Wednesday, April 18, 2018

வார ராசிப்பலன் - ஏப்ரல் 22 முதல் 28 வரை



வார ராசிப்பலன் - ஏப்ரல்  22 முதல் 28 வரை 
சித்திரை 9 முதல் 15 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

புதன்
சூரிய
சுக்கி
சந்தி
               
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது

செவ்
சனி(வ)
 

குரு(வ)               



கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மிதுனம்            20-04-2018 காலை 10.04 மணி முதல் 22-04-2018 மதியம் 12.39 மணி வரை.
கடகம்                22-04-2018 மதியம் 12.39 மணி முதல் 24-04-2018 மாலை 04.00 மணி வரை.
சிம்மம்               24-04-2018 மாலை 04.00 மணி முதல் 26-04-2018 இரவு 08.20 மணி வரை.
கன்னி                26-04-2018 இரவு 08.20 மணி முதல் 29-04-2018 அதிகாலை 01.58 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
22.04.2018 சித்திரை 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

25.04.2018 சித்திரை 12 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

27.04.2018 சித்திரை 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 06.45 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் சுபிட்சமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்றே குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகலாம். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் டென்ஷன்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். அம்மன் வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது நன்மையை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 27, 28.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். உடல் ஆரோக்கியமும் அவ்வளவு சிறப்பாக அமையாது. அன்றாட பணிகளை செய்த முடிப்பதில் மந்தநிலை உண்டாகும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் உயர்வடைய அதிக முயற்சி தேவை. முருக வழிபாடு சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 24.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே ராசியதிபதி புதன் 10-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பாகும். உங்கள் பெயர் புகழ் மேலோங்க கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உடல் ஆரோக்கித்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டா-கும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 25, 26.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வளமான பலனை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பல நல்ல வாய்ப்புகள் அமையும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சக்தி வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 24, 27, 28.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை அடையும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்ற விட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும், பொழுது போக்குகளையும் தவிர்த்து விடுவது உத்தமம். விஷ்ணு பகவானை  வழிபாடு செய்வது, விஷ்ணு சகஸ்கர நாமத்தை ஜெபிப்பது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        22, 25, 26.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு தான் கற்றறிந்து இருந்தாலும் எந்தவித அகம்பாவமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், சனி, அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருக்க வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறுசிறு மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். முருக வழிபாடு மற்றும் சிவ வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 24, 27, 28.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் பண்பு கொண்டவராகவும் விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது உத்தமம். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். மஹா லட்சுமி வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 25, 26.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள பணவரவுகள் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கடந்த கால தடைகள் விலகி நன்மைகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி எள் தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 26, 27, 28.

சந்திராஷ்டமம் -         20-04-2018 காலை 10.04 மணி முதல் 22-04-2018 மதியம் 12.39 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. குரு வக்ர கதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனமாக இருந்தால் தான் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வகையில் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய சிறுசிறு வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் அமையும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலையே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறைவாகவே இருக்கும். முருக வழிபாடு அம்மன் வழிபாடு தொடர்ந்து செய்து வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        27, 28.

சந்திராஷ்டமம் -         22-04-2018 மதியம் 12.39 மணி முதல் 24-04-2018 மாலை 04.00 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றலை பெறுவீர்கள். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் லாபம் குறையாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் பெற அதிக முயற்சி தேவை. சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23.

சந்திராஷ்டமம் -         24-04-2018 மாலை 04.00 மணி முதல் 26-04-2018 இரவு 08.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, செவ்வாயுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது 3-ல் சூரியன் சஞ்சரிப்பது தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.  உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்டியாக குறையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        23, 24, 25, 26

சந்திராஷ்டமம் -         26-04-2018 இரவு 08.20 மணி முதல் 29-04-2018 அதிகாலை 01.58 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் 11-ல் கேது சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். குரு வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல வரன்கள் அமையும். கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய சிறுசிறு வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் அமையும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலையே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடு மற்றும் துர்கையம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -        24, 25, 26, 27, 28.


No comments: