Saturday, May 2, 2020

வார ராசிப்பலன்- மே 3 முதல் 9 வரை 2020


வார ராசிப்பலன்- மே 3 முதல் 9 வரை 2020 
சித்திரை 20  முதல் 26 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



சூரிய, புதன் 
சுக்கி
ராகு
திருக்கணித கிரக நிலை

சனி செவ் குரு
சந்திர
கேது  


கிரக மாற்றம்
04--05-2020 கும்பத்தில் செவ்வாய் இரவு 08.40 மணிக்கு
09--05-2020 ரிஷபத்தில் புதன் காலை 09.46 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
சிம்மம்
02-05-2020 அதிகாலை 01.05 மணி முதல் 04-05-2020 அதிகாலை 03.08 மணி வரை.
கன்னி
04-05-2020 அதிகாலை 03.08 மணி முதல் 06-05-2020 அதிகாலை 03.15 மணி வரை.
துலாம்
06-05-2020 அதிகாலை 03.15 மணி முதல் 08-05-2020 அதிகாலை 03.13 மணி வரை.
விருச்சிகம்
08-05-2020 அதிகாலை 03.13 மணி முதல் 10-05-2020 அதிகாலை 05.03 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
04.05.2020 சித்திரை 21 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

06.05.2020 சித்திரை 23 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் வரும் 5-ஆம் தேதி முதல் ராசியாதிபதி செவ்வாய் 11-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைத்து இருக்கும் பிரச்சினைகள் குறையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்பதால் விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை நிலவும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் உறவினர்களால் இடையூறு உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும் என்றாலும் எதையும் எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கிடைத்து நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி பகவானுக்கு பரிகாரமாக ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  4, 5, 6, 7.
சந்திராஷ்டமம் -   08-05-2020 அதிகாலை 03.13 மணி முதல் 10-05-2020 அதிகாலை 05.03 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காத வாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகி உங்களது அனைத்து தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல் டென்ஷன் ஏற்படுவதால் மனநிம்மதி குறைவு இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவால் சிக்கல்கள் விலகும். பல பெரிய மனிதர்களின் உதவியும், ஆதரவும் கிடைக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது, ராகு காலத்தில் துர்கையம்மனை மனதார நினைப்பது, சுமங்கலி பெண்களுக்கு உதவி செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  6, 7, 8, 9.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் சனி, குரு சஞ்சரிப்பது அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் சூரியன், புதன் 11-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமையும் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற ஒற்றுமை குறைவு உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும் என்றாலும் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராத வகையில் கிடைக்கப் பெறும் உதவிகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நற்பலனைப் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். விஷ்ணுவையும், மகா லக்ஷ்மியையும் வணங்கி வழிபடுவது மனதார நினைப்பது மூலம் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  3, 8, 9.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன், புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வளமான பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்பும் நல்ல செய்தி கிடைக்கும் சூழ்நிலையும் உண்டாகும். 7-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது பிரச்சினைகளை குறைக்கும். கடன்கள் சற்று குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். புத்திரர்கள் வழியில் இருந்த சங்கடங்கள் குறையும். செய்யும் தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் போட்ட முதலீடுகளுக்கு பங்கம் ஏற்படாது. கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து சென்றால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். உற்றார், உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். அம்மன் வழிபாடு செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -- 4, 5.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 6-ல் சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் தாராள தனவரவால் உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக சாதகமான பலன்களை அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்கு பின் பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். 5-ல் கேது இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறு ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். அசையும், அசையா சொத்துகளால் சுப செலவுகள் ஏற்படும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வதும் சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் -- 6, 7.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சனி, 8-ல் சூரியன் சஞ்சரிப்பது அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் 5-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதும் வரும் 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணவரவுகள் நன்றாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையா சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வதாலும், விஷ்ணுவை மனதார நினைப்பதாலும் மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -- 4, 5, 8, 9.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது 7-ல் புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஜென்ம ராசிக்கு 4-ல் சனி, குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவு ஆதரவாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியாக நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும் சூழ்நிலை மேலதிகாரிகளின் ஆதரவு நன்றாக இருக்கும் நிலை உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் அனுகூலமாக இருக்கும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  3, 6, 7.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி 6-ல் சூரியன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த உதவிகளை நண்பர்கள் மூலம் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்வர்கள் மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் சூழ்நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். அம்மனையும் முருக பெருமானையும் வணங்கி வழிபட்டால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4, 5, 8, 9.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். 2-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் மன அமைதி குறையலாம் என்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை நிலவினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கடன்கள் சற்று குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நற்பலன்களை பெறுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மட்டும் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது, அனுமன் துதிகளை பாடி வழிபடுவது மூலம் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  4, 5, 6, 7.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எந்த செயல் செய்வது என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சுக்கிரன் 5-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி வீண் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். வரும் 5-ம் தேதி முதல் 2-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறு உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையீடுவதை தவிர்த்து விடுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். முருக வழிபாட்டையும், அம்மன் வழிபாட்டையும் செய்து வந்தால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  6, 7, 8, 9.
சந்திராஷ்டமம் -   02-05-2020 அதிகாலை 01.05 மணி முதல் 04-05-2020 அதிகாலை 03.08 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். 5-ல் ராகு 12-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நற்பலனை பெறுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக இருப்பார்கள். கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பலன் படுத்தி கொண்டால் எதிர்காலத்தில் சிறப்பான நிலை ஏற்படும். பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது, துர்க்கையம்மனை மனதார நினைப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  3, 8, 9.
சந்திராஷ்டமம் -   04-05-2020 அதிகாலை 03.08 மணி முதல் 06-05-2020 அதிகாலை 03.15 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு அதிசாரமாக சனி கேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் பல்வேறு அனுகூலங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக வளமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். புதிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு நன்றாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். 2-ல் சூரியன் இருப்பதால் உற்றார் உறவினர்களிடம் பேசும் போது சற்று நிதானமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. நண்பர்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். சிவ வழிபாடு செய்வது, விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  3, 4, 5.
சந்திராஷ்டமம் -   06-05-2020 அதிகாலை 03.15 மணி முதல் 08-05-2020 அதிகாலை 03.13 மணி வரை.


No comments: