Friday, December 21, 2018

வார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை


வார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை 
மார்கழி 8 முதல் 14  வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





சந்தி
செவ்
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது 

சனி சூரிய
குரு புதன்
சுக்கி


கிரக மாற்றம் 
23-12-2018 மீனத்தில்  செவ்வாய் பகல் 12.57 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மிதுனம்            22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.
கடகம்                24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.
சிம்மம்               26-12-2018 மதியம் 01.41 மணி முதல் 28-12-2018 மதியம் 03.48 மணி வரை.
கன்னி                28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.16 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
27.12.2018 மார்கழி 12 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ராசியதிபதி செவ்வாய் 12-லும் குரு 8-லும் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் நிலவும் நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து லாபகரமான பலன்கள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். அதிக முதலீடு கொண்ட செயல்களை செய்யாமல் இருப்பதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கும். மாணவர்களின் படிப்பில் இருந்த மந்தநிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  23, 24, 28, 29.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பதாலும் வரும் 23-ஆம் தேதி முதல் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக அமைந்து உங்களது பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சிறப்பான லாபம் கிட்டும். தாராள தனவரவால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். சிவ வழிபாடு, சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்           24, 25, 26.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் குரு 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டானாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே திறம்பட செயல்பட முடியும். தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும் வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        23, 24, 27, 28.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
நல்ல கற்பனை திறனும், ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய சிறப்பான வாரமாக இவ்வாரம் இருக்கும். இதுவரை 8-ல் சஞ்சரித்த செவ்வாய் வரும் 23-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த சிறு சிறு பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் நன்றாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சற்று கடின முயற்சி மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 26, 29.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 5-ல் சஞ்சரிப்பதாலும் வரும் 23-ஆம் தேதி முதல் அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பதும் நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது. உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்குப்பின் கிட்டும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. அம்மன் வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -        23, 24, 26, 27.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு ஓரளவு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        23, 24, 25, 29.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் குரு 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். பணவரவுக்கு பஞ்சமில்லாமல் உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்--- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப்பெறும். உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாகவும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடந்த கால தேக்கங்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வரும் 23-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் எல்லாம் முழுமையாக மறையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 26, 27, 28.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளகூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைக்கலாம். திருமண சுப காரியங்களில் சற்று தாமதநிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் அவர்கள் மூலம் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளை தவிர்ப்பது சிறப்பு. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        27, 28, 29,
சந்திராஷ்டமம் -         22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சரளமான பணவரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்ணைப் பெற முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபாடு செய்தால் நற்பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -        23, 28, 29.
சந்திராஷ்டமம் -         24-12-2018 மதியம் 01.01 மணி முதல் 26-12-2018 மதியம் 01.41 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் குரு, புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் படிப்பில் முழு ஈடுபாடு செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சிவ வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        23, 24, 25.
சந்திராஷ்டமம் -         26-12-2018 மதியம் 01.41 மணி முதல் 28-12-2018 மதியம் 03.48 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 26, 27.
சந்திராஷ்டமம் -         28-12-2018 மதியம் 03.48 மணி முதல் 30-12-2018 இரவு 08.16 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு, புதன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் சிறப்பான பணவரவு, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் இவ்வாரத்தில் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கூட எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறலாம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். மகாலட்சுமி வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -        26, 27, 28, 29.



No comments: