Saturday, April 23, 2016

வார ராசிப்பலன் ஏப்ரல் 24 முதல் 30 வரை 2016



காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )

வார ராசிப்பலன்  ஏப்ரல்  24  முதல் 30  வரை  2016

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com




இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

25.04.2016 சித்திரை 12 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியை திதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுனம் இலக்கினம். தேய்பிறை.

29.04.2016 சித்திரை 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை.

மேஷம்  அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
தைரியமும் அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் சூரியன் 8ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்ற கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவல செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். இந்த வாரம் சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 29,30
சந்திராஷ்டமம் 24.04.2016 காலை 06.24 மணி முதல் 26.04.2016 மாலை 05.53 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழிகளாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 12ல் சூரியன் புதன் 25ம் தேதி முதல் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த வாரம் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 24,25,26.
சந்திராஷ்டமம் 26.04.2016 மாலை 05.53 மணி முதல் 29.04.2016 அதிகாலை 03.16 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
தன்னுடைய  ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன் புதன் 25ம் தேதி முதல் சுக்கிரன் 11ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 24,25,26,27,28.
சந்திராஷ்டமம் 29.04.2016 அதிகாலை 03.16 மணி முதல் 01.05.2016 காலை 09.41மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன் புதன் 25ம் தேதி முதல் சுக்கிரன்  10ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். துர்கைஅம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 27,28,29,30.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன் புதன் 25ம் தேதி முதல் 9ல் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.  அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்க்கொள்வீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.  கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 29,30.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும், 8ல் சூரியன் 25ம் தேதி முதல் 8ல் சுக்கிரன்  சஞ்சாரம் செய்வதால் எதிலும் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைக்கலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களின்றி சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். முருகப்பொருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 24,25,26.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 7ல் புதன் 25ம் தேதி முதல் சுக்கிரன் 7ல்  சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வீடு மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதையும் சிறப்புடன் செய்து பாராட்டுதல்களை பெற முடியும். சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 27,28

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன்  சஞ்சாரம் செய்வதால் எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை  அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்து நல்லது. தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பெருகும். முருகப் பெருமானை வழிபாடு செய்யவும்.

வெற்றிதரும் நாட்கள் 24,25,26,29,30.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 5ல் புதன், 25ம் தேதி முதல் 5ல்  சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்கள் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். கேது 3ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள். சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 27,28.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் புதன் 11ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் 25ம் தேதி முதல் 4ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர் பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கனைப் பெற முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 24,25,26,29,30. 

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகினாலும் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத குணம் கொண்ட கும்ப ராசி நேயர்களே 3ல் சூரியன் 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் உடல் நிலை ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக அமைவார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 24,25,26,27,28.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடித்து பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட மீன  ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் புதன் 25ம் தேதி முதல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் செற்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளும் சாதகமாக அமைவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 27,28,29,30.

No comments: