வார ராசிப்பலன் -- பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை
மாசி 12 முதல் 18 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு
பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
செவ்
|
|
|
சூரிய புதன்
|
திருக்கணித கிரக நிலை
|
ராகு
|
|
கேது
|
|
||
சனி சுக்கி
|
குரு
|
சந்தி
|
|
கிரக மாற்றம்
24--2--2019 மகரத்தில் சுக்கிரன்
இரவு 10.45 மணிக்கு
25--2--2019 மீனத்தில் புதன் காலை
08.53 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம் 23-02-2019 பகல் 11.27
மணி முதல் 25-02-2019 மாலை 04.42 மணி வரை.
விருச்சிகம் 25-02-2019
மாலை 04.42 மணி முதல் 28-02-2019 அதிகாலை 00.46 மணி வரை.
தனுசு 28-02-2019 அதிகாலை 00.46 மணி முதல் 02-03-2019
பகல் 12.40 மணி வரை.
மகரம் 02-03-2019 பகல் 12.40 மணி முதல் 05-03-2019
அதிகாலை 01.45 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
24.02.2019 மாசி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப
இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை
1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்திலும் ஒளிவு மறைவின்றி
மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே மாத கோளான சூரியன் லாப ஸ்தானமான
11-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால்
பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும்
நிறைந்திருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான
வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட
பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
அனுகூலப்பலன் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை
அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைப்பதில்
தடை தாமதம் ஏற்பட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும்
கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று
லாபத்தை தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும்.
பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற
முடியும். குரு பகவான் வழிபாடு அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 24, 2.
சந்திராஷ்டமம் - 25-02-2019 மாலை 04.42 மணி முதல் 28-02-2019 அதிகாலை 00.46 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள்
ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம்
குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை
ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை
தேடி வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகி முன்னேற்றங்கள்
ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிடைக்கும். வெளியூர்,
வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த
பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கேற்ற
பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும்.
கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது,
பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில்
அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை
ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப்பலன் ஏற்படும்.
மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். சனி பகவான் வழிபாடும்,
ல-ட்சுமி வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 27.
சந்திராஷ்டமம் - 28-02-2019 அதிகாலை 00.46 மணி முதல் 02-03-2019 பகல் 12.40 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன்
செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, செவ்வாய் உங்கள் ராசிக்கு
லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள்
உங்களை தேடி வரும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள்
ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப
ஒற்றுமை சிறப்பாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். திருமண
சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும்
கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று
லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்
பெற்று அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் ஏற்ற இறக்கமான
நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். ஆடம்பர செலவுகளை
குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக
ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால்
சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28, 1.
சந்திராஷ்டமம் - 02-03-2019 பகல் 12.40 மணி முதல் 05-03-2019 அதிகாலை 01.45 மணி வரை.
--
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக
சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் சனி
6-ல், செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும்
முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக
இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத்
தரம் உயரும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். சூரியன் 8-ல் இருப்பதால் உடல்
ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள்
தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த
லாபங்களை பெற்று விட முடியும். தூர பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள
முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும்
எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் கல்வியில்
சிறப்புடன் செயல்படுவார்கள். சிவ வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 28, 1, 2.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை
தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 4-ல் குரு
சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களால் நெருக்கடி, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும்.
நீங்கள் எதிலும் அவசரபடாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன்
இருந்தால் தான் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு
பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பதும்,
பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம்
தேவை. கொடுத்த கடன்களை திரும்ப கேட்டால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில்
கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள்
ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள்
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன்
மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும்
கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.
சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 2.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும்
மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 4-ல் சுக்கிரன் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான
பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம்
ஏற்படாது. கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில்
அனுகூலப் பலன் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம், செய்பவர்களுக்கு
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச்
செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண்
விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால்
உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதும் வண்டி வாகனங்களில் செல்கின்ற போது
கவனமாக இருப்பதும் உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட
முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். தூர பயணங்களை தவிர்ப்பதன்
மூலம் வீண் அலைச்சலை குறைக்கலாம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.
குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 27.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும்
கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதால் சகல
விதத்திலும் மேன்மை, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டு. குடும்பத்தில்
சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும்.
செவ்வாய் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தாராள
தனவரவுகளால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில்
சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. அசையும் அசையா சொத்துக்கள்
வாங்கும் முயற்சியில் சிறு தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு
ஓரளவு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் அதிகரித்தாலும் எதையும்
சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை
அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடனிருப்பவர்களை
அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது
உத்தமம். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். முருக
வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 28, 1.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக
ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார
ரீதியாக நெருக்கடி, நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும் என்றாலும் உங்கள் ராசியதிபதி
செவ்வாய் 6-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் எதையும் சமாளிக்ககூடிய
ஆற்றலை அடைவீர்கள். குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில்
நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில்
ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும்.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலனைப் பெற
முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன்
இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால்
அலைச்சல் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத்
தவிர்க்கவும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று அதிக
கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும், சனி பகவான் வழிபாடும் மேற்கொண்டால் சிறப்பான
பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 2.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம்
1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும்,
தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால்
எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உங்களுக்கு உண்டு. குடும்பத்தில்
சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 12-ல்
இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான
முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து
செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுதால் மகிழ்ச்சி நிலவும். கடன்கள்
யாவும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி
செய்யும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும்.
கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பணம் கொடுக்கல்-
வாங்கல் சரளமாக நடைபெறும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள்
பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில்
எதிர்பார்க்கும் சில உதவிகள் தடையின்றி கிட்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.
சனிப்ரீதியாக விநாயகர் வழிபாடும் ஆஞ்சநேயர் வழிபாடும் செய்து வந்தால் செல்வ நிலை உயரும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 28, 1, 2.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும்
அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, குரு
பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும்
2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது மற்றவர்கள்
விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள்
உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால்
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்
அனுகூலம் உண்டாகும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும்
அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான
நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே காணப்படும் என்றாலும் லாபங்கள்
தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு
உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். முன்கோபத்தை குறைப்பது,
உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு தேவையற்ற பொழுது போக்குகளால்
கல்வியில் நாட்டம் குறையும். சிவ ஸ்தலங்களுக்கு செல்வது முருக வழிபாடு செய்வது மிகவும்
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 27.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள்
சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும்
கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 3-ல் செவ்வாய்
சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே
உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப
காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்-- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள்
ஏற்படலாம். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது
நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின்
தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். புத்திரர்களால்
அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு
லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த
முடியும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள்
வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம்.
மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியிலும் ஆதாயங்கள்
கிட்டும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28, 1.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி,
ரேவதி.
மற்றவர்களின் சுக துக்கங்களையும்
தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய்
12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும்.
உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய
நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் சற்று
ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குரு 9-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்
பெற்று தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும்
அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை
ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை
அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம்
அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும்
பணியில் கௌரவமான நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால்
எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும். முருக வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் முன்னேற்றங்கள்
ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள் - 28, 1, 2.
சந்திராஷ்டமம் - 23-02-2019 பகல் 11.27 மணி முதல் 25-02-2019 மாலை 04.42 மணி வரை.
No comments:
Post a Comment