Monday, February 26, 2018

மார்ச் மாத ராசிப்பலன் 2018


மார்ச் மாத ராசிப்பலன் 2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





சுக்கி   சூரிய புதன்
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது

சனி
  செவ்
குரு 


கிரக மாற்றம்
2-3-2018               மீனத்தில் சுக்கிரன்
3-3-2018               மீனத்தில் புதன்
7-3-2018               தனுசில் செவ்வாய்
9-3-2018               குரு () ஆரம்பம்
14-3-2018             மீனத்தில் சூரியன்
23-3-2018             புதன் () ஆரம்பம்
26-3-2018             மேஷத்தில் சுக்கிரன்

மேஷம்  அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் இம்மாதம் முற்பாதியில் மாத கோளான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் படிப்படியாக விலகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும் என்றாலும் உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன் அனுகூலமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். பெரிய மனிதர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள்.

பரிகாரம் - செவ்வாய் கிழமை விரதமிருந்து ஆறுமுக கடவுளான முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது. மேலும் சஷ்டி விரதம் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம்j          -- 07-03-2018 மாலை 04.07 மணி முதல் 10-03-2018 அதிகாலை 03.23 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு இம்மாதம் 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதாலும் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் ராசிக்கு செவ்வாய் சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதன் மூலமும் உற்றார் உறவிர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலமும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம், உடல் நிலையிலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம் - சனிக்கிழமை சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனியின் அருள் கிடைக்கப் பெற்று கஷ்டங்கள் குறையும். மேலும் முருக வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்           -- 10-03-2018 அதிகாலை 03.23 மணி முதல் 12-03-2018 மாலை 04.16 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் குருவும் 2-ஆம் தேதி முதல் 10-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். வீட்டுதேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் ராசிக்கு வரும் 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ல் சனியுடன் இணைந்து சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம்.

பரிகாரம் - துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் மங்களம் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்           -- 12-03-2018 மாலை 04.16 மணி முதல் 15-03-2018 அதிகாலை 04.13 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதாலும் இம்மாதம் 7-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதாலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்த உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.

பரிகாரம் - புதன்கிழமைகளில் அருகில் உள்ள விஷ்ணு கோவிலுக்கு சென்று மஹா விஷ்ணுவையும் லட்சுமி தேவியையும் வழிபட்டு வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும்.

சந்திராஷ்டமம்           -- 15-03-2018 அதிகாலை 04.13 மணி முதல் 17-03-2018 மதியம் 01.36 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் இம்மாதம் 7,8-ல் சஞ்சரிப்பதாலும் 3-ல் குரு சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய காலமாகும். இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக உஷ்ண பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். எதிர்பாராமல் கிடைக்கும் உதவியால் கடன்கள் ஓரளவு குறையும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாககூடும். செய்யும் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நெருங்கியவர்கள் மற்றும் உடனிருப்பவர்களால் பகை ஏற்படக்கூடும் என்பதால் எந்த விஷயத்திலும் கவனமாக இருப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் - வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி தீபம் ஏற்றி வழிபட்டால் குருவின் அருள் பார்வை பரிபூரணமாக கிட்டும். முருக வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்           -- 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் இம்மாதம் முற்பாதியில் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 2-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் வழியிலும் லாபம் கிட்டும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உண்டாகும். திருமணம் சம்பந்தமான  பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப்பெறும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலை பெறுவார்கள். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம் - சனிக்கிழமை சனி பகவானை வழிபாடு செய்வதும் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

சந்திராஷ்டமம்           -- 19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை 12.52 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதும், 7-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய், 14-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் மிகச் சிறப்பான அமைப்பாகும். சிக்கல்கள் குறைந்து முன்னேற்றங்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும்.  புதிய வீடு மனை வாங்கும் யோகம் கிட்டும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் வழியிலும் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறலாம். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் சில எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் - குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதாலும், விநாயகர் வழிபாடு செய்வதாலும் வாழ்வில் ஏற்படும் தொல்லைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           -- 22-03-2018 அதிகாலை 12.52 மணி முதல் 24-03-2018 அதிகாலை 04.21 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு சமயசந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. மற்றவர்களிடம் நிதானமாக செயல்படுவதன் மூலம் எதையும் எதிர்கொள்ளும் பலமும் வளமும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் சில காலம் தள்ளி வைப்பது நல்லது. பணவரவு சுமாராக இருந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம்.

பரிகாரம் - சிவாலயங்களுக்குச் சென்று சிவனுக்கு வில்வ இலைக் கொண்டு அர்ச்சனை அபிஷேகம் செய்வதாலும் முருக கடவுளை வழிபாடு செய்வதாலும் வாழ்வில் சிறப்பான பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம்           -- 24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடையலாம். ஜென்ம ராசியில் சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும்.

பரிகாரம் - நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு செண்பக மலரால் அர்ச்சனை செய்வதாலும், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்வதாலும் நற்பலன்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்           --  26-03-2018 காலை 07.17 மணி முதல் 28-03-2018 காலை 10.02 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாயும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியனும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றாலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திடீர் பணவரவு உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். பொன் பொருள் சேரும். புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறைவதால் அபிவிருத்தி பெருகி சிறப்பான லாபங்கள் உண்டாகும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில்  ஈடுபாட்டுடன் செல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.

பரிகாரம் - சிவ வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்           -- 01-03-2018 அதிகாலை 01.45 மணி முதல் 03-03-2018 அதிகாலை 03.49 மணி வரை மற்றும் 28-03-2018 காலை 10.02 மணி முதல் 30-03-2018 மதியம் 01.13 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் இம்மாதம் 7-ஆம் தேதி முதல் 11-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதாலும் 11-ல் சனி சஞ்சரிப்பதாலும் வெற்றி மேல் வெற்றி உண்டாககூடிய உன்னதமான மாதமாகும். தாராள தனவரவு ஏற்பட்டு குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். தொழில் ரீதியான நவீனகரமான பொருட்களை வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் - சிவ வழிபாடு செய்வதாலும், விநாயகர் வழிபாடு செய்வதாலும் வாழ்வில் உள்ள தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்           -- 03-03-2018 அதிகாலை 03.49 மணி முதல் 05-03-2018 காலை 08.13 மணி வரை மற்றும் 30-03-2018 மதியம் 01.13 மணி முதல் 01-04-2018 மாலை 05.52 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு 8-லும், 12-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடியால் மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் இம்மாதம் 7-ஆம் தேதி முதல் 10-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து சென்றால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேலதிகாரிகளால் கெடுபிடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். சிலருக்கு வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் அனுகூலமான பலனை அடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்ப்பது உத்தமம்.

பரிகாரம் - குருப்ரீதி தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது, சிவ வழிபாடு செய்வது மேலும் பிரதோஷ விரதங்கள் மேற்கொள்வது நன்மையை கொடுக்கும்.

சந்திராஷ்டமம்           -- 05-03-2018 காலை 08.13 மணி முதல் 07-03-2018 மாலை 04.07 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

04.03.2018 மாசி 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

14.03.2018 மாசி 30 ஆம் தேதி புதன்கிழமை துவாதசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 09.45 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

15.03.2018 பங்குனி 01 ஆம் தேதி வியாழக்கிழமை திரியோதசி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

19.03.2018 பங்குனி 05 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியை திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

26.03.2018 பங்குனி 12 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

30.03.2018 பங்குனி 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை


No comments: