Friday, July 26, 2019

2019 - ஆகஸ்ட் மாத ராசிப்பலன்


2019 - ஆகஸ்ட் மாத ராசிப்பலன்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

.




ராகு
புதன் (வ)

திருக்கணித கிரக நிலை

செவ் சூரிய
சுக்கி
 

கேது
சனி (வ)
குரு(வ)

 


கிரக   மாற்றம்
1-8-2019 புதன் வக்ர நிவர்த்தி காலை 09.27 மணிக்கு
3-8-2019 கடகத்தில் புதன் காலை 06.00 மணிக்கு
9-8-2019 சிம்மத்தில் செவ்வாய் அதிகாலை 04.47 மணிக்கு
11-8-2019 குரு வக்ர நிவர்த்தி இரவு 07.35 மணிக்கு
16-8-2019 சிம்மத்தில் சுக்கிரன் இரவு 08.39 மணிக்கு
17-8-2019 சிம்மத்தில் சூரியன் பகல் 01.02 மணிக்கு
26-8-2019 சிம்மத்தில் புதன் பகல் 02.07 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். மாத முற்பாதியில் சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் நன்றாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வி மட்டுமின்றி விளையாட்டு துறைகளிலும் உயர்வடைவார்கள்.
பரிகாரம் - சிவாலயங்களுக்குச் சென்று சிவனுக்கு வில்வ இலைக் கொண்டு அர்ச்சனை அபிஷேகம் செய்வதாலும் முருக கடவுளை வழிபாடு செய்வதாலும் வாழ்வில் சிறப்பான பலன்களை அடையலாம்.
சந்திராஷ்டமம்     --  08-08-2019 மாலை 03.25 மணி முதல் 10-08-2019 இரவு 11.05 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.
பரிகாரம் - சனிக்கிழமை சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனியின் அருள் கிடைக்கப் பெற்று கஷ்டங்கள் குறையும். மேலும் அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்     -- 10-08-2019 இரவு 11.05 மணி முதல் 13-08-2019 காலை 09.25 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 17-ஆம் தேதி முதல் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். மாத ஆரம்பத்தில் சில இடையூறுகளை சந்தித்தாலும் உங்களது சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு சிறப்புடன் இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவை விட செலவுகள் அதிகமாக காணப்பட்டாலும் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் உதவிகள் கொண்டு எதையும் சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குடும்ப ஒற்றுமை சற்று குறையும் காலம் என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, மற்றவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது மிகவும் நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் டென்ஷன்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தடை, தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதும் உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும்.
பரிகாரம் - துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் மங்களம் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்     -- 13-08-2019 காலை 09.25 மணி முதல் 15-08-2019 இரவு 09.27 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சை குறைத்துக் கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம் - செவ்வாய் கிழமை விரதமிருந்து ஆறுமுக கடவுளான முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது. மேலும் சஷ்டி விரதம் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.
சந்திராஷ்டமம்     -- 15-08-2019 இரவு 09.27 மணி முதல் 18-08-2019 காலை 10.10 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்குப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். விரய ஸ்தானமான 12-ல் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம் - சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கி வழிபட்டு வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம். பிரதோஷ விரதம் இருப்பது, பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்     -- 18-08-2019 காலை 10.10 மணி முதல் 20-08-2019 இரவு 10.30 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு திருப்தகரமாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குரு 3-ல் இருப்பதால் பணவிஷயத்தில் மட்டும் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை பொருளாதார நெருக்கடிகள் போன்றவை மாறி முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம் - குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதாலும், விநாயக கடவுளை வழிபாடு செய்வதாலும் வாழ்வில் ஏற்படும் தொல்லைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்     --  20-08-2019 இரவு 10.30 மணி முதல் 23-08-2019 காலை 08.55 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாதம் 10, 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் அவற்றை எல்லாம் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களாலும் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். சிலரின் வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும்.
பரிகாரம் - நவக்கிரகங்களில் ராகுவுக்கு மந்தாரை மலரால் அர்ச்சனை செய்வதாலும், முருக கடவுளை வழிபாடு செய்வதாலும் நற்பலன்கள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்     -- 23-08-2019 காலை 08.55 மணி முதல் 25-08-2019 மாலை 04.13 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 17-ஆம் தேதி முதல் 10-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் தற்போது உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கன்னிய வாழ்க்கை அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது-. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் ஏற்பட்டு சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் கல்வியில் உயர்வடைய முடியும்.
பரிகாரம் - அம்மன் வழிபாட்டையும், சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்     --  25-08-2019 மாலை 04.13 மணி முதல் 27-08-2019 இரவு 07.40 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். மாத தொடக்கத்தில் 8-ல் சஞ்சரிக்கும் சூரியன், செவ்வாயால் உடல் ஆரோக்கியத்தில் கை கால் சோர்வு, மந்த நிலை போன்ற உபாதைகள் ஏற்படலாம். பாக்கிய ஸ்தானமான 9-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதாலும், 17-ஆம் தேதி முதல் 9-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் மாத பிற்பாதியில் ஆரோக்கிய ரீதியாக இருக்கும் பாதிப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் யாவும் விலகி அனுகூலங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை குறைத்து கொள்வது நல்லது.
பரிகாரம் - துர்கையம்மன் வழிபாடு செய்வது, மேலும் பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ வழிபாட்டை மேற்கொள்வது நன்மையை கொடுக்கும்.
சந்திராஷ்டமம்     --  31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை மற்றும் 27-08-2019 இரவு 07.40 மணி முதல் 29-08-2019 இரவு 08.10 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட உபாதைகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது உத்தமம். இம்மாதம் சூரியன், செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முடிந்த வரை உடனிருப்பவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபார ரீதியாக சாதகமான பலன்கள் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.
பரிகாரம் - சிவ பெருமானையும் முருக கடவுளையும் வணங்கி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் உள்ள தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்     -- 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை மற்றும் 29-08-2019 இரவு 08.10 மணி முதல் 31-08-2019 இரவு 07.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் மாத தொடக்கத்தில் சூரியன், செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத அனுகூலங்களை எளிதில் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலமான பலனை பெறலாம். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெறும் வாய்ப்பு அமையும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.
பரிகாரம் - வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை சாற்றி தீபம் ஏற்றி வழிபட்டால் குருவின் அருள்பார்வை பரிபூரணமாக கிட்டும். விஷ்ணு வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்     -- 04-08-2019 காலை 09.30 மணி முதல் 06-08-2019 பகல் 11.00 மணி வரை மற்றும் 31-08-2019 இரவு 07.20 மணி முதல் 02-09-2019 இரவு 07.25 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 17-ஆம் தேதி முதல் 9-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் நல்லது நடக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு ஊர் மாற்றம், இடமாற்றம் உண்டாவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். வெளி தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.
பரிகாரம் - சனிக்கிழமை சனி பகவானை வழிபாடு செய்வதும் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.
சந்திராஷ்டமம்     -- 06-08-2019 பகல் 11.00 மணி முதல் 08-08-2019 மாலை 03.25 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

04.08.2019 ஆடி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

07.08.2019 ஆடி 22 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

11.08.2019 ஆடி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

14.08.2019 ஆடி 29 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

25.08.2019 ஆவணி 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மிருகசீர்ரும் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 09.30 மணிக்குள் கன்னி இலக்கினம்.தேய்பிறை

28.08.2019 ஆவணி 11 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

No comments: