Saturday, May 22, 2021

வார ராசிப்பலன் - மே 23 முதல் 29 வரை 2021

 

வார ராசிப்பலன் - மே 23 முதல் 29 வரை 2021

வைகாசி 9 முதல் 15 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

 

சூரிய ராகு  புதன் சுக்கி

செவ்

குரு

திருக்கணித கிரக நிலை

 

 

சனி 

 

 

கேது  

 

சந்திர

 

 

 

 

 

 

 

 

 

 

கிரக மாற்றம்

வைகாசி 09 (23-05-2021) சனி வக்ர ஆரம்பம் (பகல் 02.48)

வைகாசி 12 (26-05-2021) மிதுன  புதன் (காலை 08.31)

வைகாசி 14 (28-05-2021) மிதுன சுக்கிரன். (இரவு 12.00)

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

கன்னி          21-05-2021 இரவு 09.05 மணி முதல் 23-05-2021 இரவு 11.05 மணி வரை.

துலாம்         23-05-2021 இரவு 11.05 மணி முதல் 25-05-2021 இரவு 10.55 மணி வரை.

விருச்சிகம் 25-05-2021 இரவு 10.55 மணி முதல் 27-05-2021 இரவு 10.30 மணி வரை.

தனுசு            27-05-2021 இரவு 10.30 மணி முதல் 29-05-2021 இரவு 11.40 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

28.05.2021 வைகாசி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியை திதி மூல நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அயைலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். சிவ வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -                       23, 24, 25.

சந்திராஷ்டமம் -             25-05-2021 இரவு 10.55 மணி முதல் 27-05-2021 இரவு 10.30 மணி வரை.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும் பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுக்கிரன் ஜென்ம ராசியில், சனி 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் சாதகப் பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனி பகவானை வழிபாடு செய்வதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       24, 25, 26, 27.

சந்திராஷ்டமம் - 27-05-2021 இரவு 10.30 மணி முதல் 29-05-2021 இரவு 11.40 மணி வரை.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு சூரியன், சுக்கிரன் 12-ல் இருப்பதால் வீண் செலவுகளை குறைப்பது, எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படுவதுடன் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிவ வழிபாடு மற்றும் மகாலட்சுமி வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       26, 27, 28, 29.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும், ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். குரு 8-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திருமண சுபகாரியங்கள் சிறு தடை தாமதத்திற்கு பின் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த இடமாற்றம், ஊர் மாற்றம் போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       23, 28, 29.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு, 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பணம் பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன் பொருள் சேரும். வீடு, வாகனம் போன்றவற்றையும் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறகூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பாராத அளவிற்கு லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளையும், கௌரவமான பதவி உயர்வுகளையும், அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில், வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று அபிவி-ருத்தியை பெருக்கி கொள்ள முடியும். துர்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

வெற்றி தரும் நாட்கள் -                       24, 25.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் பிரச்சினைகள் யாவும் விலகி ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவு ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். கேது 3-ல் இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் -                       23, 28, 29.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், சுக்கிரன், ராகு சஞ்சரிப்பது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் 5-ல் குரு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க முடியும். தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவினை தவிர்க்கலாம். குடும்பத்தில் ஏற்படும் ஒற்றுமை குறைவுகளால் மனநிம்மதி குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். தேவையற்ற அலைச்சல்களால் எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெறமுடியும். மகாலட்சுமி வழிபாடும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடும் செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       24, 25, 28, 29.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். சூரியன் 7-ல், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்களால் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். பிரதோஷ நாளில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்வது மற்றும் துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -                       23, 26, 27.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சூரியன், ராகு 6-ல் சஞ்சரிப்பது உங்களுக்கு தைரியத்தை தரக்கூடிய அமைப்பாகும். எந்த பிரச்சினையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சனி 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குரு 3-ல் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். வைகாசி விசாக நாளில் முருக வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

வெற்றி தரும் நாட்கள் -                       23, 24, 25, 28, 29.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நல்ல வாய்ப்புகளை அடையும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்புடன் இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கு சற்று தாமத நிலை உண்டாகும். சிவ வழிபாட்டையும் துர்கை வழிபாட்டையும் செய்து வந்தால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       24, 25, 26, 27.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பது வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். தேவையற்ற நெருக்கடிகள், வரவுக்கு மீறிய செலவுகள், வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி  எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலையே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். உடல்நிலையில் சோர்வு, கை, கால் வலி ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       26, 27, 28, 29.

சந்திராஷ்டமம் - 21-05-2021 இரவு 09.05 மணி முதல் 23-05-2021 இரவு 11.05 மணி வரை.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி வலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவு பெற்று கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறையும் வாரமாக இவ்வாரம் இருக்கும். சிறப்பான பணவரவால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். முருக வழிபாடு செய்வதும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                      23, 28, 29.

சந்திராஷ்டமம் - 23-05-2021 இரவு 11.05 மணி முதல் 25-05-2021 இரவு 10.55 மணி வரை.

No comments: