Wednesday, September 5, 2012

தோஷநட்சத்திரமா?


தோஷநட்சத்திரமா?

திருமணம் என்பது ஒரு பெண்ணிற்கு அவ்வளவு சுலபமாக அமைந்து விடுவதில்லை. பெண்ணின் நட்சத்திரங்கள் ஆணிற்கு பொருந்துகிறதா என அலசி ஆராய்ந்த பிறகே திருமணம் செய்கிறார்கள். பொதுவாக பரணியில் பிறந்தவள் தரணி ஆள்வாள். மகத்தில் பிறந்தவள் ஜெகத்தை ஆள்வாள் என்று கூறுவது  உண்டு. திருமணப் பொருத்தம் என பார்க்கின்ற போது மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்றும், ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்றும், கேட்டை கோட்டையைக் கொடுக்கும் என்றும், மூத்த ¬த்துனருக்கு தோஷத்தைக் கொடுக்கும் என்றும், விசாக நட்சத்திரமாக இருந்தால் இளைய மைத்துனருக்கு ஆகாது என்றும் பலர் கூறி வருகின்றனர். இது நூறு சதவிகிதம் பொருந்துமா என பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும். அப்படியே நட்சத்திரத்தில் தோஷம் இருப்பதாக எடுத்துக் கொண்டாலும் அவரவர் ஜாதகங்கள் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெற போவதில்லை. நம்முடைய முன்னோர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததினால் வேண்டுமானால் இந்த நட்சத்திரங்களை கண்டு பயந்திருக்கலாமே தவிர தற்போதுள்ள சூழ்நிலைக்கு இது ஏற்றதல்ல. திருமணம் ஆனவுடன் அவரவர் தனிக்குடித்தனம் நடத்த பிரிந்து விடுவதால் இந்த நட்சத்திரங்கள் எதுவும்  யாரையும் பாதிக்காது. 


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

No comments: