வார ராசிப்பலன் - மே 2 முதல் 8 வரை 2021
சித்திரை 19 முதல் 25 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர்
கோயில் தெரு,
தபால் பெட்டி எண் -
2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு,
இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
சுக்கி
சூரிய |
ராகு புதன் |
செவ்
|
குரு
|
திருக்கணித
கிரக நிலை |
|
|
சனி
|
|
||
சந்திர |
கேது |
|
|
,
கிரக மாற்றம்
சித்திரை 21 (04-05-2021)
ரிஷப சுக்கிரன் (பகல் 01.26)
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு 30-04-2021 பகல்
12.07 மணி முதல் 02-05-2021 பகல் 02.45 மணி வரை.
மகரம் 02-05-2021 பகல்
02.45 மணி முதல் 04-05-2021 இரவு 08.43 மணி வரை.
கும்பம் 04-05-2021 இரவு
08.43 மணி முதல் 07-05-2021 அதிகாலை 05.54 மணி வரை.
மீனம் 07-05-2021
அதிகாலை 05.54 மணி முதல் 09-05-2021 மாலை 05.28 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
தைரியமும், அஞ்சா நெஞ்சமும்
உடன் பிறந்தது என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல்
கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் செவ்வாய், 11-ல் குரு
சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்பட்டு சகல விதத்திலும்
மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் ஏற்றம் ஏற்படும். கடந்த கால கடன்கள்
எல்லாம் விலகி சேமிக்கும் அளவிற்கு தாராள தனவரவுகளும் உண்டாகும். குடும்பத்தில்
சுபிட்சமான நிலை இருக்கும். பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும்.
சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு
சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில்
சற்று கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி
எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த
முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி
விட கூடிய ஆற்றலை பெறுவீர்கள். தொழிலாளர்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து
செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.
தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். சிவ வழிபாடும், அம்மன்
வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5, 6.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பார்ப்பதற்கு சாதாரணப் பேர்
வழியாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட
ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால்
எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக செயல்படுவது உத்தமம். பெரியத்
தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உடல்
ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை
தவிர்க்கலாம். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம்
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும்
சிக்கனமாக செயல்படுவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம்.
குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து
செல்ல வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும்.
எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். சிந்தித்து
செயல்பட்டால் மட்டுமே எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைய முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில்
தலையீடு செய்யாது இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
சஷ்டியன்று முருக வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7, 8.
சந்திராஷ்டமம் - 30-04-2021 பகல் 12.07 மணி முதல் 02-05-2021
பகல் 02.45 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
தன்னுடைய ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு
எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு
இருப்பதாலும் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம்
நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்கள்
தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது.
குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்
பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணம்
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். அசையா
சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில்,
வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும்.
புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்கள் கிட்டும்.
உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப்
பெறுவார்கள். சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் மற்றும்
இடமாற்றமும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சனி பகவான் வழிபாடும் விஷ்ணு
வழிபாடும் செய்வது சிறந்தது.
வெற்றி தரும் நாட்கள் - 7, 8.
சந்திராஷ்டமம் -- 02-05-2021 பகல் 02.45 மணி முதல் 04-05-2021
இரவு 08.43 மணி வரை.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
கள்ளம் கபடமின்றி
வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும், பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல்
நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன்,
11-ல் புதன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றமிகுந்த
பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல வாய்ப்புகள்
உங்களை தேடி வரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும்
தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு எதிர்பார்க்கும்
உயர்வுகளை அடைவார்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் சென்று பணிபுரியும்
வாய்ப்பும் அமையும். 7-ல் சனி இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது
நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள்
ராசிக்கு குரு 8-லும் செவ்வாய் 12-லும் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன்
இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று
கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சில்
பொறுமையுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். முருக வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4.
சந்திராஷ்டமம் -- 04-05-2021 இரவு 08.43 மணி முதல் 07-05-2021
அதிகாலை 05.54 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
நீதி நேர்மைக்கு
கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என
நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல்
குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து வலமான
பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார ரீதியாக மேன்மைகள்
உண்டாகும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஓற்றுமை
நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உடல்
ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல்
உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும்
பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி
ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள்
நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக
இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளி
வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை
அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். சிவ வழிபாடும், விநாயகர்
வழிபாடும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 6.
சந்திராஷ்டமம் - 07-05-2021 அதிகாலை 05.54 மணி முதல் 09-05-2021
மாலை 05.28 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
தவறு செய்பவர்களைக்கூட தன்
அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும்
சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து
சுபகாரியங்கள் கைகூடும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் 3-ல் கேது, 10-ல்
செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்கள் உதவியுடன் அனுகூலங்களை அடைவீர்கள். உங்கள்
தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள்
உண்டாகலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து
செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது
நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். தொழில், வியாபாரம்
செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும்.
பயணங்களால் வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு
கிட்டும். கூட்டாளிகள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில்
நிம்மதியான நிலை இருக்கும். கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். சிவ வழிபாடும்,
தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7, 8.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
தோல்விகளை கண்டு துவண்டு
விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 5-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார வரவுகள் சிறப்பாக இருந்து
உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். தொழில் உத்தியோக ரீதியாக ஏற்றமான பலன்களை
அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
நிறைய போட்டிகள் நிலவினாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் ஆற்றலை அடைவீர்கள்.
உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சூரியன் 7-ல், ராகு 8-ல்
சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்-
மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்
போது ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படுவது சிறப்பு. பணவரவுகளில் சுமாரான
நிலையிருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை
பூர்த்தி செய்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்புடன் செயல்பட்டு
உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதுடன் எதிர்பார்த்த உயர்வையும் பெற முடியும். சனி
மற்றும் விஷ்ணுவை வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 2, 7, 8.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
மற்றவர்களின்
எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல்
கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 6-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக
இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு,
மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். திருமண
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்குப் பின் அனுகூலப் பலன்
உண்டாகும். 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள்
தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது,
வண்டி வாகனங்களில் செல்கின்ற போது கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில்
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார
நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப்
பெற்று விடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகள்
கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து
உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற
வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
யாருக்கும் கீழ் படிந்து
அடிமையாக நடப்பது என்பதை இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 5-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற
இடையூறுகள் ஏற்பட்டு இருப்பதை அனுபவிக்க முடியாது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக
இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில்
சிறுசிறு பாதிப்புகள் வந்து விலகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து
வேறுபாடுகள் உண்டாகும். சனி 2-ல் இருப்பதால் நெருங்கியவர்களிடம் பேசுகின்ற போது
பொறுமையுடன் இருப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை
சற்று தள்ளி வைக்கவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில
ஆதாயங்களை அடைய முடியும். அசையும், அசையா சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை.
தொழிலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில்,
வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள்
தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடும், முருக
வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 5, 6.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும்,
நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 5-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால்
குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொருளாதார
ரீதியாகவும் மேன்மைகளை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பாராத
உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும்.
சூரியன் 4-ல் இருப்பதால் அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதி, மந்தநிலை போன்ற
ஆரோக்கிய குறைவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது,
தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொன், பொருள் சேரும். திருமண
சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து
சென்றால் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புதிய
சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செய்யும் தொழில்,
வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள்.
துர்கையம்மனையும், சிவனையும் வழிபாடு செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 7, 8.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தனக்கு பிடித்தவர்களிடம்
அன்புடன் நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பிடிவாத
குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பது
சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் சூரியன் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து
உங்கள் பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது
நல்லது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.
நவீனகரமான பொருட் சேர்க்கையும் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால்
தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குடும்பத்தில் கணவன்-
மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்
உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். தொழில்,
வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில்
கையெழுத்திடும் போது சற்றே கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து
செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். அசையும், அசையா சொத்துக்கள்
வாங்குவதில் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில்
கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிட்டும். துர்கை வழிபாடும்,
முருக வழிபாடும் மேற்கொள்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 5, 6.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
சின்ன சின்ன விஷயங்களில்
கூட குற்றம் கண்டு பிடித்து பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என
உணர்த்தும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சனி
சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வலமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் பலமும்
வலிமையும் கூடக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும்.
கணவன்- மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்ப ஒற்றுமை சற்று
குறையும். சூரியன் 2-ல், செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை
கடைபிடித்து, விட்டு கொடுத்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்
நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தடைபட்ட சுபகாரிய முயற்சிகள்
கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து
கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை
உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். பணம்
கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை
சமாளித்து லாபத்தினைப் பெறமுடியும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன்
மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது,
சஷ்டி விரதம் இருப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 7, 8.
No comments:
Post a Comment