Friday, June 24, 2016

வார ராசிப்பலன் ஜீன் 26 முதல் ஜீலை 2 வரை 2016




வார ராசிப்பலன் ஜீன்   26 முதல்  ஜீலை 2   வரை   2016
ஆனி 12 முதல் 18 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை&600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


புதன் 
சூரிய சுக்கி
கேது 
கிரக   மாற்றம்
27.06.2016 மிதுனம் புதன்
29.06.2016 செவ்வாய் வக்ர நிவர்த்தி





ராகு குரு 

சனி ()
செவ்()

                               
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கும்பம்                             24.06.2016 இரவு 09.24 மணி முதல் 27.06.2016 அதிகாலை 02.22 மணி வரை.
மீனம்                                                27.06.2016 அதிகாலை 02.22 மணி முதல்29.06.2016 காலை 05.38 மணி வரை.
மேஷம்                           29.06.2016 காலை 05.38 மணி முதல் 01.07.2016 காலை 07.29 மணி வரை.
ரிஷபம்                            01.07.2016 காலை 07.29 மணி முதல் 03.07.2016 பகல்  08.59 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
எதையும் வெளிப்படையாக பேசும் குணமும், சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் 5ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை உயரும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

வெற்றிதரும் நாட்கள்       26,29,30

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
எப்பொழுதும் மற்றவர்களுக்காக செயல்படும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 27ம் தேதி முதல் 2ல் புதன் 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் தொழில் வியாபாரம் ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். சில நேரங்களில் போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் எதையும் எளிதில் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் சிறுசிறு அலைச்சலை சந்தித்தாலும் அதன் மூலம் அனுகூலம் உண்டாகும். சனி 7ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண்வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. முருகப் பெருமானை வழிபடவும்

வெற்றிதரும் நாட்கள் 26,27,28,1,2.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
பார்வைக்கு வெகுளிப் போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் ராகு 6ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறும் ஆற்றல் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகளும் சேரும். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கடன்களும் நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்  27,28,29,30.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல அறிவாற்றலும், கற்பனைத்திறனும் எதிலும் சிந்தித்து செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 12ல் சூரியன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். தேவையற்ற விரயங்களை எதிர்கொள்வீர்கள். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்த செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்  29,30,1,2.

சந்திராஷ்டமம்      24.06.2016 இரவு 09.24 மணி முதல் 27.06.2016 அதிகாலை 02.22 மணி வரை.
.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன் சுக்கிரன் 27ம் தேதி முதல் 11ல் புதன் 3ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு  என்பதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்

வெற்றிதரும் நாட்கள்     26,1,2.

சந்திராஷ்டமம்        27.06.2016 அதிகாலை 02.22 மணி முதல்29.06.2016 காலை 05.38 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அழகிய உடல்வாகும், நீலவிழியும் சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி நேயர்களே 3ல் சனி 10ல் சூரியன் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு  என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார மேம்பாடுகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 26,27,28.

சந்திராஷ்டமம்        29.06.2016 காலை 05.38 மணி முதல் 01.07.2016 காலை 07.29 மணி வரை.


துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய அழகும், கட்டான உடலும் கொண்ட துலா ராசி நேயர்களே 11ல் குரு ராகு, 9ல் சூரியன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது மனநிம்மதியைத் தரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதும் பிறர் விஷயங்களில் தலையூடு செய்யாதிருப்பதும் உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 27,28,29,30.
சந்திராஷ்டமம்        01.07.2016 காலை 07.29 மணி முதல் 03.07.2016 பகல்  08.59 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மன நிலை அறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே 8ல் சூரியன் சுக்கிரன் 10ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று வேகத்தை சற்று குறைக்கவும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை சந்திப்பூர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களையும் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளாலும் வீண் பிரச்சினைகள் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

வெற்றிதரும் நாட்கள் 29,30,1,2.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி நேயர்களே 7ல் சூரியன் சஞ்சரிப்பதும் ஏழரை சனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3ல் கேது 9ல் குரு சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை உண்டாக்கும். பொருளாதார நிலையிலும் ஏற்ற இறக்கமான நிலை நிலவும் என்றாலும் எதிர் பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

வெற்றிதரும் நாட்கள்     26,1,2.
மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எதிலும் போராடி வெற்றி பெறக் கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி நேயர்களே 6ல் சூரியன் 11ல் சனி சஞ்சாரம் செய்யவிருப்பதும் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு  என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்ற கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     27,28.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்து வைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்பராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 5ல் சுக்கிரன் 7ல் குரு 27ம் தேதி முதல் 5ல் புதன் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் காரியங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கணவன் மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் எதிர்பாராத உதவிகளை பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். வேலை பளுவும் குறைவாகவே இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை பெற்றுவிட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     26,29,30.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவி கரமாக திகழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மீன ராசி நேயர்களே 4ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6ல் ராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை ஒரளவுக்கு நிறைவேற்ற முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை  வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமலிருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப் பளு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமான  நிலையில் நடைபெற்றாலும் லாபம் கிட்டும். முருகப் பெருமானை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள்     27,28,1,2.


No comments: