வார ராசிப்பலன் - மே 31 முதல் ஜுன் 6 வரை 2020
வைகாசி 18 முதல் 24 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L,
M.A.astro. PhD in Astrology.
No:
19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.
வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
|
சூரிய சுக்கி(வ)
|
புதன் ராகு
|
செவ்
|
திருக்கணித கிரக நிலை
|
|
|
குரு(வ) சனி(வ)
|
சந்தி
|
||
கேது
|
|
|
|
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
சிம்மம்
29-05-2020 காலை 06.59 மணி முதல்
31-05-2020 காலை 10.20 மணி வரை.
கன்னி
31-05-2020 காலை 10.20 மணி முதல்
02-06-2020 பகல் 12.00 மணி வரை.
துலாம்
02-06-2020 பகல் 12.00 மணி முதல்
04-06-2020 பகல் 01.08 மணி வரை.
விருச்சிகம்
04-06-2020 பகல் 01.08 மணி முதல்
06-06-2020 பகல் 03.12 மணி வரை.
தனுசு
06-06-2020 பகல் 03.12 மணி முதல்
08-06-2020 இரவு 07.45 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
01.06.2020 வைகாசி 19 ஆம் தேதி
திங்கட்கிழமை தசமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30
மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை
03.06.2020 வைகாசி 21 ஆம் தேதி
புதன்கிழமை துவாதசி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல்
06.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த
அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் செவ்வாய்
சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் இருந்த தடைகள் விலகி வெற்றி மேல் வெற்றி
அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு, சனி வக்ரம் பெற்று இருப்பதால்
பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன்--
மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் ஒருவரையொருவர்
அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல
வரன்கள் வீடு தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும்
அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக
செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து
கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். புதிய தொழில் தொடங்கும்
முயற்சிகளில் சாதகமான பலனை அடைவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும்
வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளையும்
காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று
குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். சிவ வழிபாட்டையும், தட்சிணாமூர்த்தி
வழிபாட்டையும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 31, 1,
2, 3.
சந்திராஷ்டமம் - 04-06-2020
பகல் 01.08 மணி முதல் 06-06-2020 பகல் 03.12 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும்,
சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல
வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சூரியன் ஜென்ம ராசியில் இருப்பதால் எந்த
விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம்
பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக்
கொள்வது உத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம்
ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். எடுக்கும் புதிய முயற்சிகளில்
தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் யாவும்
பூர்த்தியாகும். கணவன்-- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்
என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது
மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் கொடுத்த
கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து
செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயர்
அதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். துர்கையம்மனை மனதார நினைத்து
வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5.
சந்திராஷ்டமம் - 06-06-2020
பகல் 03.12 மணி முதல் 08-06-2020 இரவு 07.45 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்
சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே,
உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 8-ல் சனி, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள்
எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
வரவுக்கு மீறிய வீண் செலவுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு, தேவையற்ற அலைச்சல்
ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பண
வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக்
கொள்வதன் மூலம் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சுப காரியங்களுக்கான
முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கணவன்-- மனைவி இடையே சிறுசிறு ஒற்றுமை
குறைவுகள் ஏற்படும். விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சில நேரங்களில்
நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்கள் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை
ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்-- வாங்கலில்
மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது
உத்தமம். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க
முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற
வேண்டியிருக்கும். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 31, 4, 5, 6.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு
எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு
ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய
ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். செவ்வாய் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில்
சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு
இதுவரை இருந்த போட்டிகள் வம்பு வழக்குகள் எல்லாம் குறைந்து லாபகரமான பலன்களை
அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும்
மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு
ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை
தாமதத்திற்கு பின் அனுகூலம் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு
உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும்.
கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான
நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். துர்கையம்மனை
மனதார நினைத்து வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 31, 1, 2, 6.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும்
எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன்,
சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதும், 11-ல் புதன், ராகு
சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும்
மேலோங்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்--
மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பொருட்கள்
வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்-- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும்.
கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால்
தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து
வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் விலகி சாதகப்
பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை
அனுசரித்து நடந்து கொண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியைப்
பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விநாயகர் வழிபாடு
செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 31, 2, 3, 4.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை
மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல்
செவ்வாய் 9-ல் சுக்கிரன் 10-ல் புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம்
நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும்
அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான
சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி நிலவும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
தாராள தனவரவுகளால் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும்,
அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கான பலனை எளிதில் அடைவீர்கள். பணியில்
எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள்
கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார்
உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல
லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கொடுக்கல்-
வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று
சிந்தித்து செயல்படுவது நல்லது. சனி பகவானை மனதார நினைத்து வழிபடுவது, சனிகவசங்கள்
படிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 5, 6.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா
ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை
அனுபவிக்க இடையூறுகள், வீண் அலைச்சல், சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம்
என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, எதிலும் சற்று பொறுமையை
கடைப்பிடிப்பது நல்லது. பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, தேவையற்ற பயணங்களை
தவிர்ப்பது உத்தமம். புதன் 9-ல் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால்
எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து
உங்களது தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்கு பிறகு
அனுகூலப்பலன் கிட்டும். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்.
உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள்.
கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக
செயல்பட்டால் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி
உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது
உத்தமம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருக்கும். வேலையாட்களை அனுசரித்து
செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. விநாயகர் வழிபாடு
மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 31, 3, 4.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி
தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல்
சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக
முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு
அமையும். வெளித் தொடர்புகளால் அனுகூலப் பலன் உண்டாகும். சிறப்பான பணவரவால் குடும்ப
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம்
தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு, தேவையற்ற
அலைச்சல் ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்வது, குடும்பத்தில் உள்ளவர்களை
அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில்
சற்று அக்கறை செலுத்துவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை
இருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைப்பதில் தாமதம்
உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் அனுகூலப் பலனை
பெற முடியும். பணம் சம்பந்தமான கொடுக்கல்-- வாங்கலில் சற்று கவனம் தேவை. முருக
கடவுளை மனதார நினைத்து வழிபட்டால் நற்பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 31, 1, 2, 5, 6.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை
கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறைந்து வலமான பலன்களை
பெறுவீர்கள். உங்களது பலமும் வலிமையும் கூடும். பணவரவில் இருந்த தடைகள் விலகும்.
சிலருக்கு அசையும் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை
சற்று குறைந்து காணப்படும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது, வீண் வாக்குவாதங்களை
தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண
சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல்--
வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும்.
தொழில் வியாபாரத்தில் புது மாற்றங்கள்
உண்டாகும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள், பிரச்சினைகள் எல்லாம் விலகி எல்லா
வகையிலும் ஏற்றங்களை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில்
சிலருக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைப்பதற்கான
வாய்ப்புகள் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும்.
பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும்
அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர
ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி சஞ்சரித்தாலும் 5-ல் சுக்கிரன், 6-ல்
ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள்
முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செவ்வாய் 2--ல் சஞ்சரிப்பதால்
குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து
செல்வது, தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில்
நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும்
தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் சற்று கவனமுடன்
இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை
பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து
செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர்
தனவரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்
பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தினமும்
சூரியநமஸ்காரம் செய்வது, சிவ பெருமானை மனதார நினைத்து வழிபடுவது நன்மையை தரும்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4.
சந்திராஷ்டமம் - 29-05-2020 காலை 06.59 மணி முதல் 31-05-2020 காலை
10.20 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான
தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன்,
11-ல் கேது சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும்
பூரிப்பும் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும்
கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்--
மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்து
செல்வது உத்தமம். ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முடிந்த
வரை மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில்
அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் உத்தமம்.
உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை
ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும்
உயர்வடையும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய
வாய்ப்புகள் கிடைக்கும். வெளி தொடர்புகளால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.
கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்-- வாங்கலில் மற்றவர்களை நம்பி
பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாட்டை மேற்கொண்டால்
மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 4, 5, 6.
சந்திராஷ்டமம் - 31-05-2020
காலை 10.20 மணி முதல் 02-06-2020 பகல் 12.00 மணி வரை.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும்
கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீனராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன்,
4-ல் புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை அடைவீர்கள்.
குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக
அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.
கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள்
தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் இருக்காது. திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த
தடை தாமதங்கள் விலகி சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன்
செயல்படுவார்கள். பொது நல காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு
பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்-- வாங்கல் சரளமாக
நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி
அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய
உயர்வுகள் யாவும் கிடைப்பதற்கான சூழ்நிலை அமையும். துர்கையம்மனை வழிபாடு செய்வது
உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 31, 1, 6.
சந்திராஷ்டமம் - 02-06-2020
பகல் 12.00 மணி முதல் 04-06-2020 பகல் 01.08 மணி வரை.
No comments:
Post a Comment