Thursday, April 28, 2016

மே மாத ராசிப்பலன் -சுபமூகூர்த்தம். 2016

 மாபெரும் வெற்றி - 16 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

2011 ஜுலையில் தொடங்கிய எனது வலை பக்கத்தில் ஜோதிட செய்திகளை மட்டும் வெளியிட்டு வருகிறேன்.தற்போது 1000 பதிவுகளை அளித்துள்ளேன். எனது வலை பக்கத்திற்கு தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 16 லட்சத்திற்கும் மேலான அன்பு வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். எனது பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மேலும் பல சோதிட செய்திகளை தர காத்திருக்கிறேன். ஆதலால் எனது வலை பக்கத்திற்கு தொடர்ந்து வருகை தரத் தவறாதீர்கள்.

                                                                       

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற  நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


மே மாத ராசிப்பலன் -சுபமூகூர்த்தம். 2016




மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசியில் சூரியன் 8ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயங்களிலும் பூர்வீக சொத்துக்களாலும் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து  நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
பரிகாரம். விநாயகரை வழிபடுவது, சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, பரிகாரங்களை செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 21.05.2016 மதியம் 12.30 மணி முதல் 23.05.2016 இரவு 11.36 மணி வரை.




ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7&ல் சனி செவ்வாயும்,   விரய ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் போட்டி பெறாமைகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து சென்றால்  சற்று நிம்மதியுடன் பணி புரிய முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது, சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 23.05.2016 இரவு 11.36 மணி முதல் 26.05.2016 காலை 08.52 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் சனி செவ்வாயும் 11ல் சுக்கிரன் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் இது வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். கடன்கள் சற்று குறையும்.
பரிகாரம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 26.05.2016 காலை 08.52 மணி முதல் 28.05.2016 மாலை 04.00 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 18ம் தேதி குரு வக்ர நிவர்த்தியடைவதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க பெறும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். 
பரிகாரம். சர்ப கிரகங்களான ராகு கேதுவுக்கு பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 01.05.2016 காலை 09.41மணி மணி முதல் 03.05.2016 மதியம் 12.49 வரை.
மற்றும் 28.05.2016 மாலை 04.00 மணி முதல் 30.05.2016 இரவு 08.34 மணி வரை.

சிம்மம்;  மகம், பூரம், உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு   மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், ஜென்ம ராசிக்கு 4&ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சுமாரான அமைப்பாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை குறைத்து கொள்ள முடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு அனுகூலமளிக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சற்றே உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். 
பரிகாரம். சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 03.05.2016 மதியம் 12.49 மணி முதல் 05.05.2016 பகல் 01.17 மணி வரை.
மற்றும் 30.05.2016 இரவு 08.34 மணி முதல் 01.06.2016 இரவு 10.37  மணி வரை.

கன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம  ராசிக்கு 8ல் சூரியன் சுக்கிரன் 12ல் குரு ராகு சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் சுமாராக தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் உண்டாகும். சிலருக்கு வீடு வாகனம், போன்றவற்றால் வீண் விரயம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. 
சந்திராஷ்டமம் 05.05.2016 பகல் 01.17 மணி முதல் 07.05.2016 மதியம் 12.41 மணி வரை.

துலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 
2ல் சனி செவ்வாய், 7ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் குரு ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்றாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மன நிம்மதியளிக்கும்.தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும்.
பரிகாரம். சனி பகவானை வழிபடுவது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 07.05.2016 மதியம் 12.41 மணி முதல் 09.05.2016 மதியம் 01.04 மணி வரை




விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு   ஏழரை சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6&ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து முன்னேற்றமடைவீர்கள். உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் தான் வெற்றி கிட்டும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான லாபம் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். 
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 09.05.2016 மதியம் 01.04 மணி முதல் 11.05.2016 மதியம் 04.25 மணி வரை 

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  9ல் குரு 3ல் கேது சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
பரிகாரம். தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 11.05.2016 மதியம் 04.25 மணி முதல் 13.05.2016 இரவு 11.57 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட உங்களுக்கு  சுக ஸ்தானமான 4ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு  என்றாலும் 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 13.05.2016 இரவு 11.57 மணி முதல் 16.05.2016 பகல் 11.06 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7ல் வக்ரகதியில் சஞ்சரிக்கும் குரு 18ம் தேதி முதல் நிவர்த்தியடைவதும் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார  நிலை தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் வியாபார ரிதியாக மேற்கொள்ளும் பயணங்களால்  அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். 
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 16.05.2016 பகல் 11.06 மணி முதல் 18.05.2016 இரவு 11.58 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு 6ல் ராகு சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் 3ல் சூரியன்  சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல் பட்டால் லாபத்தினைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்கு பின் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். 
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 18.05.2016 இரவு 11.58 மணி முதல் 21.05.2016 மதியம் 12.30 மணி வரை.

சுபமூகூர்த்தம்.
02.05.2016 சித்திரை 19ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுனம் இலக்கினம். தேய்பிறை.

04.05.2016 சித்திரை 21ஆம் தேதி புதன்கிழமை துவாதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை.

05.05.2016 சித்திரை 22ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை.


08.05.2016 சித்திரை 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துதியைதிதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

09.05.2016 சித்திரை 26ஆம் தேதி திங்கட்கிழமை திருதியைதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

11.05.2016 சித்திரை 28ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமிதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

12.05.2016 சித்திரை 29ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டிதிதி பூச நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். 

16.05.2016 வைகாசி 03ஆம் தேதி திங்கட்கிழமை தசமிதிதி உத்திர நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

19.05.2016 வைகாசி 06ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

26.05.2016 வைகாசி 13ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை.

No comments: