Thursday, December 8, 2016

புத்தாண்டு பலன்கள் 2017 மிதுனம்

புத்தாண்டு பலன்கள் 2017  மிதுனம் 

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


(மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)


உயரமான தேகமும், மெலிந்த உடலமைப்பும் அழகான கண்களும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் இந்த 2017-ஆம் ஆண்டில் சனிபகவான் ஜென்மராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஆண்டின் முற்பாதி வரை ராகுவும் 3-ல் சஞ்சரிப் பது சாதகமான அமைப்பு ஆகும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள், உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. வரும் 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு 2-ஆம் வீட்டிலும் கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பொன்னவனான குருபகவான் வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால்  பணம் பல வழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். தனவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்திலிருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் யாவும் குறையும். திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகமும் ஏற்படும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் ஏற்பட்டு வாழ்வில் நல்ல முன்னேற்றமும், சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடுகள் படிப்படியாகக் குறையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல் பாட்டால் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறுவதோடு சிலர் எதிர்பார்த்த இடமாற் றங்களையும் பெற்று குடும்பத்தோடு சேர்த்து மகிழ்வார்கள். சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகம், வண்டி வாகனங்கள் வாங்கும் அமைப்பு, பொன்பொருள் சேர்க்கைகள் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறுசிறு செலவுகளுடனேயே குணமாகிவிடும். குடும்பத்திலுள்ளவர்களால் குறிப்பாக மனைவியால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வீர்கள். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வதன்மூலம் அலைச்சலை தவிர்க்கலாம். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கக்கூடிய அளவிற்கு உங்கள் பலமும் வளமும் கூடும். குரு மாற்றத்திற்குப் பின் குடும்பத்தில் ஒற்றுமையும் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்களும் கைகூடும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது, வீடு, மனை வாங்கக்கூடிய யோகங்களும் ஏற்படக்கூடும். பொன்பொருள் சேரும். கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் சற்றே ஏற்ற இறக்கமானப் பலன்களை சந்தித்தாலும் நல்ல லாபங்கள் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் சிறப்பான லாபம் அமையும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி உண்டாகும். போட்டி, பொறாமைகள் குறையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது உத்தமம்.

உத்தியோகம்

பணியில் சற்று வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்பட்டு உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். உயரதிகாரிகளோடு பேசும்போது பேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும்.

பெண்கள்

குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது உத்தமம். குரு மாற்றத்திற்குப்பின் பொருளாதார நிலையும் சிறப்பாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரிங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும்.

அரசியல் 

அரசியலில் உள்ளவர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும்.  எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறமுடியும். கட்சிப் பணிகளுக்காக சற்று செலவுகள் செய்யநேரும் என்றாலும் அதன் மூலம் அனுகூலமும் ஏற்படும். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.

விவசாயிகள்

விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறமுடியும். வங்கியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். கறுப்பு நிற தானியங்களால் லாபம் பெறுவீர்கள். கால்நடைகளாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சந்தையில் விளைபொருட்களுக்கேற்ற விலை கிட்டும்.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலும் மாணவ- மாணவிகள் ஆசிரியர்களின் சொற்படி நடந்து கொள்வது முன்னேற்றத்திற்கு உதவும். தேவையற்ற நட்புகளையும், பொழுது போக்குகளையும் தவிர்ப்பது உத்தமம். அரசுவழியில் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்று கல்வியில் உயர்வடைவீர்கள்.


மாதப்பலன்கள்



ஜனவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன்- செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும், மாதப் பிற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருந்தாலும் ஆடம்பரமாகச் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. பணவிவகாரங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொண்டால் வீண்விரயங்களைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் அடைவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்:  30-12-2016 இரவு 07.38 மணி முதல் 02-01-2017 அதிகாலை 04.25 மணி வரை மற்றும் 27.01.2017 அதிகாலை 02.53 மணி முதல் 29-01-2017 காலை 10.50 மணி வரை

பிப்ரவரி

மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும், அதிசாரமாக 5-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடந்தகால பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். தடைபட்ட திருமணம், சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்பட்டு உயர்வடைவீர்கள். முருகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  23-02-2017 பகல் 11.33 மணி முதல் 25-02-2017 இரவு 07.14 மணி வரை 

மார்ச்

உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலமும் வலிமையும் அதிகரிக்கும். பணவரவில் இருந்த நெருக்கடிகளும் குறையும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் எடுத்துக்கொள் வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  22-03-2017 இரவு 08.33 மணி முதல் 25-03-2017 அதிகாலை 04.53 மணி வரை

ஏப்ரல்

மாத கோளான சூரியன் 10, 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், 3-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தி லிருந்த மந்தநிலை மாறி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். மறைமுக எதிர்ப்புகளும் மறைந்து எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். அசையாச் சொத்துகள்மூலம் சிறுசிறு விரயம் ஏற்படும். தொழில், வியாபார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து, புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடவும்

சந்திராஷ்டமம்:  19-04-2017 அதிகாலை 04.43 மணி முதல் 21.-04-2017 மதியம் 02.16 மணி வரை 

மே

ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன், புதன், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய வலிமையையும், வல்லமையும் பெறுவீர்கள். பணவரவுகளிலிருந்த தடைகள்விலகி படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கப்பெறும். கடன்களும் படிப்படியாக விலகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்:  16-05-2017 பகல் 11.32 மணி முதல் 18-05-2017 இரவு 10.08 மணி வரை

ஜுன்

ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு  என்றாலும்  லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன், சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் வீண் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் சிறுசிறு போட்டிகளையும் எதிர்கொள்வீர்கள். முருப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 12-06-2017 மாலை 05.26 மணி முதல் 15-06-2017 அதிகாலை 04.24 மணி வரை

ஜுலை

ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய், 4-ல் குரு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு ஆகும். இதுமட்டுமின்றி இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சியின்மூலம் ராகு ஜென்ம ராசிக்கு 2-லிம், கேது 8-லிம் சஞ்சாரம் செய்யவுள்ளதால் தேவையற்ற அலைச்சல்களையும் உடல் ஆரோக்கிய பாதிப்பினையும் எதிர்கொள்ள நேரிடும். புத்திரர்களால் சிறுசிறு மனசஞ்சலங்களும் அசையும், அசையாச் சொத்துகளால் வீண்விரயங்களும் உண்டாகும். எதிரிகளின் தொல்லைகளால் மனநிம்மதி குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போடவேண்டி வரும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை நிலவும். சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  09-07-2017 இரவு 11.21 மணி முதல் 12-07-2017 காலை 09.59 மணி வரை 

ஆகஸ்ட்

ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதும், மாதப் பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகப்பலனைப் பெறமுடியும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று எதிர்நீச்சல் போடவேண்டி வரும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  06-08-2017 காலை 06.06 மணி முதல் 08-08-2017 மாலை 04.12 மணி வரை

செப்டம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், மாத முற்பாதி வரையில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும், இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின்மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதும்,  ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சாரம் செய்வதும், அற்புதமான அமைப்பு என்பதால் கடந்தகால பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் தடைபட்ட திருமண சுபகாரியங்களும் தடைவிலகி கைகூடும். உற்றார்- உறவினர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். அசையாச் சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  02-09-2017 பகல் 01.56 மணி முதல் 04-09-2017 இரவு 11.52 மணி வரை 

அக்டோபர்

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 4-ல் புதன், 5-ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கவிருப்பதும், ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல்வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதும், முன்கோபத்தை குறைப்பதும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களும் கௌவரமிக்க பதவிகளை அடைவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். இம்மாதம் நீங்கள் துர்க்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  29-09-2017 இரவு 10.23 மணி முதல் 02-10.2017 காலை 08.48 மணி வரை மற்றும்  27-10-2017 காலை 06.32 மணி முதல் 29-10-2017 மாலை 05.56 மணிவரை 

நவம்பர்

பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து கடன்கள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களிலும் சாதகமான பலன்கள் அமையும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிராளிகளை ஓட ஓட விரட்டி லாபங்களைப் பெறுவார்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  23-11-2017 பகல் 01.41 மணி முதல் 26-11-2017 அதிகாலை 01.59 வரை 

டிசம்பர்

உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு மாத முற்பாதி வரையில்  6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நினைத்த காரியங்களை நிறைவேற்றக்கூடிய ஆற்றலும் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். புத்திரவழியில் பூரிப்பு ஏற்படும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் நிறைவான உயர்வுகளைப் பெறமுடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். பொன் பொருள் சேரும். தொழில், வியாபாரத்திலும் நல்ல லாபங்கள் அதிகரிக்கும். அரசுவழியிலும் ஆதரவு கிட்டும் சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  20-12-2017 இரவு 07.57 மணி முதல் 23-12-2017 காலை 08.29 மணி வரை 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 5, 6, 8; நிறம் : பச்சை, வெள்ளை; கிழமை : புதன், வெள்ளி.

கல் : மரகதம்; திசை : வடக்கு; தெய்வம் : விஷ்ணு.

No comments: