வார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை
ஆடி 12 முதல் 18 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர்
முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.
வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
|
சந்தி
|
ராகு
|
|
திருக்கணித கிரக நிலை
|
செவ் சூரிய
புதன் (வ) சுக்கி
|
|
|
|
||
கேது
சனி (வ)
|
குரு(வ)
|
|
|
கிரக மாற்றம்
30-07-2019 மிதுனத்தில் புதன்
பகல் 12.00 மணிக்கு
01-08-2019 புதன் வக்ர முடிவு
காலை 09.27 மணிக்கு
03-08-2019 கடகத்தில் புதன் காலை
06.00 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
ரிஷபம் 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி
வரை.
மிதுனம் 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி
வரை.
கடகம் 31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி
வரை.
சிம்மம் 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி
வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
28.07.2019 ஆடி 12 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல்
10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை
29.07.2019 ஆடி 13 ஆம் தேதி
திங்கட்கிழமை துவாதசி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி
முதல் 07.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும்
கவர்ந்திழுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக
ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரனும், 3-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உங்களது
செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை
இருக்கும். சிறப்பான பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள்
சேரும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த
வேண்டி வரும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற
அலைச்சல் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில்
கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள்
மூலமும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம்
தேவை. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும்
சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை
நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும்
எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற
நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. சிவ வழிபாடு மற்றும்
முருக வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில்
தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி
சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல்
சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள்,
குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து
வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள்
சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன்
கடன்களும் ஓரளவு குறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை
எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும்,
பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன்
செயல்படுவார்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட
செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின்
ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு
கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை விலகி
சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். துர்கையம்மனையும் சனி பகவானையும் வணங்கி
வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 28, 31, 1.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நிதானமான அறிவாற்றலும்,
சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் திறனும் கொண்ட மிதுன ராசி
நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற
அலைச்சல், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாரம் என்பதால்
நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மன
நிம்மதி குறையும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். பேச்சில்
நிதானத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட
வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை
தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உற்றார்
உறவினர்களால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று
கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. தொழில்,
வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழுவ கூடும்
என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை
நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது
உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட
செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது.
குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் இறையருள் பரிபூரணமாக கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 2, 3.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர
ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில்
சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நினைத்தது நடக்கும் யோகம்,
தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் அமைப்பு உண்டாகும். தடைப்பட்ட
சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணம் பல வழிகளில்
தேடி வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்
வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவி விட்டு
கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும்
அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும்
வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும்
உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் ஆதரவாக
செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட
செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் கௌரவமான
பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின்
பாராட்டுதல்களைப் பெறுவார்கள். முருக வழிபாட்டையும் துர்கையம்மன் வழிபாட்டையும்
மேற்கொண்டால் குடும்பத்தில் சுபசெய்திகள் வந்து சேரும்.
வெற்றி தரும் நாட்கள் - 28, 31, 1.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே
அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்றாலும் விரய
ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்கும்.
எதிலும் நிதானமாக செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் நெருங்கியவர்கள்
மூலமாக கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி
வாக்குவாதங்கள் உண்டாகலாம். விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உற்றார்
உறவினர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். திருமண வயதை
அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த
பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில்,
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை
பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை
சேர்ப்பார்கள். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வணங்கினால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30, 2, 3.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை
பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி
புதன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால்
எடுக்கும் முயற்சியில் வெற்றி, தொழில் வியாபாரத்தில் லாபகரமான நிலை உண்டாகும்.
இருக்கும் பிரச்சினைகள் குறைந்து ஏற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின்
ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும்.
ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். வீண்
செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து
குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே இருந்த மாற்று
கருத்துக்கள் மறைந்து மனமாறி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். சிலருக்கு வீடு,
வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த
இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கல்
சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை
ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு
பெருமை சேர்க்க முடியும். சனி பகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது
மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான
பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது 10-ல்
சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, சகல விதத்திலும்
ஏற்றம் அடையக்கூடிய நல்ல வாரமாக இவ்வாரம் இருக்கும். இருக்குமிடத்தில் உங்களது
மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக்
குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில்
மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால்
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில்
சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும்
எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய
தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில்,
வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப்
பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும்.
கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டால்
கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளிலும் சாதிக்க முடியும். அம்மன்
வழிபாடு செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 31, 1, 2, 3.
சந்திராஷ்டமம் - 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும்
தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள்
ராசியதிபதி செவ்வாய், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல்
சஞ்சரிப்பதால் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் சில
கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை
குறைவுகள் உண்டாகும். 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பேச்சில் கவனமாக இருப்பது,
மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குடும்ப உறுப்பினர்களையும்,
உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய
முடியும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்தாலும் குடும்ப தேவைகள் யாவும்
பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா
சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில்,
வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர்,
வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய
முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை
பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப்
பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள்
உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 28, 2, 3.
சந்திராஷ்டமம் - 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
எல்லோருக்குமே மரியாதை
கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணம் கொண்ட தனுசு
ராசி நேயர்களே, உங்களுக்கு இவ்வாரத்தில் ஜென்ம ராசியில் சனி, கேது, அஷ்டம ஸ்தானமான
8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது
நல்லது. பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். பொருளாதார ரீதியாக
நெருக்கடிகள் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு பணவிஷயத்தில்
சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள்
தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை
சற்று தள்ளி வைப்பது உத்தமம். புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். கணவன்-
மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும்.
அசையும், அசையா சொத்துகள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில்
எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தொழில், வியாபார ரீதியான
பயணங்களால் அனுகூலங்கள் ஏற்பட்டாலும் அலைச்சல்களும் அதிகரிக்கும். பெரிய
முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை தவிர்ப்பது உத்தமம்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் சற்று
பொறுப்புடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று விட முடியும். முருக
வழிபாட்டை மேற்கொண்டால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.
வெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30.
சந்திராஷ்டமம் - 31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக்
கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை
பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல்
சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம்
நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி
அனுசரித்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும்
நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து
சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள்
நடைபெறும். உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் இருப்பதால்
நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த
கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள்
அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள்
கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு
வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடும் விநாயகர்
வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.
சந்திராஷ்டமம் - 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும், சாந்தமும், அமைதியான
தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல்
கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன்,
செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி,
கேது 11-ல் இருப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல
வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த
எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின்
ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின்
திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைப்பதுடன் எதிர்பார்க்கும் உயர்வுகளும்
கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவுகள்
திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில்
மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில்
திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு
அனுகூலப்பலன் உண்டா-கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை
அடைவீர்கள். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன்
இருப்பது உத்தமம். மகா லட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சம்
உண்டாகும். செல்வ நிலை உயரும்.
வெற்றி தரும் நாட்கள் - 31, 1, 2, 3.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
தயாள குணம், பொறுமை,
தன்னம்பிக்கை, உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே,
உங்கள் ராசியதிபதி குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதாலும் பஞ்சம ஸ்தானமான 5-ல்
சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகி
உங்களது அனைத்து பிரச்சினைகளும் விலக கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும்.
குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சூரியன், செவ்வாய் 5-ல்
சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக
அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி
மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. கணவன்-
மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் வழியில் சாதகப்பலன்
உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை
ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட
முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். முடிந்தவரை
பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப்
பெற்று விட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால்
படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அம்மன் வழிபாடும் சனி பகவான் வழிபாடும்
செய்வது உத்தமம். ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 28, 2,
3.
No comments:
Post a Comment