Friday, December 7, 2018

வார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை


வார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை 
கார்த்திகை 23 முதல் 29 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






செவ்
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது 

சனி சந்தி
சூரிய குரு புதன்
  சுக்கி


கிரக மாற்றம்  இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு                  08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.
மகரம்                                10-12-2018 மாலை 05.20 மணி முதல் 13-12-2018 காலை 06.17 மணி வரை.
கும்பம்               13-12-2018 காலை 06.17 மணி முதல் 15-12-2018 மாலை 06.45 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
09.12.2018 கார்த்திகை 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

12.12.2018 கார்த்திகை 26 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

13.12.2018 கார்த்திகை 27 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

14.12.2018 கார்த்திகை 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி, லாப ஸ்தானத்தில் ராசியதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சுக்கிரன் 7-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஓற்றுமை, மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய அமைப்பு இவ்வாரத்தில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். குரு, சூரியன் சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        11, 12, 13, 14, 15.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் 3-ல் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். அம்மன் வழிபாடும், சனிபகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        13, 14, 15.
சந்திராஷ்டமம் - 08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சனி சஞ்சரிப்பதால் முடிந்த வரை உடன் இருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        9, 10.
சந்திராஷ்டமம் -  10-12-2018 மாலை 05.20 மணி முதல் 13-12-2018 காலை 06.17 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். ஜென்ம ராசியில் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், வாகனத்தில் செல்கின்ற போது நிதானத்துடன் செல்வதும் நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடமும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        9, 10, 11, 12.
சந்திராஷ்டமம் -  13-12-2018 காலை 06.17 மணி முதல் 15-12-2018 மாலை 06.45 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும் என்றாலும் 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும், சிக்கனத்தை கடைபிடிப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சிவ பெருமானையும், முருக கடவுளையும் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        11, 12, 13,             14, 15.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவால் உங்களது கடந்த கால பிரச்சினைகள் குறையும் அமைப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        13, 14, 15.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் ஜென்ம ராசியில் சாதகமாக சஞ்சரிப்பதும் 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதும் உங்களுக்கு வலமான பலன்களை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -        9, 10.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், குரு சஞ்சரிப்பதாலும் 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி எந்த வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        11, 12.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவுகளில் இருந்த தேக்கங்கள் நீங்கி சரளமான நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு ஏழரைச் சனி நடப்பதாலும் 12-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதாலும் பணவிஷயத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        9, 10, 13, 14, 15.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவதன் மூலம் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்படுவார்கள். விநாயகர் வழிபாடு செய்து வந்தால் காரிய தடை விலகும்.
வெற்றி தரும் நாட்கள் -        11, 12.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 10-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வதால் அவர்களால் நற்பலன்களை பெற முடியும். பொன், பொருள் சேர்க்கை அமையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        9, 10, 13, 14, 15.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பகவான் சூரியன், புதனுடன் 9-ல் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பது மட்டுமின்றி தடைப்பட்ட சுபகாரியங்களும் எளிதில் கைகூடும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிறப்பான பண வரவால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        9, 10, 11, 12.

No comments: