Sunday, October 13, 2024

Today rasi palan - 13.10.2024

 


Today rasi palan - 13.10.2024

இன்றைய ராசிப்பலன் -  13.10.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

13-10-2024, புரட்டாசி 27, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி காலை 09.09 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 02.51 வரை பின்பு சதயம். மரணயோகம் பின்இரவு 02.51 வரை பின்பு சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

 ராகு

 

குரு (வ)

செவ்

சனி (வ)

 

13.10.2024

 

சந்தி

 

 

சுக்கி

 புதன்

கேது சூரிய

 

இன்றைய ராசிப்பலன் -  13.10.2024

மேஷம்

இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபம் இருக்கும்.

ரிஷபம்

இன்று உடன் இருப்பவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் எடுக்கும் முயற்சியில் ஏற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 03.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதி இல்லாத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறைந்து மன அமைதி ஏற்படும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 03.44 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்கள் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நிதானம் தேவை.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த கடன் வசூலாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வகையில் அனுகூலங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் பாதிப்புகள் குறையும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

கும்பம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உடன் பிறந்தவர்கள் வழியாக அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மீனம்

இன்று இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். சேமிப்பு உயரும். கடன்கள் வசூலாகும்.

No comments: