். அரசுவழியில் பல நற்பலன்கள் உண்டாகும். வங்கி கடன்களும் கிடைக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் பெருகும். தேவையற்ற வம்பு பிரச்சினைகள் யாவும் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.

பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர் களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் உண்டாகும். ஆடை அணிகலன்கள் யாவும் சேரும். சிலருக்கு சொந்த கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்ப தாக அமையும். புத்திரபாக்கியம் சிறப்பாக கிடைக்கும்.

படிப்பு :

மாணவ மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கமுடியும். நல்ல மதிப்பெண்களை பெற முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். நல்ல நண்பர்களின் நட்புகளால் பல சாதனைகளை செய்வீர்கள். கல்விக்காக சுற்றலா தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பும் அமையும். விளையாட்டு போட்டி களிலும் பரிசுகளை தட்டிச்செல்வீர்கள்.

ஸ்பெகுலேன் :
ஷேர் ரேஸ், லாட்டரி போன்றவற்றில் எதிர்பாராத வகையில் லாபங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் தரமும் உயர்வடையும்.

குரு பகவான் மிருகசீரி நட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.6.2013 வரை

குருபகவான் 3, 10.க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் பஞ்சமான ஸ்தான மான 5.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருக்கும் இக்காலங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண சுபகாரியங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகம். பூர்வீகசொத்து வியங்களில் இருந்த வம்பு வழக்குகள் யாவும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு உண்டாகும். சிலர் சொந்த பூமி மனை, வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள் 3.ம் வீட்டில் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். சனியும் ராகுவும் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகி லாபம் பெருகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் மகிழ்ச்சிளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் அனைத்தையும் தடையின்றி பெறமுடியும். அரசியல்வாதிகளுக்கு பத்திரிகை நண்பர்களின் ஆதரவுகள் பெயர் புகழை உயர்த்த உதவும். துர்கை அம்மனை வழிபடு வது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் பஞ்சம ஸ்தானமான 5.ஆம் வீட்டில் சஞ் சரிக்கும் இக்காலங்களும் பொற்காலங்களே! கேது மூன்றில் சஞ்சரிப்பதால் கிடைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பங்கள் நடை பெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும. புத்தி ரர்களால் மனநிறைவு ஏற்படும். சொந்த பூமி மனை சேர்க்கையும் பூர்வீக சொத்துக் களால் லாபமும் உண்டாகும். பகைமை பாராட்டிய உறவினர்களும் நட்புகளும் காட்டு வார்கள். கணவன், மனைவியிடையேயும் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்படமுடியும். சனியும் ராகுவும் 9.இல் சஞ்சரிப்பதால் தொழில் வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இட மாற்றத்தைப் பெறமுடியும். மாணவர்கள் கல்வி யில் ஜொலிப்பார்கள். பள்ளி கல்லூரி களுக் கும் பெருமை உண்டாகும். விவசாயி களின் விளைச்சல்கள் யாவும் சிறப்பாக அமைந்து லாபமும் பெருகும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 5 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொரளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலிலும் சாரளமாக இருப்பதால் பல பெரிய மனிதர்களின் நட்புகள் கிடைக்கும் எளிதில் கொடுத்த கடன் களையும் வசூலிக்க முடியும். பொன்னும் பொருளும் சேரும். உடல் ஆரோக்கியத்திலும் புத்துணர்வும், தெம்பும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளையும் தடை யின்றிப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி யினைப் பெறமுடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங் களை பெறமுடியும். கௌரமானப் பதவி உயர்வுகளையும் பெற்று பெயர் புகழை உயர்த்தி கொள்ள முடியும். அரசியல்வாதி களுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருக் கும். மாணவர்களும் கல்வியில் பல சாதனை களை செய்வார்கள். வினாயகரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2014 வரை

பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமும், கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் சிறப்பாகவே இருக்கும். சொத்துக்கள் வாங்கும் வியத்தில் சற்று கவன முடனிருத்தல் நல்லது. கேது 3 லும் சனி ராகு 9 லும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார கதியாக மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் நிம்மதியான நிலை யிருக்கும். எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். விவசாயிகள் உழைப் பிற்கேற்ற பலனைப் பெற சற்றே பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்களின் கல்வித் திறன் உயரும். அரசியல் வாதிகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப் பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவை பெற முடியும். தட்சிணா மூர்த்தியை வழி படுவது நல்லது.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 5 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக் காலங்களில் சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியாகும். 9 இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர் களையும் அனுசரித்து நடந்து கொண்டால் நற் பலனைப் பெறமுடியும். தொழில் வியா பாரத்தில் சில போட்டிகளை சந்திக்க வேண்டியிருப்பதாலும் கிடைக்க வேண்டிய லாபங் களும், வாய்ப்புகளும் தடையின்றி கிட்டும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அதிக நற்பலன்களை பெற முடியும். குடும் பத்திலும் மகிழ்ச்சித் தரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். புத்திரவழியில் ப+ரிப்பு ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 5.ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எல்லாவித பிரச்சினைகளும் விலகி குடும்பத் தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தடைப்பட் திருமண சுபகாரியமுயற்சிகளிலும் சாதகப் பலன் உண்டாகும். பண வரவுகள் பஞ்சமின்றியிருப்பதால் ஆடை அணி கலன்களை வாங்கி சேர்ப்பீர்க்ள். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் லாப மளிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரித்தாலும்  வெளி வட்டாரத் தொடர்புள் சிறப்பாகவே இருக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும்  உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக கேது 3.இல் சஞ்சரிப்பதல் பலபெரிய மனிதர்களின் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தர்கள் உடன் பளுவை குறைத்துக் கொள்ளமுடியும். அரசியல்வாதிகளின் பெயர் புகழை உயர்த்தி கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

அவிட்டம் 3,4ம் பாதங்கள் :

நல்ல ஞாபக சக்தியும் எதிர்கால லட்சியங்களுக்காக உழைக்கும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு குருபகவான் ஜென்ம ராசிக்கு 5.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சொந்த பூமி மனை யாவும் சேரும். புத்திரபாக்கியமும் அமையும். தொழில் வியாபார ரீதியாகவும் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர் களும் எதிர்பார்த்த உயர்வினை அடை வார்கள்.

சதயம் :

தன்னம்பிக்கையும், ஆத்ம பலமும் கொண்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெறும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பூர்வீக சொத்து வி~யங் களிலிருந்த வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்குவரும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். பொன்னும் பொருளும் சேரும். சனி ராகு 9.இல் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படமுடியும். கடன்கள் யாவும் குறையும்.

பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள் :

நேர்மையும், ஒழுக்கமும் சிறப்பானதாக கருதி வாழும் உங்களுக்கு பணவரவுகள் சரளமாக இருக்கும். மண வயதை அடைந்த வர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெறமுடியும். தொழில் வியா பாரமும் சிறப்பாக நடைபெறும். கூட்டாளி களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்டம் அளிப்பவை

எண் - 5,6,8,14,15,17
கிழமை - வெள்ளி, சனி
திசை - மேற்கு
நிறம் - வெள்ளை, நீலம்
கல் - நீலக்கல்
தெய்வம் - ஐயப்பன்

பரிகாரம் :

சனிபகவான் 9.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம்.

No comments: